என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INVITATION"

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.

    தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

    அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்புவது உண்டு. அதற்கு எப்பொழுதும் வித்தியாசமான முறையில் அவரது பாணியில் பதிலளத்து கடந்து விடுவார்.

    இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது. அதன்படி பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.

    பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,

    பிரேம்ஜி க்கு நாளை கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில் இன்று அவருக்கு ரிசப்ஷன் நடந்துக் கொண்டு இருக்கிறது. அவரது அண்ணனான இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் ஃபைனலி.... லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். மணப்பெண்ணின் பெயர் இந்து என தெரிய வந்துள்ளது.  தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் விழாவில் சென்னை 28 படக்குழுவினர் , நெருங்கிய நண்பர்கள், நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

     

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

    அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.

    இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    பிரேம்ஜிக்கு இன்று  ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்
    • வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

     

    அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல் போன்றோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

    வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அந்த வகையில் இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஜூலை 26 அன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
    • பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.

    புதுடெல்லி:

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

     சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.

    • இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.
    • நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஜெர்மனி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரகங்கள் இறக்குமதியாளராக உள்ளது. அந்நாட்டின் மொத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடைகளின் பங்களிப்பு 3 முதல் 4சதவீதத்துக்கும் குறையாமல் தொடர்கிறது.கடந்த 2019ல் ரூ. 2.92 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஆயத்த ஆடைகள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு கடந்த 2021ல், 3.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஜெர்மனிக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருகிற நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை ஏ.இ.பி.சி., செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது குறித்து ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aepcindia.com என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக விடுதி தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக தொடங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கருத்துருக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 88388 72443, 75020 34646 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் ஒதுக்கீடு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் உள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879, 9499055880 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    ×