என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabishekam"
- பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.
இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலின் இணையதளம் மற்றும் இத்துறைக்கான வலைதளங்களில் பக்தர்கள் வருகிற 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.
21ந் தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். உறுதி செய்யப்பட்ட மின் அஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ந் தேதி முதல் 24ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அந்த கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு வருபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் சேவைக்கு சலுகை வழங்கப்படாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பழனி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்துக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும் கும்பாபிஷேகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- நாளை காலை கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது.
- 23-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிந்துவிட்டது. மேலும் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முருகப்பெருமானின் சிறப்பை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தின் மேல் பகுதியில் முருகனின் ராஜா அலங்கார ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதுதவிர கோபுர கலசம், தங்கக்கவசம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் செப்பனிட்டு, அதில் 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், கோவில் ராஜகோபுர கலசங்கள், தங்கமயில் வாகனம் ஆகியவற்றுக்கு 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.
இதற்காக, மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனியில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து திருப்பணிகளும் இரவும், பகலுமாக நடைபெற்று வருவதால் தற்போது கோவில் வண்ணமயமாகி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
- புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது.
- வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த சில நாட்களாக கோவில் முழுவதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியது.
காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவின ர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிள க்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 23ந் தேதி முதல் தொடங்குகிறது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளுவார்.
வருகிற 26ந் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ந் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் நபர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அனுமதி அவரவர் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அதனை கோவில் நிர்வாகத்திடம் காட்டி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
நாளை மாலைவரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் வருகை தருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19ந் தேதி) நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நேற்றுமுதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. பழனி மலைக்கோவில் மற்றும் உட்புற சன்னதிகளில் உள்ள 50 கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றுகாலை 9 மணிக்கு நன்மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், விநாயகர் அகவல், முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாமவேள்வி, ஞானசிறுவர்கள் வழிபாடு, நிறைவேள்வி ஆகியவை நடைபெற்றது.
மேலும் கந்தபுராணம், திருப்புகழ், வேல்விருத்தம், மயில் விருத்தம், திருமுறை முற்றோதல் ஆகியவையும் நடைபெற்றது. இன்றுமாலை 7ம் கால வேள்வி வழிபாடு துவக்கம் ஆணைமுகன் வழிபாடு, முளைப்பாழிகை இறைவழிபாடு, மங்கல இசை, அறுசுவை காரங்கள் சமித்து ஆகிய 96 ஆகுதி வேள்வி ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலிருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்கள் எடுத்து பாதையாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.
இதேபோல பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இணையத்தில் நேற்று தொடங்கி இன்றுமாலையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இவர்கள் பழனி நோக்கி அரோகரா கோசம் முழங்க வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று திருஆவினன்குடி கோவில் திருப்புகழ் மண்டபத்தில் வேழ வழிபாடு, ஆனிறைவழிபாடு, ஏழுபரி வழிபாடு, நறும்புகை விளக்க படையல், திருவொளி வழிபாடு நடைபெற்றது.
பழனி மலைக்கோவிலில் தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் அடைதல், பேரொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 2 யானைகளுக்கு கஜ பூஜையும், 7 குதிரைகளுக்கும், பசுமாடுகளுக்கு கோபூஜையும் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றுமாலை திருமகள் திருவழிபாடு, 16 திருக்குடங்களில் திருமகளை பூஜித்தல், 16 வித வேள்வி, 16 கன்னியர், 16 மங்கள வழிபாடு நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பழனிகிரி வீதி, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி நகராட்சி, தேவஸ்தானம், வருவாய்த்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த இந்த பணியில் போலீசார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
- 24-ந்தேதி முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது. 23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது. 24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.
25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.
கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
- கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டன. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை யொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் பரிவார தெய்வங்கள் என அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தகுடங்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.
இவை மேளதாளங்களுடன் திருமுறை ஓதுதலோடு உலாவருகிறது. பின்னர் யாகசாலைக்கு செல்கிறது. அங்கு ஆதவன் வழிபாடு, மங்களஇசை, சூர்யகதிரிலிருந்து வேள்விக்கு நெருப்பு எடுத்தல் உள்பட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைதொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய்கனி, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால்,தயிர், சுண்டல், 12 விதமான மூலிகை குச்சிகளால் வேள்வி நடைபெறுகிறது.
பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கோவில் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமானால் பல மூலிகைகளை கொண்டு தயாரித்த நவபாஷணத்தால் செய்யப்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. அன்றைய தினம் ராஜகோபுரம், உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தது. மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
இதற்கிடையே கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதையடுத்து விநாயகர் பூஜை, விதை தெளித்தல், நறும்புகை, படையல், தீபாராதனை, நெய்வேத்தியம் நடைபெற்றது.
பின்னர் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று மங்கல நாண் அணிதல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் எழுந்தருளும் பொருட்டு ஐந்துவகை நூல் சுற்றி, பட்டாடை உடுத்தி சந்தனத்தால் கலசம் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் ஆனந்தவிநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தங்கவிமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய கலசங்கள் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
அதன்பிறகு மூலவர் சன்னதியில் அருட்சக்தியை கலசத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். மேலும் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் கலசங்கள் உட்பிரகாரம் வலம்வந்து பாரவேல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட ஆனந்தவிநாயகர், கைலாசநாதர் உள்ளிட்ட சக்தி கலசங்களுடன் மூலவர் கலசம் யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. பின்னர் மங்கல இசையுடன் யாகசாலையில் அங்கரிக்கப்பட்ட கும்ப மேடையில் கலசங்கள் வைத்து பூஜைகள் தொடங்கியது. பின்னர் விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது. பின்னர் மூலவர் கலசம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமறை, சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம் ஆகியவை பாடப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி சூரியனில் இருந்து அக்னி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சூரியக்கதிர்கள் குவிக்கப்பட்டு அக்னி எடுக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட அக்னி கோவிலில் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் அக்னி இடப்பட்டது. பின்னர் நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக உபயதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், இந்த விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. 20-ந்தேதி வரை 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். பின்னர் விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குலுக்கல் முறையில் கடந்த 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான 2 ஆயிரம் பேருக்கு செல்போன் எண், இமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் 23, 24-ந்தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் வேலவன் விடுதியில் அடையாள சான்றுடன் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று காலை 10 மணி முதல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தேர்வான பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள தேர்வானவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் இருந்தனர். இதனால் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமதிச்சீட்டை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இந்த அனுமதிச்சீட்டில் வரிசை எண், நேரம், நாள், எங்கு அமர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் கோவிலின் 'ஹோலோகிராம்' முத்திரை இருந்தது.
- மார்ச் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
- வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள சின்னணைந்தான்விளை பிச்சைகாலசாமி கோவிலில் கும்பாபிஷேகவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 7 மணிக்கு நவக்கிரக கலச பூஜை, 9 மணிக்கு சங்குதுறை கடற்கரையில் இருந்து சிங்காரி மேளம் முழங்க புனிதநீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 2-ம் நாளான நாளை(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், இரவு 9 மணிக்கு எந்திர ஸ்தாபனம், இரத்தின நியாசம், சிலை பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் சிற்றுண்டி வழங்குதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனை ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மூத்த வக்கீல் பாலகணேசன், வக்கீல்கள் பூர்ணிமா, ஆர்தர்பாரத், சங்கரசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், குடும்பத்தார்கள் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர். நண்பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம மாத்ரு சக்தி பூஜை, இரவு 9 மணிக்கு உதயகீதம் இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களும் மண்டல பூஜையை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு மேல் பஜனை, தீபாரதனை, சிறப்பு அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பிச்சைகாலசாமி கோவில் நிர்வாகக்குழு தலைவர் அய்யப்பன், செயலாளர் பிரதீஷ், பொருளாளர் சந்திரகுமார், துணைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் மோகன், கணக்காளர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.
- இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கும் கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள், மிராஸ் பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைக்கு சூரிய கதிரில் இருந்து அக்னி எடுத்தல், யாகசாலையில் இடுதல் ஆகியவை நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து தெய்வ சன்னதிகளிலும் கலசத்தில் அருட்சக்தி கொணர்தல் நடந்தது.
பின்னர் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் உருவத்துக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் திருமறை, கட்டியம், கந்தபுராணம், கந்தர் அலங்காரம் பாடி வழிபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, கணபதி பூஜை, கலசபூஜை நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள், பக்தர்களால் திருப்புகழ், திருமுறை பாடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, ஐந்து மந்திர ஆறங்க யாகம் நடந்தது. அதையடுத்து மூலிகை பொருட்கள், விதை, வேர், தண்டு, இலை, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுவகை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடந்தது.
பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, மலர்களை கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.
அதையடுத்து நேற்று மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது மூலிகைகள், வாசனை திரவியங்கள், தேன், இலை, தண்டு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகம் நிறைவு பெற்று தீபாராதனை, மலர் வழிபாடு, கட்டியம், கந்தபுராணம், திருமுறை, முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. முடிவில் நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- இன்று இரவு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி நடக்கிறது.
- நாளை இரவு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா நடக்கிறது.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலையில் பழையாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் எடுத்த வரும் நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல ஆறுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர்களுடன் கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கால யாக வேள்வி தொடங்கியது.
விழாவின் 4-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு பாவனாபிஷேகம், தொடர்ந்து 2-ம் யாகசாலை பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சமய சொற்பொழிவு, மாலை 6.30 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி ஆகியவை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து பூர்ணகுதி, தீபாராதனை, காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக மூகூர்த்தம், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடக்கிறது.