என் மலர்
நீங்கள் தேடியது "JDU"
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 2 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பிய அவர்கள், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தனர்.
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.
+2
- மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
- ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.
பெங்களூரு:
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?
- பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது
பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில் ''பா.ஜனதா தலைவர் பீகாரின் சட்டம்- ஒழுங்கு சூழ்நிலையை எப்படி பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் ஒப்பிட முடியும்?. பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் பாகிஸ்தானின் ஏஜென்டா?. பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது என்று நான் சொல்லுவேன்.
ஜனநாயக பூமியான பீகாரை, ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, அவமதித்து விட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்திய தரவரிசை அமைப்புகள் பாராட்டியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின் போது சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பா.ஜனதா தலைவர்களுக்கு நான் கண்ணாடியை காட்டுகிறேன்.
பத்திரிகை சுதந்திரம், உலக மகிழ்ச்சி குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்திறன் குறியீடு போன்றவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மேலும், நீங்கள் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுகிறீர்கள். 2021 கால்அப் (Gallup) குறியீட்டின்படி, பாகிஸ்தானை விட இந்தியாவின் நிலை மோசமாக இருந்தது'' என்றார்.
- இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
- கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.
நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.
பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:
பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.
கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.
ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.
இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.
இவ்வாறு பின்டு கூறினார்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நிதிஷ் குமார்.
- நிதிஷ் குமார் பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
புதுடெல்லி:
ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை இன்று ஏற்றுக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
- குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
- இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.
பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.
- நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமைக்கோரினால் தடுக்க லாலு திட்டம்.
- நிதிஷ் குமார், லாலு கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
நிதிஷ் குமார் எப்போது வேண்டுமென்றாலும் பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 9-வது முறையாக மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜனதா கட்சியின் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.
கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுங்கள் என நிதிஷ்குமாருக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை லாலு கட்சி உடனான கூட்டணி முடிந்தது. பா.ஜனதா உடன் இணைந்து ஆட்சியமைக்க போகிறேன் என நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து லாலு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றாலும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை தேவை.
பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் கட்சி உறுப்பினர்கள் முறையே 78 மற்றும் 45 உள்ளனர். மொத்தம் 123 எண்ணிக்கை உள்ளது. ஒரு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஜித்தன் ராம் மஞ்ச் ஆதரித்தால் எண்ணிக்கை 127 ஆக அதிரிக்கும்.
தற்போது சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 79 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. காங்கிரஸ்க்கு 19 இடங்கள் உள்ளன. சிபிஐ-எம்எல்-12, சிபிஐ-2, சிபிஐ-எம்- 2, ஒரு சுயேட்சை என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 4 இடங்களும் உள்ளன.
ஒருவேளை நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்தால், தனிப்பட்ட எண்ணிக்கையில் லாலு கட்சிதான் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களைத்தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.
அப்படி அழைத்தால் பா.ஜனதாவுடன் இணைந்து நிதிஷ் குமார் கட்சி இணைந்து எதிர்த்து வாக்களிக்கும். இதனால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டால் லாலு கட்சியின் வாக்கெடுப்பில் தப்பித்துக் கொள்ளும்.
மாறாக நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தால், அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து லாலு கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தால் போதுமானது. இதற்கான வேலைகளை லாலு பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் நிதிஷ் குமார் கட்சியும், பா.ஜனதாவும் குதிரை பேரத்தில் ஈடுபடும். இதனால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
- நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை.
பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி நடத்தி வந்தார். துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் அமைந்திருந்த மெகா கூட்டணியை முறித்துக் கொண்டார். அங்கிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்.
மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து பா.ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளது. அதுபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறார். அவர்களும் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை. அவர்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் குதிரை பேரம் நடப்பதாக குற்றச் சாட்டுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பின்போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்.
நிதிஷ் குமார் தொடர்பான விசயங்களுக்க ஆதரவு அளிக்க வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டார் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐந்து பேரில் இருவரும் நாங்கள் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்" என்றார். இதனால் அவர் நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். என்றாலும் பீகார் அரசியலில் கடைசி நிமிட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை காலை பீகார் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது நிதிஷ்குமாருக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.
- யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
- விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.
அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.
இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.
இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கிங் மேக்கராக உள்ளனர்.
- இருவரும் அவரவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பார்கள்.
மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதா தனித்து பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 296 இடங்களைத்தான் பிடித்துள்ளார்.
பாஜக-வுக்கு 240 இடங்கள்தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (12) ஆகியோரின் உதவி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது.
இதனால் இருவரும் கிங் மேக்கர்களாக திகழ்கிறார்கள். இருவரும் பிரதமர் மோடி வீட்டில் இன்று நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டணியில் கலந்து கொண்டார்கள்.
மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்க இருவரும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு
நிதிஷ் குமார் கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி, மந்திரி சபையை நீட்டிக்க விரும்பி அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம். புதிதாக அமையும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைதான். இருந்தபோதிலும் எந்த கண்டிசனும் போடமாட்டோம். நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முயற்சி இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக நாடு தழுவிய சாதி வாரிய கணக்கெடுப்பை விரும்பவில்லை. இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதியில் இது ஒன்று.
பீகாரில் வேலையாப்பின்மை மிகப்பெரியதாக உள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்துதான் ஒரு வழி என நிதிஷ் குமார் நினைக்கிறார். இதனால் இந்த இரண்டையும் பா.ஜனதாவுடன் வலியுறுத்தும்.
சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு
சந்திர பாபு நாயுடு கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அதிகமான இடங்களை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது பிரதான கோரிக்கையாக இருக்கும். இந்த விவகாரத்தில்தான் கடந்த 2016-ல் சந்திரபாபு நாயுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டு வருவேன். மாநிலத்தின் தலைநகரை சிறந்த நகராக உருவாக்குவேன் என்பதை வாக்குறுதியாக அளித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். தற்போது ஐதராபாத் ஆந்திராவின் மாநிலம் அல்ல. தெலுங்கானா மாநிலமாகிவிட்டது. இதனால் புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். இதனால் சிறப்பு அந்தஸ்து முக்கியமானதாக தெலுங்குதேசம் கருதும்.

இதனால் நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் வளர்ச்சியல் அரசியல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது இருவரின் உதவி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் என்ன விலை கொடுக்கப் போகிறதோ? தெரியவில்லை.
தற்போது என்டிஏ-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கிங் மேங்கராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.