என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadambur Raju Mla"

    • எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

    சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க. தேய்ந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அ.தி.மு.க. தான்.

    நம்பர் 1 கட்சி

    அ.தி.மு.க இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி. அ.தி.மு.க.விற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 3 எழுத்து, இப்போது இ.பி.எஸ்.க்கும் 3 எழுத்து. இன்னொரு வருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் எழுத்து பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார்.

    அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். தி.மு.க. ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 40-க்கு 40 அளித்தால் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
    • கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

    கோவில்பட்டி:

    கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புதுடெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை ரெயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் ரெயில்வே ஸ்டேஷனாக கோவில்பட்டி திகழ்ந்து வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 2-ம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

    வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஓகா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பூர் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ., வுக்கு நன்றி

    கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை புதிய சர்வீஸ் ரோடு மற்றும் சுரங்க நடைபாதை அமைக்க வலியுறுத்தி, மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தமைக்காக, சுப்புராயலு தலைமையில், சீனிவாசன் நகர், இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., வை சந்தித்து சால்வை அணித்து நன்றி தரெிவித்தனர்.

    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.5.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி இல்லத் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், அ.தி.மு.க. நகர செயலர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சூறைக்காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.
    • ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி பகுதியில் கடந்த சில தினங்களாக வீசிய சூறைக்காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.

    இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மற்றும் வேளாண்மை துறை அதி காரிகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- சூறைக் காற்றினால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து வேளாண் மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 100 ஹெக்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து ள்ளனர்.

    பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அதற்கு ஏற்ப அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் பருத்தியில் தண்டுப்புழு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் அரசு கணக்கீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தினை மீண்டும் அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    குடிமரமாத்து திட்டம் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால் அரசியல் காழ்ப்புணர்சி பார்க்கமால் குடிமராமத்து திட்டம் போன்ற நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு தொடரவேண்டும், மக்காச்சோளத்திலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க முதல்-அமைச்சர் அலுவலகம் வரை எடுத்து சென்று வழிவகை செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கழிவுநீர் ஓடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
    • 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., உரியவர்களிடம் வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் ஓடையை அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தொடர்ந்து, முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை உரியவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க.., ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
    • தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.

    இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் ஸ்ரீதர் சுவாமிகள் யோகா சென்டரில் பயின்ற மாணவி ஜெயவர்தினி (வயது 12), அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிக்கு எம்.எல்.ஏ., ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

    போட்டியில், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மெட்ரிக் பள்ளி சாத்தூர் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப் மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடம், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.

    தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணை செயலர் சூரியநாராயணன் வரவேற்றார். பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு, ஏப்.4-

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவைசெயலாளர் செல்வகுமார், கயத்தாறு ஒன்றிய மாணவரணி செய லாளர் நவநீதகண்ணன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி,நகர துணைச் செயலாளர் தங்க பாண்டியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அகிலாண்டபுரம் பஞ்சா யத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வேதக்கோவில் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதி யிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் சத்திரப்பட்டி கிளை செயலாளர் ஞான தாஸ், அகிலாண்ட புரம் கிளை செயலாளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
    • அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி :

    கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்குவது தொடர்பாகவும், நகராட்சி தினசரி சந்தை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசியதாவது:-

    கோவில்பட்டியில் நக ராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறிசந்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை கோவில்பட்டி நகர் மட்டுமின்றி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்பொழுது தினசரி சந்தையில் அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஏற்கனவே அந்த காய்கறி சந்தையில் 396 கடைகள் செயல்பட்டு வருகின்ற இதனால் 146 வியாபாரிகள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பதற்றத்தினையும், அச்சத்தினையும் உருவாக்கி உள்ளது.

    கொரோனா காலத்தில் கடை கள் மூடப்பட்டு இருந்த போது வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் பழுது பார்த்து நல்ல நிலையில் வைத்துள்ளனர். எனவே அந்த இடத்தில் கடைகளை கட்டுவதற்கு பதிலாக புதியதாக கிருஷ்ணா நகரில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் தற்பொழுது குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. 5 ஏக்கர் இடம் பயன்பாட்டிற்கு உகந்த இடமாக உள்ளது. அந்த இடத்தில் மாற்று ஏற்பாடாக புதியதாக கடைகளை கட்டும் நேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும், அங்குள்ள வியாபாரிகளும், பொது மக்களும் பயன்படுத்து சூழ்நிலையை அமைச்சர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுகையில், ஏற்கனவே 396 கடைகள் இருந்த தாகவும், புதியதாக கட்டுப்படுவதில் 250 கடைகள் கட்டுப்படுவதாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அதிகமான மக்கள் வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் எளிதாக உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தான் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பவர்கள் அனைவருக்கும் கடைகள் தரவேண்டும் என்றால் குப்பைகள் அகற்றி நகராட்சி இடம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தினை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும், இ.எஸ்.ஐ மருந்தகத்தில் இடம் இருப்பதாக தெரி வித்துள்ளீர்கள், சம்ப ந்தப்ட்ட துறை அமைச்ச கத்தில் பேசி, அவர்கள் சம்மதம் தெரி வித்தால் அனைவருக்கும் கடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக கோவில்பட்டி இருந்து வருகிறது.
    • எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.

    கோவில்பட்டி:

    சட்டசபையில் நடைபெற்ற வணிகவரி மற்றும் செய்திதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடக்கி வைத்து கடம்பூர்ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக கோவில் பட்டி இருந்து வருகிறது. எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இங்கு விவசாயத்திற்கு மாற்றாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழில் உள்ளது.

    தறபோது சீனாவில் இருந்து வருகிற லைட்டர் தீப்பெட்டி தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே மாநில அரசு லைட்டருக்கு தடை விதித்து பல்லாயிரக்க ணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை கணக்கில் பார்த்தால் சராசரியாக 52 சதவீதம் தான் மழை பெய்துள்ளது.

    நிலத்தடிநீர் மிகவும் குறைந்த நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை அரசு உடனடியாக இந்த ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரைபாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது .

    நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசுகையில், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை அவரை தொடர்ந்து ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. எத்தனை நெருக்கடி வந்தாலும், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அவர்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் .கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் வரலாற்று சாதனை படைத்து நமது மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    • கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது.
    • கூட்டத்தில தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது என்று கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.22 லட்சத்தில் புதுக்கிராமம் வள்ளுவர் நகர் பகுதியில் சலவைக்கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஒ. அவரது அலுவல கத்துக்குள்ளேயே பட்டப்பகலில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறினர். அப்படி என்றால் 5 ஆண்டுகள் அதாவது 60 மாதங்களுக்கு அவர்கள் தர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தை பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராமர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், மார்க்சிஸ்ட் நகர் மன்ற உறுப்பினர் ஜோதி பாசு உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    அ.தி.மு.க. பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் அவரது தலைமையில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.கே. பெருமாள், சின்னப்பன், மோகன், கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன். முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி, கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் நகர் மன்ற

    துணைத்தலைவர் ராமர், மாவட்ட கவுன்சிலர் லெட்சுமணபெருமாள், மாணவரணி நிர்வாகி செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசு, வள்ளியம்மாள், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பத்மா, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ் ஆரோக்கியராஜ், பழனிக்குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும், ஆசி பெறவும் எடப்பாடிக்கு கிளம்பி சென்றனர்.

    ×