என் மலர்
நீங்கள் தேடியது "Loss"
- திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
- புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.
புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.
சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.

புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.
புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத் !
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.
புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.
இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.
- போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் உடபட பல்வேறு தொழில்கள் முடங்கின
- பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கின. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.
பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் மைரோசாப்ட் மற்றும் Crowdstrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.மைக்ரோசாப்ட் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் Crowdstrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் Crowdstrike நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் [சுமார் ரூ.75,350 கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.
- இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
- கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பலசரக்கு டெலிவரி நிறுவனமான செப்டோ [Zepto] - உடைய வருவாய் நடப்பு நிதியாண்டில் 120 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.2,026 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் அது ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது.
செப்டோ தனது ஊழியர்களுக்காக இந்த நிதியாண்டு ரூ.426.30 கோடி செலவிட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட ரூ.263.45 கோடியை 62% அதிகமாகும்.
ரூ.492.65 கோடியை கிடங்குகளுக்காக செலவிட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.344.79 கோடியை விட 43% அதிகமாகும்.
விளம்பரங்களுக்கு ரூ.303.5 கோடி செலவிட்டுள்ளது, முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ 215.8 கோடியிலிருந்து செலவு விகிதம் 41% அதிகரித்துள்ளது.

மொத்தமாக செலவுகள் கடந்த நிதியாண்டில் ரூ 3,350 கோடியாக இருந்தது. அதுவே இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் செப்டோவின் செலவினங்கள் அதிகரித்துள்ளபோதிலும் அதிக லாபம் காரணமாக நிறுவனத்தின் நஷ்டம் [நிகர இழப்பு] 2% வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
இந்த தரவுகளை செப்டோ தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா இந்த நிதி அறிக்கையை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறைஅருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்க த்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயி களும், ஆலை தொழிலாளர்களும் வேலை இன்றி பாதிக்கபட்டனர், ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் எனக் கூறியும்,
இவரை தற்போது ஆய்வு குழுவில் இருப்பதால் இவர் ஆலைக்கு எதிராக தான் செயல்படுவார்.எனவே இந்தகுழுவில் இருந்து நீக்க வலியுறு த்தியும், மக்களால் தேர்ந்தெடு க்கபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், ஆலை இயங்காது என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் காசிநாதன் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பா ட்டத்தில்நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசா யிகள் கலந்து கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் எதிரா கவும், எம்.எல்.ஏராஜ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
- விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
- 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.
கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவரது மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர்.
சவுந்தர்யா திருமணமாகி கணவருடன் காந்தி மாநகரில் வசித்து வருகிறார். நாகராஜூம், ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழை பழம் வியாபாரம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த நாகராஜ் ,அவரது மனைவி தேன்மொழி, மகன் ஆனந்தகுமார் ஆகியோர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். அப்போது சவுந்தர்யா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.
போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தாய் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த குமார் பரிதாபமாக இறந்தார்.
நாகராஜ், தேன்மொழி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்தும் பீளமேடு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நாகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் வியாபாரத்துக்காக மொத்த வியாபாரிகள் சிலரிடம் கடனுக்கு பழங்களை வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நாகராஜ், தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அவற்றை குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி எனும் வாட் வரியை மாநில அரசுகளும் கணிசமாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இதையடுத்து பெட்ரோல்- டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வரிகள் விதிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு மிக குறைந்த விலையில்தான் பெட்ரோல்-டீசலை வினியோகம் செய்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.39.21க்குதான் வழங்குகிறது. ஆனால் அந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலையை 2 மடங்கு அதிகரிக்க செய்து விடுகின்றன.
மத்திய அரசு விதிக்கும் கலால் வரிப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.19.48 கிடைக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33ஐ மத்திய அரசு வருவாயாக பெறுகிறது. இந்த வரிக்கு பிறகு மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப வாட் வரியை விதிக்கின்றன.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பையில் 33.12 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மிக குறைவாக 26 சதவீதம்தான் விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெட்ரோல்- டீசல் மீது 32.16 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக கணக்கிட்டால் மாநில அரசுகள் சுமார் 30 சதவீதம் வாட் வரியை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கின்றன.
இதனால்தான் கடந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருந்தது.
பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் மிக எளிதாக வருவாய் வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றை இழக்க மனமில்லாமல் உள்ளன. மாநில அரசுகளை பொறுத்த வரை ராஜஸ்தான், ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தங்களது வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று வாட் வரியை குறைத்துள்ளன.
ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை கலால் வரியை குறைக்க இயலாது என்று திட்டவட்டமாக 2 தடவை அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்து விட்டது. இந்த பிரச்சனைகள் இன்னும் சில தினங்களில் தானாக சரியாகி விடும்.
இதற்காக கலால் வரியை குறைத்தால் அது மத்திய அரசின் நிர்வாக பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும்.
அப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் போனால் அதுவும் மக்களைதான் பாதிக்கும். எனவேதான் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும். இது வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தபோது இத்தகைய முடிவைதான் அதிகாரிகள் எடுத்தோம். தற்போதும் அதே முடிவை தான் கையாண்டு உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். #PetrolDieselPriceHike #CentralGovt
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சமீபத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.
பொதுக்கூட்டங்களிலும், காணொளி காட்சிகள் மூலம் விவசாயிகள் பொதுமக்களுடன் மோடி உரையாடி வருவது அனைத்தும் கண் துடைப்புக்காக மட்டுமே எனவும் சவ்கதா ராய் குற்றம்சாட்டியுள்ளார். #NoConfidenceMotion
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.
சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CAGreport