என் மலர்
நீங்கள் தேடியது "Idli"
- போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
- இட்லி சாப்பிடும் போட்டியில் 60 பேர் பங்கேற்றனர்.
கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
இப்போட்டியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 50 வயது முதியவர் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை வாயின் உள்ளே திணித்துள்ளார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.
பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள்.
- திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் நிறைய ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பக்தர்களுக்கு ஏற்றதாக இங்குள்ள உணவுகள் இருப்பதில்லை காலை, பகல் என எப்போது சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக பக்தர்களை திருப்பதி மலையில் உள்ள வீட்டு இட்லி கடைகள் வெகுவாக கவர்ந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பாலாஜி காலனி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வீடுகளின் முன்பு இட்லி கடைகள் வைத்துள்ளனர். காலையில் இட்லி, தோசை, பூரி, வடை என சுடச்சுட கிடைக்கிறது.
தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள். ஒவ்வொரு கடைகள் முன்பும் 50-க்கும் மேற்பட்டோர் இட்லிக்காக காத்திருக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன. ருசியாகவும் இருக்கிறது. இந்த கடைகளை கோவில் அருகில் திறக்கவும் தேவஸ்தானம் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
- சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை துணி போட்டு வேகவைப்பதற்கு பதிலாக பாலிதீன் போட்டு அதன் மீது இட்லி மாவு ஊற்றி வேக வைக்கப்படுகிறது.
இதில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சுமார் 51 உணவக இட்லி மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
- குழந்தைகளுக்கு இட்லி பிடிக்காது.
- இட்லியை கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மினி இட்லி - பத்து
வெங்காயம் - ஒன்று
தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
இடித்த பூண்டு - இரண்டு பல்
எண்ணெய் - தேவையான அளவு
குடை மிளகாய் - ஒன்று
கபாப் ஸ்டிக் - இரண்டு
செய்முறை
குடைமிளகாய், வெங்காயத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று என்ற வரிசையில் ஒவ்வொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து வேக விடவும்.
ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான இட்லி கபாப் ரெடி.
- ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.
- 5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன.
சாயல்குடி :
விலைவாசி பெருமளவு உயர்ந்துள்ள நிலையில் குறைந்தவிலையில் உணவு என்பது சாத்தியமற்றமாக மாறி வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த தோசை கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையை ருசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன. யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என்பதில் போட்டி நிலவுகிறது. ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. சிறிய குடும்பத்திற்கு ரூ.25 போதும். காலை உணவை நிறைவு செய்யலாம்.
இதேபோன்று கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம், ரூ.5-க்கு சற்று பெரிய அளவில் உள்ள தோசைக்கு சாம்பார் மற்றும் தக்காளி, தேங்காய் என 2 வகை சட்னியுடன் விற்கப்படுகிறது.
மதுரை, சென்னை, திருச்சி கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ.10-க்கும், ஒரு தோசை ரூ.40-க்கும் மேலாக உணவகங்களில் விற்கும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் குறைந்த விலையில் இட்லி,தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கக் கூடும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும்.
- இட்லி உப்புமாவை செய்து கொடுங்க மிச்சமின்றி கடாய் காலியாகும்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 7
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
வேர்க்கடலை - சிறிதளவு
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வெஜிடபிள் இட்லி செய்து கொடுக்கலாம்.
- காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
புளிக்காத இட்லி மாவு - 2 கப்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்,
பீன்ஸ் - 50 கிராம்,
பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
வேகவைத்து மசித்த பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை
புளிக்காத இட்லி மாவில் கேரட், பீன்ஸ், கொத்தமல்லித்தழை, பீட்ரூட், மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து, கரைத்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் வெஜிடபிள் இட்லி ரெடி.
இந்த இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: கீரையைப் பொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.
- சாம்பார் இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீர்கள்.
- வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 2 கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
பரங்கிக்காய் - சிறிய துண்டு.
சின்ன வெங்காயம் - 12,
தக்காளி - 3,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
புளி - சிறிய உருண்டை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கொப்பரை - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, துவரம் பருப்பை குழைய வேக வையுங்கள்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள்.
அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை,
அரிசி - கால் கப்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 3,

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
மாவை புளிக்க விடக்கூடாது.
மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்

செய்முறை :
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
வேகவைத்த இட்லி - 7,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
இஞ்சி - சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.
இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.
இட்லி மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கட்டு,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,

செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.