என் மலர்
நீங்கள் தேடியது "Kalpana Soran"
- சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது
- இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் சந்தித்து பேசினார்.
இருவரது கணவர்களும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தலைமை தாங்கும் தங்கள் கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மத்திய ஏஜென்சிகளின் மிருகத்தனமான அதிகாரத்திற்கு பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது பாஜக பயப்பட வேண்டும். இந்த பெண்களின் வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில், கல்பனா சோரன் பதிவிட்டுள்ளார். அதில்,
சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, ஜனநாயக நாட்டில் சாதாரண நிகழ்வு கிடையாது. இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஏப்ரல் 4-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . அதே போல மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
- தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
- காந்தே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்
ஜார்கண்ட் தேர்தல்
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டணி
கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாராளராக நிற்கிறார்.
அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையில் இருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தாவினார்.
கல்பனா சோரன்
இதனால் ஹேமந்த் சோரன் கட்சி பின்னடைவு என்று கூறப்படுகிறது. சம்பாய் சோரன் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தாலும் ஹேம்நாத் சோரன் ஜனவரியில் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சி தலைமையில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த மக்களவை தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயனப்டுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கை பெற்றவராக திகழ்கிறார்.

கட்சியின் முகம்
எனவே இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாககாந்தே தொகுதியில் போட்டியிடும் கல்பனா சோரன் மாறியுள்ளார் ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களை சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது பேச்சு குறித்த திட்டமிடல் கல்பனாவிடம் உள்ளதாக ஆங்கில ஊடங்கங்கள் கூறுகின்றன.
இதனால் தங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்தன என இந்தியா டுடே கள நிலவரம் கூறுகிறது. நேற்றைய தினம் இறுதிக்கட்ட கட்ட பிரசாரத்தில் கல்பனா சோரனின் ஹெலிகாப்ட்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் போன் மூலமே பிரசார மைக்கில் உரையாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் வேண்டிய நிலையில் ஹேமந்த் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 41- 44 இடங்களிலும், பாஜக 36-39 இடங்களிலும், இதர கட்சிகள் 3-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோகபால் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது .
- ஒடிசாவின் மயூர்பஞ்ச்சில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.
- பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் உரையாற்றினார்.
ஜார்கண்ட் தேர்தல்
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடக்கத்திலிருந்தே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த லாலுவின் ஆர்ஜேடி, ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி 56 இடங்களிலும் பாஜக 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஜேஎம்எம்
பார்ஹைத் [Barhait] தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சோரன் வெற்றி முகத்தில் உள்ளார். ஆனால் அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 92482 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் முன்யா தேவியை விட + 6862 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் கல்பனா சோரனின் பங்களிப்பு ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முக்கிய காரணி ஆகும்.
அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையிலிருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குத் தாவினார். இது ஹேமந்த் சோரனுக்கு பெரும் பின்னடைவாகக் காணப்பட்டது.

கல்பனா முர்மு சோரன்
ஆனால் இந்த நேரத்தில் ஜேஎம்எம் கட்சியின் பிரதான முகமாக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்தார். கல்பனா, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.
ஹேமந்த் சோரன் சிறையிலிருந்த இந்த இடைப்பட்ட 6 மாத காலத்தில் அதுவரை பெரிதாக அரசியலில் ஈடுபடாத கல்பனா சோரன் கட்சி தலைமை பொறுப்பை ஏற்று தேர்தல் வெற்றிக்கான வேலைகளைத் தொடங்கினார். மார்ச் 4 ஆம் தேதி கிரித் [Giridih] மாவட்டத்தில் ஜேஎம்எம் கட்சி தொடங்கியதன் 51வது ஆண்டு விழாவில் கல்பனா பொதுவெளியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
நம்பிக்கை நட்சத்திரம்
இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நடந்த 'உல்குலன் நய்' பேரணி ஏப்ரல் 21 அன்று ராஞ்சியில் நடந்தது. இந்த பேரணியில் கல்பனாவின் பேச்சு அவருக்குத் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கல்பனா விளங்கினார்.

பழங்குடியின அடையாளம்
பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாகப் பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கைப் பெற்றவராகத் திகழ்கிறார்.
அரசியல் உரை
ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களைச் சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது ஒவ்வொரு பேச்சையும் கல்பனா நன்கு திட்டமிட்டுத் தயாரித்துப் பேசினார்.
வெற்றி
இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் கல்பனா மைக்கில் பேசிய நிகழ்வும் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது கல்பனா சோரனின் வெற்றி காண்டே தொகுதியோடு மட்டும் இல்லாமல் ஹேமந்த் சோரனின் ஒட்டுமொத்த மாநில வெற்றிக்கும் கல்பனா சோரன் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. கல்பனா சோரனுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

- ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டார்
- மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.

பாஜக வியூகம்
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு எதிராக பாஜக பெரிய அளவிலான தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைத்தது. பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹிமந்தா பிஸ்வா
பிரதமர் மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை பாதேங்கே தோ கதேங்கே [ஒன்றாக இருந்தால் வாழ்வோம் - பிரித்து இருந்தால் வெட்டப்படுவோம்] என்ற இந்துக்களை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினர். ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா முஸ்லிகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற ஒற்றை குற்றச்சாட்டை அம்மாநிலத்தில் பாஜகவின் பிரதான தேர்தல் வியூகமாக வகுத்து செயல்பட்டார். ஜேஎம்எம் முக்கிய தலைவர் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஹேம்ந்த் சோரன்
ஆனால் பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது.
நில முறைகேடு தொடர்பான 2 வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் 6 மாதம் கழித்து விடுதலையானார். இடைப்பட்ட காலத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் கட்சியை வலுவோடு வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த தேர்தலில் பாஜக ஜார்கண்ட் மக்களிடையே தனது பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்துவதாகச் சோரன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பாஜகவின் வியூகங்களை உடைத்து ஹேமந்த் சோரனின் கட்சி தேர்தல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் சட்டென மாறிய நிலவரம் இந்தியா கூட்டணியை அபார வெற்றியை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.
How's the josh?
மொத்தம் உள்ள 81 இடங்களில் இந்தியா கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.இதை கொண்டாடும் விதமாக ஜேஎம்எம்கட்சி கட்சி "How's the josh?" என்ற கேப்ஷனுடன் ஹேமந்த் சோரன் படத்தை பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
"How's the josh?" என்பது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றி சொல்லாகப் பார்க்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட் வெளியான URI படத்தின் மூலம் இந்த சொல் டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் என்றும் ஜேஎம்எம் கோட்டை என்பதை நிரூபித்ததாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூலம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியா கூட்டணிக்கு அபார வெற்றியை பரிசளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகள். இது அரசியல் சாசனத்துடன் நீர், காடுகள் மற்றும் நிலங்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.