என் மலர்
நீங்கள் தேடியது "Lungi"
- ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.
- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. இந்த விசைத்தறி கூடத்தில் லுங்கி, துண்டு உள்ளிட்டடை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.
கடந்த வாரம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகப்பு, விற்பனை தொய்வு, உற்பத்தியாளர்கள் தினமும் அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வரு கின்றனர். தற்போது புதிய கூலி உயர்வால் நஷ்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் தனியார் மண்டபத்தில் பள்ளிபாளையம் வட்டார லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் பி.எஸ்.கே (எ) கந்தசாமி தலையைில் நடந்தது. இதில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் உற்பத்தி செய்யும் லுங்கி, மற்றும் துணிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, பள்ளி பாளையம் வட்டார லுங்கி உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் பி.எ ஸ்.கே. (எ) கந்தசாமி கூறியதாவது:-
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகரிப்பு, பராமரிப்பு செல்வு, மின்கட்டணம், இதர செலவு களால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. புதிய கூலி உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும். இதனை சமாளிக்க, வேறு வழியில்லா மல் உற்பத்தி செய்யும் லுங்ககளுக்கு, ஒரு மீட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும். அப்போது ஒரளவுக்கு சமாளிக்க முடியும். ஆனால், தற்போது சூழ்நிலை பொறுத்து, ஒரு ரூபாய் மட்டும் உயர்த்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
- உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
- . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
- 98 ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது.
- டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது.
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கர்நாடக இசையில் பெரியார் குறித்த பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கர்நாடக இசை பிராமணமயக்கப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக பேசி வரும் டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசையை எல்லாரும் பயிலும் வகையில் சேரிகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வந்தார்.
கலைப் பன்முகத்தன்மைக்கு எதிரான சூழல் இருப்பதால் இனி மார்கழி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னதாக டி.எம்.கிருஷ்ணா அறிவித்தார். அதன்படி கடந்தாண்டு வரை மார்கழி இசைக் கச்சேரிகளில் அவர் பாடல்கள் பாடவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் சென்னை மார்கழி கச்சேரிகளில் பங்கேற்பேன் என்று டி.எம். கிருஷ்ணா அண்மையில் அறிவித்தார்.
அதன்படி மியூசிக் அகாடமியின் 98ஆவது ஆண்டு மார்கழி கச்சேரிகளின் ஒரு பகுதியாக டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி நேற்று நடைபெற்றது. டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியை காண ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்தது. இதனால் அரங்கிற்கு வெளியே நின்றபடியே நிறைய ரசிகர்கள் கச்சேரியை கண்டு களித்தனர்.
மார்கழி இசைக் கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாரம்பரிய மரபுகளை உடைக்கும் விதமாக லுங்கியும் பீச் ஷர்ட் அணிந்து வந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இசை கச்சேரியில், "ராமரோ, கிறிஸ்துவோ, அல்லாவோ எல்லா இறையருளும் ஒன்றுதான் எல்லா மனிதரும் ஒன்றுதான் என்று பொருள்படும் பாடல்களை டி.எம். கிருஷ்ணா பாடினார். குறிப்பாக பெருமாள் முருகன் எழுதிய 'சுதந்திரம் வேண்டும்' பாடலை அவர் பாடியது அனைவரையும் கவர்ந்தது.