என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodai vizha"

    • ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது.
    • சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பரமன்குறிச்சியை அடுத்த வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் அம்மன், செல்வவிநாயகர், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, சப்பர பவனி, கரகாட்டம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, 108 பால்குடம் பவனி, சுமங்கலி பூஜை, மஞ்சள் நீராடி அம்மன் வீதியுலா வருதல், நண்பகல் மற்றும் நள்ளிரவில் நேரங்களில் அலங்கார பூஜையுடன் கும்பம் தெருவீதி உலாவருதல், கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்கல், இரவில் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • கொடை விழா இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாட்டை நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்தியாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5,.30 மணிக்கு பக்திகானம், காலை 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுருள் அழைப்பு, பகல் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சிங்காரி மேளம், பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7 மணிக்கு வில்லிசை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு மண்டல பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    மேலசங்கரன்குழி ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டப்பட்டது. 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பும், 25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடுவாசிப்பு பட்டாபிஷேகமும் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி திருக்கோவில் பவனி வருதலும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 10 மணிக்கு கீதா பாராயணத்தை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். இரவு 8மணிக்கு சுவாமி பணிவிடை, 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சுவாமி அலங்கார வாகன பவனி வருதல் ஆகியவை நடைெ்பறுகிறது. அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    • இந்த விழா 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    காட்டாத்துறை குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று(புதன்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவில் நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு லலிதா ஸ்கஸ்ரநாம அர்ச்சனை, இரவு 7 மணிக்கு இந்து சமய கருத்தரங்கம், 8.30 மணிக்கு அய்யாவழி இன்னிசை விருந்து, 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு யானை மீது அம்மன் எழுந்தருளி பவனி வருதல், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 29-ந்தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு மஞ்சள்பால் குளித்தல், மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வினோத், துணைத்தலைவர் அஜித், செயலாளர் விஜித், துணை செயலாளர் சஜின், பொருளாளர் மத்தியாஸ், ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கவுரவ தலைவர் வின்சென்ட் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இதேபோல இந்தாண்டு கொடை விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 10-ம் திருநாளன்று தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாலையில் பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டாற்று பாலம் அருகே, விரதம் இருந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிலர் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்கிட, பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தார். பறவை காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்து தீப்பாச்சி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கொடை விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
    • 25-ந்தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தகோவிலிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வதால் 'பெண்களின் சபரிமலை' என போற்றப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசி கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    எட்டாம் கொடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    • 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
    • ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.

    எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.

    • நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
    • வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.
    • அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை, நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

    மாலையில் தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

    மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நேற்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை இந்த பூஜை நடைபெறும்.

    வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    வலிய படுக்கை பூஜை நடந்த போது கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் சரண கோஷம் எழுப்பினர். இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.
    • நேற்று மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மெயின் ரோட்டில் சண்முகவிலாஸ் ரைஸ் மில் அருகில் அமையப்பெற்ற ஸ்ரீ இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் குடி அழைப்பு, மகா தீபாராதனை, நேற்று காலை 6 மணிக்கு மணிகண்ட பட்டர், ஆறுமுகநாத பட்டர் ஆகியோர் தலைமையில் எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜணம், கும்பபூஜை, வேதபாராயணம், கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தென்திருப்பேரை பஜாரில் அமைந்துள்ள சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனையுடன் மதியக்கொடை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரம் பிள்ளை, நடராஜ பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அம்மன் தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை நடக்கிறது.
    • 15-ந்தேதி பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    தக்கலை அருகில் உள்ள பத்மநாபபுரம், வாழவிளை அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் கொடைவிழா நேற்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், அலங்கார தீபாராதனை, இரவு திருவிளக்கு பூஜை, சமுதாய நலக்கூட்டம், அன்னதானம், மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தீர்த்த சங்கரணம், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், ஹோமம், நாளை(புதன்கிழமை) மாலை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை, 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், திரவ்யஷோமம், காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலையில் பஜனை, புஸ்பாபிஷேகம், தீபாராதனை, 14-ந்தேதி காலை 8 மணிக்கு பாறை இசக்கியம்மன் கோவில் பூஜை, 9 மணிக்கு பெருமாள்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 15-ந்தேதி காலை 9 மணிக்கு பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், தொடர்ந்து சாமி வீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் வேலுதாஸ் தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் தாணு, துணைத்தலைவர் ராமசாமி, செயலாளர்கள் சபரீசன், விஜயகுமார், ரவி, விழா கமிட்டி தலைவர் கண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • குரங்கணி சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி 60 பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட குரங்கணி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும், அதை தொ டர்ந்து மதியக்கொடையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெ ற்றது. இரவு 7மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.கொடை விழாவிற்கான ஏற்பாடு களை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    விழாவில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முத்து மாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திர சேகரன், கல்யாண சுந்தரம், ஜெயசங்கர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன் மற்றும் செல்வராஜ், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய முருகன், ராஜாராம், குணசேகரன், ரவி, முத்துக்குமார், பெரியசாமி, ராகவன், கேசவ மூர்த்தி, முத்து லிங்கம், ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×