என் மலர்
நீங்கள் தேடியது "Indira Gandhi"
- மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
- புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆர்.இ.சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது
கரூர்:
முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவுநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு, இந்திரா காந்தி திருஉருவப்படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில சேவா தள செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாவட்ட சேவா தள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகேஸ்வரன், சின்னையன், நகரத்தலைவர் பெரியசாமி, தெற்கு நகரத்தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகரத்தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் அனைத்து
துறை சார்ந்த தலைவர்களும் நிர்வாகிகளுக்கும் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
- இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது
- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்
அரியலூர்
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜ் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர். இதே போல், புங்கங்குழி ஆதனூரிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர்:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
- தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்ப ட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர். சுரேஷ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபு மண்கொண்டார், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலா ளர்சசிகலா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், சுவிதா ஞானப்பிரகாசம், செந்தில்குமார், ஐ.என்.டி.யூ பொறுப்பாளர்கள் பாரதிதாசன், மணிவா சகன், சம்பத்குமார், சண்முகநாதன், முகிலன், சிவா, கோபாலய்யர், வி.எஸ்.மாதவன், வரகூர் மீசை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
- எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
1975-ம் ஆண்டு இந்தியா வில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்
பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
I pay homage to all those courageous people who resisted the Emergency and worked to strengthen our democratic spirit. The #DarkDaysOfEmergency remain an unforgettable period in our history, totally opposite to the values our Constitution celebrates.
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
- பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
- தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி இந்திராகாந்தி சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் இன்று அனுச ரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள்
எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நிர்வாகிகள் சரவணன், சேகர், கோவிந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் உட்பட பலர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி (உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ஏம்பலம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மண்ணாங்கட்டி, பாலையா மற்றும் நிர்வாகிகள் சக்ரவர்த்தி கிராமிணி, பாலு, செல்வம், லெனின், ராஜாராம், ஜெபக்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
- காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
என் பாட்டி(இந்திரா காந்தி)தான் என் பலம். நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்த இந்தியாவை நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்களுடனான நினைவுகள் எப்போதும் என்னுடன் என் இதயத்தில் இருக்கின்றன' என்று பதிவிட்டு அவர் குறித்த ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
- இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, வக்கீல் மருதுபாண்டியன், ஆர்.இ. சேகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
- நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,
"இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
- விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், செந்தில்வேல், ஆறு முகம், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு வீரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊக் கத்தொகை, உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறான முயற்சிகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வரக் கூடாது.
தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, போதிய காவலாளிகளை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.