என் மலர்
நீங்கள் தேடியது "Karthigai Deepam"
- தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
- கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
"கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.
பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.
தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி, தீபத் திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்"
இவ்வாறு அவர் பேசினார்.
- கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
- தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
"கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை.
கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.
பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.
தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி, தீபத் திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்"
இவ்வாறு அவர் பேசினார்.
- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
- கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசியதாவது:-
திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது. வருகிற (நவம்பர்) 7-ந்தேதி யாகந்தியிலும், 14-ந்தேதி விசாகப்பட்டினத்திலும், 18-ந்தேதி திருப்பதியிலும் கார்த்திகை தீபத்திரு விழாவை வெற்றிகரமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்தக் கோவில்களில் ஸ்ரீவாரி லட்டுகள் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதங்களை தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
தேவஸ்தான கோவில்களில் தேவஸ்தான வனத்துறை அதிகாரி துளசி செடிகளை நடவு செய்ய வேண்டும். ஸ்ரீவெங்கடேஸ்வரா இசை மற்றும் நடனக் கல்லூரியின் முதல்வர் கலாசார நிகழ்ச்சிகளையும், அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் சங்கீர்த்தன குழுக்களையும் அமைத்து பக்தி இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
புனித கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த மாதத்தில் பக்தர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, துண்டு பிரசுங்களில் அச்சடித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
தீபத்திருவிழா அன்று கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகப் போதிய எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய போதிய கவுண்ட்டர்கள், தடுப்புகள் போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை நியமித்து, மருத்துவ முகாமை நடத்தலாம். தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் தீபத்திருவிழாவின்போது கோவிலை சுற்றிலும் குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
தீபத்திருவிழா அன்று பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக கூடுதலாக அரசு பஸ்களை இயக்கலாம். தேவஸ்தான இலவச வாகனங்களை இயக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஸ்ரீவாரி கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு, பக்தி சேனல் தலைமை அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் நாகேஸ்வர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி திருப்பதியில் குழந்தைகள் மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
- இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்துவது வழக்கம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர்.
பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.
- கார்த்திகை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
- தீப தினத்தன்று லட்சதீபங்கள் ஏற்றப்படுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீபதினத்தன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.
மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும்.
- தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-
திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
மேலும் 7 டிரோன்கள் மூலமும், 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- கார்த்திகை தீப திருவிழா 27-ந் தேதி தொடங்க உள்ளது.
- டிசம்பர் 6-ந்தேதி மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 27-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை கோவிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
கடந்த கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் முடிவடைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
சாமி மற்றும் அம்பாள், திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலை மாலை என இரு வேளைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம், தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
அதன்படி சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 7-ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.
7-ம் நாள் அன்று மகா தேரோட்டமும் 10-ம் நாள் டிசம்பர் 6-ந் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
இதுவரைக்கும் இப்பணியை செய்ததில்லை இப்போதுதான் முதல்முறையாக செய்கின்றனர்.
மத்திய சென்னை மண்டலத்தில் இருந்து மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையிலான 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- திருப்பதியில் கார்த்திகை தீப மகா உற்சவம்: 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
- அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது.
திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீபத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன. வேத பாடசாலையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.
தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீச்சிதர், கிருஷ்ண சேஷாசல தீச்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி சாமிக்கு நட்சத்திர ஆர்த்தி கும்ப ஆர்த்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் சாமிக்கு தீபம் காட்டி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி இசை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 60,861 பேர் தரிசனம் செய்தனர். 28 519 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- 27-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.
- ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஈசான்யா மைதானம், காந்திநகர் பைபாஸ் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.
இதையொட்டி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழா நாட்களில் சாமி வீதி உலா செல்லும் வெள்ளி வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, 'பாலீஷ்' போடும் பணியும், கோவிலை சுற்றி வண்ண விளக்குகள் பொறுத்தும் பணியும் நடந்து வருகின்றது.
மேலும் மதுரையை சேர்ந்த சிவனடியார்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரம், பலி பீடம் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்தனர்.
- டிச.6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
- மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.
சென்னை:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபத்தை காண வருவார்கள். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக கார்த்திகை தீபம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 7-ந்தேதி பவுர்ணமியாகும். 2 சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.
இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, செஞ்சி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்கள் டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.
- 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீப தரிசனம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.
முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.
தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும்.
தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும். அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.