என் மலர்
நீங்கள் தேடியது "India Alliance Party"
- தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார்.
- காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்திடுக! பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசை கண்டித்தும், ஐ.நா. சபையே போரை நிறுத்து எனக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுக்கா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
- புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.
கடலூர்:
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி `இந்தியா' கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று (18-ந்தேதி) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகள் அடைக்கப்படும். மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை ஓடாது என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் அருகில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததால் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை 6 மணிக்குள் புதுச்சேரி வழியாக சென்றன.
அதன் பிறகு இயக்கவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் விக்கிரவாண்டி வழியாக சென்றது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாரை அணுகிய நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.
அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள் . இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்ன கங்கணாங்குப்பம் வரை கடலூர் மாவட்ட போலீசாரும், அதன் பிறகு புதுச்சேரி மாநில போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
மேலும் சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்குவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து புதுச்சேரி மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்க ப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.
இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
- அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றச்சாட்டு.
- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவை தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜ் சோரோஸ் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்திய பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
- ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் பாராளுமன்ற மேல்சபையின் தலைவராக இருக்கிறார். அவருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே அவையில் மோதல் ஏற்படுகிறது. ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
சட்டப்பிரிவு 67(பி)ன்படி இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, இடதுாரி கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா? என்பது சந்தேகம்தான். பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதத்துடன் மேலும் ஒரு எம்.பி. ஆதரவு தேவை. அப்படி ஆதரவு இருந்தால்தான் மேல்சபை தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் சோனியா காந்தி- ஜார்ஜ் சோரோ விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 25 -ந்தேதி பாராளுமன்றம் கூடியது. அதில் இருந்து ஒருநாள் கூட அவை முழுமையாக நடைபெறவில்லை. கடும் அமளியில் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
- எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
- இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்ட மிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.
மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரைவார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மராட்டிய தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.
என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார்.
அதோடு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகிறார். இதனால் முக்கிய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச இயலவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்டு திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர்.
சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்ட ணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.
மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

அதுபோல இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா திறமையானவர். அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளது.
இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலை காரணமாக அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் சர்ச்சை மேலும் விரிவடைந்துள்ளது. ராகுலின் தனிச்சசையான முடிவு காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சரத்பவார், லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கருதுகிறார்கள்.
இது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்களையும் அந்த கட்சி அறிவித்து விட்டது. டெல்லி தேர்தலில் காங்கி ரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.
இதன் மூலம் இந்தியா கூட்டணியின் நோக்கம் சிதைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
ஆனால் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை விட்டுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகிறார்கள். தலைமை பதவியை விட்டுக் கொடுத்தால் சாதாரண கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று ராகுலும், கார்கேவும் கருதுவதாக தெரிய வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்குவதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள்.
மாநில சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் வெறும் 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் தளர்ந்து போகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை நீடிக்கிறது.
எனவேதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். இதை தடுத்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.