என் மலர்
நீங்கள் தேடியது "Irrigation"
- 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
- 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அவினாசி :
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ங்களில் 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் என திட்ட இயக்குனர் சிவலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.5 இடங்களில் ெரயில்வே பாதையின் குறுக்கேயும், 10 இடங்களில் தேசிய நெடு ஞ்சாலையின் குறுக்கேயும் சுரங்கம் அமைத்து அதில் குழாய்கள் பதிக்கப்ப ட்டுள்ளன.இதில் 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள், 265 கி.மீ.,க்கு கடினமான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட 1,295 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட உள்ளது. இதில் 37 பொதுப்பணித்துறை குளங்கள், 47 ஊராட்சி குளங்கள், 971 கிராம குட்டைகள் அடங்கும். 6 இடங்களில் தானியங்கி நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தால் தண்ணீர் பம்பிங் செய்ய ப்படும். நாள் ஒன்றுக்கு 250 கன அடி வீதம் மொத்தமாக 1.5 டி.எம்.சி., தண்ணீர் பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்ப டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீருற்று வாயிலாக 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்.திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. பிப்ரவரி 20-ந்தேதி வெள்ளோட்ட பணிகள் துவங்கின. ஒவ்வொரு பகுதி யாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடி வாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.
குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.
42 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மூலவா ய்க்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அணை நிரம்பி உபரி நீரானது நேற்றைய நிலவரப்படி 8 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொ டர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தன கிரி விவசாயிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது என இரு மதகுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டனர்.
இன்று முதல் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும், இரு வாய்க்கால்களிலும் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
- நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.
உடுமலை :
பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.
- பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணியால் மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாவில் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்ட முத்துப்பட்டியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.4.65 கோடியில் பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மேலூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டி யில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47/100 கி.மீ முதல் நெடுகை தூரம் 58/000 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த பணிகள் நபார்டு நிதியுதவியு டன் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிழக்கு வட்டத்தில் உள்ள மாங்குளம், சின்ன மாங்குளம், கண்ட முத்துபட்டி மீனாட்சிபுரம், தேத்தம்படி ஆகிய 5 கிராமங்களும், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10கிராமங்களும் பயன்பெறும்.
இதன் மூலம் மதுரை கிழக்கு வட்டம் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22,332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அந்த பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னமாங்குளம் பகுதி யில் உள்ள 40குடியிருப்பு களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படு வதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மேற்குறிப்பிட்ட 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கவும், உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது.
- மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்..
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
- நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது.
நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.
மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப் பள்ளம் அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லிய துர்கம், கடம்பூர் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் அணையில் பூஜை செய்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.
இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் வலது கரையில் 18 கனஅடி தண்ணீரும்,
இடது கரையில் 6 கன அடி தண்ணீர் என மொத்தம் 24 நாட்கள் தொடரில் 20 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும். 4 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும் என்றும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி, குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது
- நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது.
உடுமலை
பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது.வழக்கமாக, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்தது, தென்மேற்கு பருவ மழை ஒரு மாதம் தாமதமாக துவங்கியது ஆகிய காரணங்களினால் திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.
அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் மண்டல பாசனம் நிறைவு செய்ததும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி 3 இடங்களில் நடந்து வருகிறது.பிரதான கால்வாயில் 5 இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளும் தாமதமாகி வருகிறது.
வழக்கமாக மண்டல பாசனத்திற்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை தாமதம், பணிகள் காரணமாக 4ம் மண்டல பாசனம் துவங்குவதும் ஒரு மாதம் வரை தாமதமாகும் நிலை உள்ளது.
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது, அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போல் பராமரிப்பு பணிகளும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.
பருவ மழைகளும் ஒத்துழைத்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு அம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர்.
- கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது
- ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடுமலை,ஆக.2-
உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக பிஏபி பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற ஆறுகள்,ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.அதைத் தவிர பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
பிஏபி திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆண்டுக்கு 10 மாதங்கள் நீர்வரத்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கால்வாயானது மழைக்கா லங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தின் போது மண் மற்றும் பாறைகளால் சேதமடைந்து வந்தது.இதனால் நீர் இழப்பு ஏற்பட்டு வந்ததால் அணை நிரம்புவதிலும் தாமதம் நிலவி வந்தது.
இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதிலும் தடங்கல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காண்டூர் கால்வாயை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தடையில்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கல்குவாரிகள் வேலை நிறுத்தம் மழை ப்பொழிவு உள்ளிட்ட காரணங்கள் கால்வாய் சீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் இருப்பில் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது.இந்த நிலையில் மழைப்பொழிவு நின்று விட்டதுடன் கல்குவாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.வருகின்ற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பாசனப்பரப்புகளில் தென்மேற்கு பருவமழை தீவிர அடையாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளனர்.
- 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
- நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகவும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் என ஆண்டுக்கு 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.நடப்பாண்டு அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து இல்லை.கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பி 8 மாதம் வரை ததும்பிய நிலையில் காணப்பட்டது. நடப்பாண்டு கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 8ந் தேதி திறக்கப்பட்டு 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
அதே போல் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டு 10 நாட்கள் மட்டும் உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலங்களுக்கு வழக்கமாக ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் பாசனம் துவக்கப்பட்டு ஜனவரி வரை நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் கரூர் வரை உள்ள வலது கரை கால்வாய் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நடப்பாண்டு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சம்பா சாகுபடிக்கும் நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்றனர்.
அமராவதி அணையில் தற்போதையை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 56.66 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,528.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 740 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில், அமராவதி அணை நீர்மட்டம் 87.9 அடியாகவும், நீர்இருப்பு 3,857 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு நீர்இருப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.
- அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
- அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.