என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Team"

    • முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது.

    அல் அமராட்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அடுத்து 123 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.

    மேலும் ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.

    • துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.
    • கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, வங்காளதேசத்தை (ஏ பிரிவு) துபாயில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா கூட அந்த தொடரில் ஒரு சதம் அடித்தார். ஆனால் விராட் கோலியின் தடுமாற்றம் தான் தொடருகிறது. அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மிடில் வரிசை வலுவடையும். கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியது பலவீனமே. இருப்பினும் முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, சுழலில் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி மிரட்ட காத்திருக்கிறார்கள். துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரு அணி மொத்தமே 3 லீக்கில் தான் விளையாட வேண்டும். ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு ஆடுவார்கள் என்று நம்பலாம்.

    வங்காளதேச அணியை பொறுத்தவரை சமீப காலத்தில் அவர்களின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வெஸ்ட் இண்டீஸ் (0-3) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை (1-2) அடுத்தடுத்து இழந்தது. விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசிய சர்ச்சையில் சிக்கிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. இதே போல் ரன் எடுக்க தடுமாறும் அனுபவ வீரர் லிட்டான் தாசும் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடிய திறமை இருப்பதாக கேப்டன் ஷன்டோ நம்பிக்கையோடு சொல்லியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'ஒருநாள் போட்டி வடிவத்துக்கு எங்கள் அணி மிகவும் சரியான கலவையில் இருக்கிறது. இந்த தொடரில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம். எல்லா அணிகளும் கோப்பையை வெல்வதற்குரிய திறன் படைத்தவை. ஆனால் நாங்கள் எதிரணி குறித்து அதிகமாக சிந்திக்கமாட்டோம். வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்' என்று நேற்று நிருபர்களிடம் குறிப்பிட்டார்.

    மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிஜூர் ரகுமான், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய நஹித் ராணா உள்ளிட்டோர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் வீழ்த்தியது போல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ்.

    வங்காளதேசம்: தன்சித் ஹசன், சவுமியா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்திய ஆடவர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
    • பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

    புவனேஸ்வர்:

    6-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி முந்தைய நாள் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் குர்ஜத் சிங் கோல் அடித்தார். நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை சந்திக்கிறது.

    புரோ ஹாக்கி லீக் தொடரில் பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

    • பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது.
    • இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கின்றனர்.

    8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் ஷமான் காயமடைந்தார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகே அவர் களத்திற்கு வந்தார். 

    இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கிறது. இந்த அணியுடன் காயமடைந்த பகர் ஷமான் செல்லவில்லை. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக இமாம் உல் ஹக் அணியில் இணைந்துள்ளார். பகர் ஷமான் விலகியது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது.
    • பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் உள்ள இந்தியா, வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியது.

    துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் சதம் அடித்தார்.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எந்தவொரு போட்டிக்கு முன்பும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேசிங்கின்போது வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே நாங்கள் இருந்திருக்கிறோம். எங்களது அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. இறுதிக்கட்டத்தில் சுப்மன் கில், கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினார்கள்.

    முகமது சமியின் பந்துவீச்சு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அவரிடம் உள்ள தரம் பற்றி எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அவரிடம் பந்தை கொடுக்கும்போது சிறப்பான செயல்பாடு வெளிவந்தது. பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை.

    சுப்மன் கில்லின் தரத்தை நாங்கள் அறிவோம். அவர் சமீப காலமாக அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால்அவரது ஆட்டத்தை பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கடைசி வரை அவர் பேட்டிங் செய்ததை பார்க்க நன்றாக இருந்தது.

    அக்சர் பட்டேலின் ஹாட்ரிக் வாய்ப்பின்போது கேட்சை தவறவிட்டு விட்டேன். இதனால் அக்சர் படேலை இரவு உணவுக்கு நான் அழைத்துச் செல்லலாம்.

    அது எளிதான கேட்ச். என்னுடைய தரத்திற்கு அந்த கேட்சை நான் பிடித்திருக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இது போன்று நடக்கும்.

    ஆடுகளம் அடுத்த போட்டிகளில் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு நான் மைதான பராமரிப்பாளர் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே மைதானத்தில் இந்திய அணி நாளை மறுநாள் (23-ந்தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

    மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் காயத்தால் அவதிப்பட்டு ரோகித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அல்லது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் சுப்மன் கில்லுடன் இணைந்து கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
    • இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேற்றப்பட்டன.

    பி பிரிவில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து வெளியேறியது 2-வது அணியாக தகுதி பெறுவதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (தலா 3 புள்ளிகள்) உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்காவுக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் அந்த அணி நிகர ரன் ரேட்டில் 2.140 ஆக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட்-0.990 ஆகும்.

    இந்தப் போட்டி தொடரின் கடைசி லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தையும், 2- வது போட்டியில் பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் மட்டுமே விளையாடும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார். தொடைநார் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட மாட்டார். அணியின் துணை கேப்டனான சுப்மன்கில் கேப்டனாக பணியாற்றுவார். ரோகித்சர்மா இடத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சுப்மன்கில்லும், கே.எல். ராகுலும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள்.

    இதேபோல வேகப்பந்து வீரர் முகமது ஷமியும் முழு உடல்தகுதியுடன் இல்லை. அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரும் பந்து வீச்சில் ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது பேட்டிங் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் டாம் லாதம், ரச்சின் ரவீந்தர், வில் யங், பிலிப்ஸ் ஆகியோரும் பந்து வீச்சில் பிரேஸ்செல், வில்லியம் ரூர்கே, கேப்டன் சான்ட்னெர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுகிறது. 119-வது போட்டியாகும். இதுவரை நடந்த 118 ஆட்டங்களில் இந்தியா 60-ல் நியூசிலாந்தில் 50-ல் வெற்றி பெற்றார். ஒரு போட்டி டை ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து நாளை மோதுகிறது.
    • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

    மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் முகமது ஷமியும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் சுப்மன் கில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் முகமது சமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது.
    • நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது.

    முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    \இந்நிலையில் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு.

    அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்.

    எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம்.

    இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம். மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.

    ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்.

    என்று பிரேஸ்வெல் கூறினார். 

    • இறுதிபோட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த நிலையில் எந்த இரண்டு அணிகள் இறுதிபோட்டியில் மோதும் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் எனவும் இதில் 1 ரன்னில் இந்தியா வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்.

    இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒருநாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    மேலும் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.

    • 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
    • இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.

    முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ×