என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian government"

    • 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
    • இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.

    இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. 


    • டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது

    பீகாரை சேர்ந்த ஒருவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் தனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

    பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. கடந்த வாரம், 'இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும்' என்ற ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்டுவிட்டேன்.

    'அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம். நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. எனவே ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும்' என்றும் கூறி ரோசரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

     

    முன்னதாக கடந்த வாரம் ஜனவரி 15 ஆம் தேதி டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் பேசிய ராகுல் காந்தி, நமது போராட்டம் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம்.

    பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன. அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும் என்று பேசினார்.

    இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து எனக் கூறி அவரை பாஜக விமர்சித்தது. ராகுலின் பேச்சுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.



    இதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவர மத்திய அரசு விரும்புவதாக விஜய் மல்லையா கூறினார். #VijayMallya
    சில்வர்ஸ்டோன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கில் வாதங்களை எடுத்துவைப்பதற்கான இறுதி நாளாக வருகிற 31-ந் தேதியை கோர்ட்டு நிர்ணயித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து அப்பீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்துக்கு வந்த மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் இங்கிலாந்து வாழ் இந்தியர்தான். இந்தியாவில் வசிப்பது இல்லை. அப்படியிருக்க நான் தப்பி ஓடியதாக எப்படி கூற முடியும்? எங்கு நான் திரும்பி போக வேண்டும்? இவை எல்லாம் வெறும் அரசியல்தான்.

    இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், என்னை திரும்ப அழைத்து வந்து, புனித சிலுவையில் தொங்கவிட்டு அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என அவர்கள் (மத்திய அரசு) நம்புவதாக நினைக்கிறேன். அதற்காகவே என்னை இந்தியா கொண்டு செல்ல விரும்புகின்றனர்.

    இங்கிலாந்தில் உள்ள எனது சொத்துகளை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். ஆனால் இங்கு எனக்கு அதிக சொத்துகள் இல்லை. எனது குடும்பத்தினர் பெயரிலேயே சொத்துகள் உள்ளன.

    நான் தங்கியிருக்கும் வீடு எனது குழந்தைகளுக்கும், லண்டனில் உள்ள ஒரு வீடு எனது தாய்க்கும் சொந்தமானவை. அவற்றை யாரும் தொட முடியாது. ஒருசில கார்கள், சிறிதளவு நகைகள் மட்டுமே எனக்கு சொந்தமாக உள்ளன.

    அவற்றை பறிமுதல் செய்வதற்காக நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம். நானே நேரடியாக அவற்றை ஒப்படைக்கலாம். அதற்கான நேரமும், இடமும் சொன்னால் போதும்.

    இங்குள்ள சொத்துகள் தொடர்பாக லண்டன் கோர்ட்டில் நான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளேன். அவற்றில் கூறியுள்ளதுபோல எனது பெயரில் உள்ள சொத்துகளை எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உண்டு. அதைத் தாண்டி அவர்களால் ஒரு அடியும் முன்னே செல்ல முடியாது.

    மொனாக்கோ மற்றும் அபுதாபியில் பந்தயங்களில் ஈடுபடுத்தி வந்த படகு ஒன்று, ஊழியர்களுக்கான சம்பள பிரச்சினை விவகாரத்தில் சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அது எனது பிரச்சினை இல்லை.

    இவ்வாறு விஜய் மல்லையா கூறினார்.  #Tamilnews 
    ×