என் மலர்
நீங்கள் தேடியது "Identity"
- இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்ததாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
- தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய் மகளை கொலை செய்து 60 தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். பேரன் மூவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஐ.ஜி. துரை சம்பவம் நடந்த நாளிலிருந்து தேவகோட்டை பகுதிகளில் முகாமிட்டு அவரது மேற்பார்வையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து சட்ட ஒழுங்கு குழு தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ், காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனி படை பிரிவினர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்து. தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
- நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- மதுரையின் புதிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திகழ்கிறது.
- ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.
மதுரை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா–நிதி நினைவாக மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து மு.க.ஸ்டா–லின் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மதுரை நத்தம் சாலையில் ரூ.120.75 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற் போது ரூ.134 கோடியில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
கலைஞர் நூலகம் கீழ் தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டி–டமாக 2 லட்சத்து 13 ஆயி–ரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நூலகத் தின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடம், நாளிதழ் கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவும், தரைத்த–ளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் கலைஞ–ரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதை–கள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்த–கங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறு–கிறது.அத்துடன் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் கள் பிரிவு உள்ளது.
இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், 3-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளது. 4-வது தளத்தில் போட்டித் தேர்வுகள் தொடர்பான நூல்கள் இடம் பெறுகின்றன. 5-ம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூல–கம், ஒளி, ஒலி தொகுப்பு–கள் காட்சியகப்பிரிவு, பார்வை–யற்றோருக்கான மின் நூல் ஒலி நூல் ஸ்டுடியோ உள் ளது.
6-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட் டுள்ளது. தற்போது அனைத்து தளங்களிலும் பணிகள் நிறைவடைந்து நூலகத்துறையிடம் ஒப்ப–டைக்கப்பட்டு உள்ளது.
மின் விளக்குகள், குளி–ரூட்டப்பட்ட அறைகள், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள் ளன. கட்டிடத்தின் நடுப்பகு–தியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடி பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள் ளது. அலங்கார வடிவமைப் புடன், இண்டீரியர் டெகரே–ஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது.
வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் கலை–ஞரின் உருவச்சிலை அமைக் கும் பணி, மாடித் தோட்டத் துடன் நூல்களை படிப்பதற் கான வசதியும், கலைக்கூ–டமும் அமைக்கப்பட்டுள் ளது. நூலகத்தில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது 3.50 லட்சம் புத்தகங்கள் அடுக்கும் பணிகளும்ந நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மாதங்களாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்து விட் டது.
இந்த கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிய–ளவில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைக்கிறார்.
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருப்ப–ரங் குன்றம், பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் கள், காந்தி மியூசியம், தெப் பக்குளம், திருமலை நாயக் கர் மகால் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் மதுரைக்கு பெருமைமிக்க அடையாளங்களாக விளங் குகிறது.
இதற்கெல்லாம் முத் தாய்ப்பாக தமிழகத்தில் சென்னை அண்ணா நூல–கத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய நூலகமாக மது–ரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் அடையாளங்க–ளில் ஒன்றாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல–கம் அமையும் என்பதில் ஐயமில்லை.
- சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.
திருப்பூர்:
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
- அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காசா:
இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. கரம் ஷாலோம் எல்லை வாசலில் 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மீதமுள்ள 3 ராக்கெட்டுகள் வெறிச்சோடிய பகுதிகளில் விழுந்தன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 புதைகுழிகளில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள ஆஸ்ப த்திரியில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, இறந்த உறவினர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக காத்து நின்றனர்.
- இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
- திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் திரிஷா.
சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் திரிஷா தற்போது மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அகில்பால் - அனஸ்கான் என 2 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய புதிய படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசிய படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது 'ஐடென்டிட்டி' படத்தில் டோவினோ தாமஸ் - திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதில் திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இப்படத் தயாரிப்புகுழு இது தொடர்பாக திரிஷாவை பாராட்டி உள்ளது. இப்படத்தில் விரைவாக காட்சிகளில் நடித்து முடித்ததற்கு திரிஷாவுக்கு படக்குழு நன்றி தெரிவித்தது. மேலும் படத்தின் இயக்குனர் அகில் பால், "உங்களுடன் பணிபுரிவது இனிமை வாய்ந்த ஒரு அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.
வெளியே ஓடிவந்து பார்த்த போது , வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம். சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினாள்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.


முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.
- டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
- இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ஏ.ஆர்.எம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் நேற்று படக்குழு வெளியிட்டது. படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 24 மணி நேரத்தில் யூடியூபில் 10 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
- இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை ஜனவரி 2 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
- திரைப்படம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஒரு சம்பவத்தை நேரில் பார்த்த திரிஷா அந்த குற்றவாளியை கண்டு பிடிக்க காவல் அதிகாரிக்கு உதவுகிறார். டொவினோ தாமஸ் குற்றவாளிகளின் புகைப்படங்களை வரையும் ஒரு ஆர்டிஸ்டாக உள்ளார். யார் அந்த குற்றவாளி? அதற்கு பின்னணி என்ன? குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா? என்பதே படத்தின் மையமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் நடித்துள்ள திரைப்படம் ஐடென்டிட்டி.
- திரைப்படம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடித்துள்ள திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

திரைப்படம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 23.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டை தற்பொழுது வசூலித்துள்ளது. திரைப்படத்தின் பட்ஜெட் 15 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சம்பவத்தை நேரில் பார்த்த திரிஷா அந்த குற்றவாளியை கண்டு பிடிக்க காவல் அதிகாரிக்கு உதவுகிறார். டொவினோ தாமஸ் குற்றவாளிகளின் புகைப்படங்களை வரையும் ஒரு ஆர்டிஸ்டாக உள்ளார். யார் அந்த குற்றவாளி? அதற்கு பின்னணி என்ன? குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா? என்பதே படத்தின் மையமாக எடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்