என் மலர்
நீங்கள் தேடியது "lunch"
- கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.
- எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம், பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, கந்தன்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள இளைஞ ர்களால் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, தினசரி மதிய உணவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, வள்ளலார் பிறந்த நாளான நேற்று மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலமாக, அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கூடலூர் நகர தி.மு.க சார்பில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடலூர் நகர கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினர். பின்னர் மாக்கமூலவில் உள்ள மனம் நலம் குன்றிய மானவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. விழாவில் கூடலூர் நகர துணை செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், நாகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், மணிகண்டன் பொருளாளர் தமிழழகன், தலைமை கழக பேச்சாளர் தங்கராஜ், மாவட்ட அமைப்பாளர் ரெனால்ட், முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், நகர மன்ற தலைவி பரிமளா, வார்டு கழக செயலாளர் சுப்பையா, சிவசாமி, அசைனர், ராஜகோபால், சின்னையன், ராஜு, கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், பிரகாஷ், ராஜா, கருணாநிதி, சடைய பிள்ளை, இஸ்மாயில், கனகராஜ், தாகீர், பரசுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா, சத்தியசீலன், தனலட்சுமி, ஆபித பேகம், கௌசல்யா, மும்தாஜ், சகுந்தலா, நிர்மல், உஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் அன்னபுவனேஸ்வரி, இளைஞர் அணி விஜயகுமார், ராமன், அபுதாகிர், புட்ராஜ், நாகேஷ், செல்வபாரதி, செல்லதுரை, நடராஜ், சந்தோஷ், மதிவாணன், இஸ்மாயில், சிங்கப்பூர், கணேசன், ஜெகநாதன், ஆசாத், செல்வநாதன், மணிவண்ணன், தொ.மு.ச நிர்வாகிகள் ரகுபதி, சிவக்குமார், சரவணகுமார், மாணிக்கம், ராஜேந்திரன், அந்தோணிகுருசு, ஜெயக்குமார், கலைக்குமார், விஜயகுமார், கண்ணன், ஜோசப், அசரப் சக்திவேல், புஷ்பராஜ், மூசா, செல்லதுரை, சாமிநாதன், சாமுவேல், லோகநாதன், குமார், தம்பிராஜ், பிரகாஷ், ராமச்சந்திரன், தர்மராஜ், சிவராமன், பரமன், செல்வராஜ், சிவன், ஜோசப், பெர்னாட், ராணி, செல்லம், ருக்மணி, சசிகலா, கலைமலர், சாரா, நூர்ஜகான், லட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக 4 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
- மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.
மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.
உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.
ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
- அ.தி.மு.க. வினர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினர்.
- அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
அ.தி.முக. 51-வதுஆண்டு விழாவையொட்டி சிவகங்கை நகர் அ.தி.மு.க. வட்டசெயலாளர் சேதுபதி ஏற்பாட்டில் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் சிவகங்கை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், காமராஜர் காலனி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவை வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்து பீல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அருமடல் ரோட்டில் அய்யனார் கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 160 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கு சமையல் அறையும் கிடையாது. சமையலரும் இல்லை.
இதனால் இப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அரை கிலோ மீட்டர் தூரம் சென்று மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தினமும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதற்காக சாலை யில் தட்டை கையில் ஏந்திக்கொண்டு தொடக்கப்பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் பள்ளியில் சாப்பிட்டு விட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.
மாணவ-மாணவிகள் தினமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மழை பெய்யும் போது மாணவ- மாணவிகள் தொடக்கப்பள்ளிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு வருவதால் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் உணவு இடைவேளையில், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதும், படிப்பது, எழுதுவது என்று தங்களது பணிகளை செய்வார்கள். ஆனால் இதை மாணவர்கள் செய்வதற்கு கூட நேரம் இல்லை. மேலும் மாணவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிட்டு வரும் போது விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே சமையல் கூடம் விரைந்து அமைத்து, சமையலரை நியமித்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மாணவர் களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை காங்கிரஸ் அரசு. மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்குவது, தனியார் மயத்தை ஊக்குவிப்பது, மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற சேவைக்கட்டணங்களை பெருமடங்கு உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவதுஎன்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கிவரும் அட்சய பாத்திரா அறக்கட்டளை என்ற தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மேற்கொண்டுள்ளது.
மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின் தற்கொலைக்கு ஒப்பான இத்தகைய செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?
இந்த ஒப்பந்தம் குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைகுழு, ஆசிரியர்கள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்,ஊட்டச்சத்து நிபுணர்கள், தற்போது இப்பணியை செய்துவரும் ஊழியர்களிடம்கருத்து எதையும் கேட்காமல், அடிப்படையான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இது அப்பட்டமான நமது உணவு பாரம்பரியத்தின் மீதும், உணவுஉரிமை மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். உடனடியாக தனியாரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மதிய உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
டெல்லியன் நரேலா பகுதியில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல் உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலியால் துடித்தனர்.
இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மூத்த டாக்டர் தெரிவித்தார். உணவில் ஏதாவது விஷ பூச்சி விழுந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சனிக்கிழமை டெல்லி கிச்ரிபூரில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 2 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #DelhiMiddayMeal
மத்தியபிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு நாளும் மதியம் ஊட்டச்சத்து உணவு தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சாகர் மாவட்டத்தில் உள்ள செம்ராபக் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவுக்குள் 4 எலிகள் செத்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்குள் சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு விட்டது. அவர்கள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பாட்டுக்குள் எலி செத்து கிடந்தது தெரிந்ததும் அந்த குழந்தைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.
அவர்களில் 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துணை கலெக்டர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சமையல் ஊழியர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews