என் மலர்
நீங்கள் தேடியது "Jitendra Singh"
- 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பு.
- தூய்மையான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை.
கடந்த ஜூலை 5ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள் உள்பட வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
கடற்கரை தூய்மை இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த www.swachhsagar.org என்ற இணையதளத்தை நேற்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இயக்கத்தில் புவி அறிவியல் அமைச்சகத்தோடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், ஜல் சக்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் தீவிரமாக பங்கேற்றுள்ளன என்றார்.
கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் கடற்கரைகளிலிருந்து 200 டன் கழிவுகள் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழுமையான ஆதரவு அளிக்க உறுதி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார். இதுவரை 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த இயக்கம் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான செப்டம்பர் 17 அன்று நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
- ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு.
- இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-
பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக மாறும். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது.
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டீசல் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் டீசல் செலவுவை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவாக இருக்கும். இது இந்தியாவில் சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாசன மேலாண்மை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றப்படும்.
- 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
புனே:
மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டட வளாகத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
இதையொட்டி சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் மத்திய மந்திரி கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும், இரட்டை மின்சார வசதி கொண்ட இருகட்ட டெஃபிபிரில்லேட்டர்களை உருவாக்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாசன மேலாண்மையை எளிதான, நம்பகமான மற்றும் திறன் வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக் கூடிய சென்சார் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்க வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது குறிப்பிட்டார்.
- பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
- பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில தேர்தலில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
ஐம்மு:
பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்திய வம்சாவளி அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்திய பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
நாடு பிரிக்கப்படுவதற்கு முந்தைய மேற்கு பாகிஸ்தானில் பிறந்த டாக்டர் மன்மோகன் சிங், குஜ்ரால் ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது. சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சூழ்ச்சிகளால், பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 370வது சட்டப்பிரிவுவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த முரண்பாட்டை சரிசெய்தார். அதன்பிறகு, இப்போது ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம். மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட அவர்கள் ஆகலாம்.
அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பொன்னான அத்தியாயத்தை பதிவு செய்யும். அதில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் ஒதுக்குப்புறப் பகுதிகளின் திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் விவசாய துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.
- மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தம்.
- கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் பலன்கள் சென்றடைய வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு அரசு தீர்வு காணும் அதிகபட்ச கால வரம்பு 60 நாட்களில் இருந்து 45 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் குறைகளை தீர்க்கும் முறையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு இணங்க தற்போது அந்த காலக்கெடு 30 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வுத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துறைகள் ரீதியான மீளாய்வுக் கூட்டங்களில், பிரதமரே பொதுமக்களின் குறைகளின் நிலையை ஆய்வு செய்வதாகவும் மந்திரி சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் மனநிறைவு மற்றும் நேரக் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய இரட்டைக் காரணிகளால் பொதுமக்கள் குறைகள் தொடர்பான வழக்குகள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது குடிமக்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் மந்திரி கூறியுள்ளார்.
மோடி அரசின் முக்கிய மந்திரம், கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் நலத்திட்டங்களின் அனைத்துப் பலன்களும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத் நிலநடுக்கம் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது.
- தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று சவாலாக உள்ளது.
ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது:
முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக ஆகி உலகிலேயே 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்தியத் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்ற முதலமைச்சர் என்ற அரிதான சாதனையும் மோடிக்குச் சொந்தமானதாகும்.
கடந்த 2002ல் மோடி குஜராத் முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கடந்த காலங்களில் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
மோடியின் ஆட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமான காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற போது பூஜ் நகரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம்தான் அவருக்கு முதல் சவாலாக இருந்தது.
பிரதமர் ஆன பிறகு அவர் எதிர்கொண்டுள்ள சமீபத்திய மிகப் பெரிய சவால் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுநோய். புதிய சவால்களை எதிர்கொண்டு வலுவாக உள்ள ஆட்சி என்பதற்கு மோடி தலைமையிலான ஆட்சியே உதாரணமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முத்ரா கடன் திட்டம், சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
- தனி நபர் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப் படுகிறது.
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது:
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 7,22,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தர வேலை கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 38,850 பேர் மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தனி நபர்கள் தொழில் தொடங்குவதற்கும் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் இலவசக் கடன் மூலம் தங்களது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
- பொது தகுதித் தேர்வு தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும்.
- படிப்படியாக 22 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்படும்.
பெங்களூரு:
கர்நாடக அரசும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த மண்டல மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் நிறைவுரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் உண்மையில் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.
சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று முறையை பிரதமர் ரத்து செய்துள்ளார். அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் உயர் பதவி அல்லாத பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு கணினி அடிப்படையில் பொது தகுதித் தேர்வை இந்த ஆண்டு இறுதி வாக்கில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும் இந்தத் தேர்வு படிப்படியாக அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
- பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.
ஜம்மு:
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அப்போதைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் வெடித்தது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சி.பி.ஐ. அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். #JitendraSingh #CBI
இந்தியா விண்வெளி துறையில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து உள்ளது.
கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டுக்குள் ‘ககன்யான்’ விண்கலம் மூலம் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இது.

இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் அணுசக்தி, விண்வெளித்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் கே.சிவனுடன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்.
அப்போது ஜிதேந்திர சிங் கூறும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றும். இந்த திட்டம் குறைந்த செலவிலானதுதான். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றார்.
மேலும், “அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. இந்த திட்டம், அந்த வரிசையில் இந்தியாவை நான்காவது நாடாக சேர்க்கும்” என்றும் குறிப்பிட்டார்.
‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நிருபர்களிடம் பேசும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்கான இந்த திட்டம் தொடர்பான சோதனைகள், 2004-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த திட்டம் எங்கள் முன் உரிமை பட்டியலில் இல்லை. அதற்காக இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) எடுத்துக்கொள்ளாது என்று அர்த்தம் ஆகாது” என குறிப்பிட்டார்.
அப்போது மந்திரி ஜிதேந்திர சிங், “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் முடிவு, அரசியல் முடிவுக்கு மேலானது ஆகும். இஸ்ரோவின் கவனம் எல்லாம் தகவல் தொடர்பு, விவசாயம், பருவ நிலை போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திட்டங்களில் இருக்கிறது. நாங்கள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு விட்டோம். இது குறிப்பிடத்தகுந்த ஒரு திட்டம் என்பதால் பிரதமர் அறிவிப்பதற்காக காத்து இருந்தோம்” என்று குறிப்பிட்டார்.
விண்வெளிக்கு அனுப்புகிற வீரர்களின் பாதுகாப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளிக்கையில், “வீரர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது” என்று கூறினார்.
‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தொடர்ந்து நிருபர்களிடம் பேசும்போது, “அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நிறைவேற்றுவதற்கு 19 திட்டங்கள் வரிசையில் நிற்கின்றன” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சந்திரயான்-2 திட்டம்தான் மிக முக்கியமான திட்டம். இஸ்ரோவின் திட்டங்களில் எல்லாம் இது மிகவும் சிக்கலான திட்டம் ஆகும். வரும் ஜனவரி மாதம் சந்திரயான்-2 விண்வெளியில் செலுத்தப்படும்” எனவும் கூறினார்.