என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahabharata"

    • மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், பாரம்பரியம் மிக்க மகாபாரத நாடக பெருவிழா கடந்த 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக "துரியோதனன் படுகளம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இவ்விழாவைகான கோவளம், நெம்மேலி, கேளம்பாக்கம், திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த சென்னைவாசி பக்தர்கள் பாரம்பரிய மகாபாரத கூத்து கலைஞர்களை வியப்பாக பார்த்து அவர்களுடன் நின்று செல்பி, போட்டோ எடுத்துச் சென்றனர்.

    • சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.
    • துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

     1. கர்ணன்-சூரியன் அம்சம் அல்லது சூரிய அவதாரம்.

    2. அர்ஜுனன் - இந்திரன் அம்சம் அல்லது நரன்.

    3. பீஷ்மர்- பிரபாசன் (அஷ்டவசுகளில் இறுதியானவர்).

    4. கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    5. சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.

     6. சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    7. துருபதன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    8. கிருதவர்மன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    9. விராடன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    10. திருதிராஷ்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன்.

    11. பாண்டு-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    12. விதுரர்-தர்மதேவதையின் அம்சம்.

    13. துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

    14. துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள்.

    15. துரோணர்-பிரகஸ்பதி அவதாரம் (குரு பகவான்).

     16. தர்மன்-யமதர்மன் அம்சம்.

    17. பீமன்-வாயு பகவான் அம்சம்.

    18. அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன்.

    19. நகுலன் சகாதேவன் - அஸ்வினி தேவர்கள் அம்சம்.

    20. அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்).

    21. பிரதிவிந்தியன், சுகஸோமன், ஸ்ருதகீர்த்தி,சதானிக்கன் கருதசேனன். (பாஞ்சாலி புதல்வர்கள்)- விஸ்வதேவர்கள் கூட்டத்தை

    சேர்ந்தவர்கள்.

     22. பலராமன்-ஆதிசேஷன் அவதாரம்.

    23. கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம்.

    24. பரசுராமன்- விஷ்ணு அவதாரம்.

    25. ருக்மணி- லட்சுமி அவதாரம்.

    26. பிரத்தியும்னன் (கிருஷ்ணன் மகன்)- சனத்குமாரர்.

    27. பாஞ்சாலி - நளாயினி.

    28. குந்தி- சித்தி என்னும் தேவஸ்ரீ.

    29. மாதிரி- த்ரிதி என்னும் தேவஸ்ரீ.

    30. காந்தாரி- மதி என்னும் தேவதை.

     31. திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம்.

    32. ஜராசந்தன்- விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன்.

    33. சிசுபாலன்- ஹிரண்யகசிபு.

    34. சல்லியன்- பிரகலாதன் தம்பி ஹம்சலாதன்.

    35. திருஸ்தகேது (சிசுபாலன் மகன்)- பிரகலாதன் தம்பி அனுகலாதன்.

    36. பகதத்தன் (நரகாசுரன் மகன்)- பாஷ்கலங் என்னும் அரக்கர் தலைவன்.

    37. உக்கிரசேனன்- சொர்ணபானு என்ற அரக்கன்.

    38. பக்லிகன் (பீஷ்மர் பெரியப்பா) - அகர்னன் என்னும் அரக்கமன்னன்.

    39. ருக்மி, ஏகலைவன், ஜனமேஜயன்- கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம்.

    40. கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான்).

    41. சுபத்திரை- விஷ்ணு மனதில் தோன்றிய யோக மாயை.

    42. சிகண்டி- (அம்பை) அதற்கு முன் அரக்கன்.

    43. சாந்தனு-100 ராஜசூய யாகம் செய்த மஹாபிஷக்

    • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன.
    • மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது.

    மகாபாரத யுத்ததின் போது, கர்ணன் தன் நண்பன் துரியோதனனின், பக்கம் நின்று போரிட்டான். ஆனால் கர்ணனை, பாண்டவர்களின் பக்கம் வந்து விடும்படி கண்ணன் உள்பட பலரும் அழைத்தனர். ஆனாலும் அவன் செல்லவில்லை.

    ஒரு கட்டத்தில், தான் துரியோதனனின் பக்கம் நிற்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற எண்ணம் அவன் ஆழ்மனதை துளைத்தது. தன்னுடைய இறுதி கட்டத்தில், நெஞ்சில் அம்பு பாய்ந்து, தன் முன் கிருஷ்ணன் விஸ்வரூபமாக காட்சி தருகையில், தன்னுடைய ஆழ்மனதை துளைத்த கேள்விகளை, கண்ணனிடமே கேட்டான், கர்ணன்.

    `கண்ணா.. என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்ற அவப்பெயருக்கு ஆளானேன். இது என் தவறா?. நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்கு கல்வி கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் பிராமணன் இல்லை. சத்ரியன் என்று தெரியவந்ததும், நான் படித்த அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டுவிட்டார். இது என் தவறா?

    ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரவுபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். என் தாயாரான குந்தி கூட, இறுதியில் தன்னுடைய மற்ற மகன்களை காப்பாற்றும் நோக்கத்தில்தான் என்னைத்தேடி வந்தார்.

    இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் நான் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனன் ஒருவன்தான் என்னிடம் அன்பு காட்டினான். அவனால் தான் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது. அதனால் அவன் பக்கம் நான் நின்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றான், கர்ணன்.

    அதற்கு பதில் அளித்த கிருஷ்ணர், `கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதில் இருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேட்டு வளர்ந்தாய். நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல்களுக்கிடையே வளர்ந்தேன்.

    நடக்க ஆரம்பிக்கும் முன்பே, என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, பயிற்சி இல்லை, ஆனால் எல்லோரும் இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்கிறார்கள்.

    நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது, நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான், ரிஷி சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்தேன்.

    நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ, விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை, கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

    ஜராசந்த்திடம் இருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையில் இருந்து தூரமாக என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.

    துரியோதனனுடன் போரிட்ட நீ வெற்றிபெற்றிருந்தால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கவுரவம் கிடைத்திருக்கும். ஆனால் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து யுத்தம் செய்ததால், எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

    கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சவால்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானது. எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம். எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம். எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியம்.

    நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள், நம்மை தவறான பாதையில் செலுத்துவதற்கான உரிமையை பெற்றுத் தருவதில்லை. நம் வாழ்க்கையில் கரடுமுரடான பாதை இருக்கலாம். அவற்றை காயப்படமல் கடப்பது பாதுகைகளால் அல்ல. நாம் கவனமாக எடுத்து வைக்கும் அடிகளால் மட்டுமே.' என்றார். கண்ணன்.

    • மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
    • படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.

    பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல்  வேட்டை நடத்தி வருகிறது.

    நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.

    இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

     

    கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.

    அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

    • சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடியுள்ளார்.
    • தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.

    மகாபாரத புராணத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் சூதாட்டத்தில் தனது மனைவி திரவுபதியை அடமானம் வைத்து தோல்வியடைவார். பின்னர் துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் சேலை கொடுப்பார்.

    இந்த புராண கதை தற்போது உத்தரபிரதேசத்தில் நிஜ கதையாக நடந்துள்ளது. ராம்பூர் நகரில் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.

    சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.

    இந்த கொடுமையை தடுத்த போராடிய மனைவியின் விரலை உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.

    இது தொடர்பாக மனைவி புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப் பதிந்துள்ள போலீசார் தப்பியோடிய கணவரையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

    மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

    • பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.
    • கிருஷ்ணர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

    இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரான் [Baran] நகரில் நடத்த சுயம்சேவக் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா அல்லது பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.

     

    இந்து என்ற பதம் பலகாலம் கழித்தே வழக்கத்தில் வந்தது.இந்துக்கள் அனைவரையும் அரவணைப்பவர்கள், அவர்கள் ஒற்றுமையோடு வாழ்பவர்கள். சாதி, மதம், மொழி என்ற பாகுபாடுகளைச் சண்டைகளை மறந்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.

    ஆனால் அனைத்துக்கும் கடவுளை எதிர்பார்க்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. ஆனால் தனது பிரச்சனைகளைத் தானே கவனித்துக் கொள்பவர்களுக்குத்தான் கடவுள் உதவி செய்வார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தயாராக இருந்ததை அறிந்தபின்னரே பகவான் கிருஷ்ணர் அவர்களுக்குத் தேர் ஓட்டினார்.

    அவர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் தங்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பாரத மாதாவைக் காப்பாற்ற நாம் முயற்சி எடுத்தாக வேண்டும். அந்த முயற்சியில் நம்மோடு அனைவரையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்று தெரிவித்தார். 

    • நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு.
    • பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான்.

    பாரதப் போர் நிறைவு பெற்றது. திரவுபதி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள். அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி கைம்பெண்கள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே தெருக்களில் தென்பட்டனர்.

    ஆதரவற்ற நிலையில் இருந்த பிள்ளைகள் பலரும், வீதிகளில் சுற்றித் திரிவதைக் கண்டு திரவுபதி மனம் வருந்தினாள். ஒரு போர்க்களம் மக்கள் வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டதை அவள் உணர்ந்தாள். அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் நின்று ஓரிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அப்போது அவள் நின்ற அறைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர். அவரைக் கண்ட தும் ஒடோடி வந்து அவர் பாதம் பணிந்து வணங்கினாள். கிருஷ்ணர், அவளின் தலையை தொட்டு ஆசீர்வதித்தார். திரவுபதியோ அழத் தொடங்கினாள்.


    திரவுபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்த கிருஷ்ணர். அங்கிருந்து விலகி ஓரிடத்தில் அமர்ந்தார். பின்னர் அவளிடம் கேட்டார் "திரவுபதி என்ன நடந்து விட்டது?"

    "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!" என்று விரக்தியாக பதிலளித்தாள், திரவுபதி.

    கிருஷ்ணரோ, "விதி கொடூரமானது பாஞ்சாலி, நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.

    முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய்... அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். உன் பழிவாங்கல் முடிந்தது. துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமல்ல, கவுரவர்கள் அனைவரும் மடித்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! என்றார்.

    "சகோதரா.. என் காயங்களை ஆற்ற வந்தீர்களா? அல்லது அதை இன்னும் கிளறி புண்படுத்த வந்தீர்களா?" என்று கோபமாக கேட்டாள் திரவுபதி.


    கிருஷ்ணரிடம் என்றும் மாறாத புன்னகை உதித்தது. "திரவுபதி, உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்தேன். எல்லாம் நமது தொலைநோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்' என்றார். "இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் கிருஷ்ணா.. அனைத்துக்கும் நான்தான் பொறுப்பா?" என்றாள், திரவுபதி.

    "இல்லை திரவுபதி. நீ மட்டுமே காரணம் இல்லை.

    ஆனால், உன்செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்கள் நேர்ந்திருக்காது''

    "நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?"

    நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி, உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து இருந்தால், ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.

    குந்தி உன்னை ஐந்து பேருக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை, ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.

    உன் அரண்மனையில் துரியோதனனை பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்' என்று அவமதித்தாய், அவ்வாறு நீ சொல்லாமல் இருந்திருந்தால். துரியோதன சபையில் உனக்கு நேர்ந்த அவமானத்தை தவிர்த்திருக்கலாம்.

    நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு தான் திரவுபதி. பேசுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்.


    பற்களில் விஷம் இல்லாமலேயே, பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். இப்போது உனக்கு புரிகிறதா திரவுபதி?" என்று தன்னுடைய விளக்கத்தை அளித்தார். கிருஷ்ணர்.

    நாம் எப்போதும் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் நம் வார்த்தைகள் புண்படுத்திவிடக்கூடாது என்று திரவுபதி உணர்ந்துகொண்டாள்.

    • பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர்.
    • மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.

    குருச்சேத்திர போர்க்களத்தில் உடல் முழுவதும் அம்புகள் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கைகளாக மாறிய நிலையில் படுத்திருந்தார், பீஷ்மர். அவரது உடல் முழுவதும் வேதனையில் துடித்தது.

    பீஷ்மரின் தந்தை, நீ விரும்பும் நேரத்தில் தான் உன் உயிர் பிரியும்' என்ற வரத்தை பீஷ்மருக்கு அளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் உடல் அடையும் வேதகனையால், தன் உயிர் இப்போதே பிரிந்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது.


    அப்போது அங்கு வந்த வியாசரிடம், தன்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு வியாசர். "ஒருவர் மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.

    நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது, அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். அதைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என்றார்.

    சிறந்த புத்திசாலியான பீஷ்மர், கவுரவ சபையில் திரவுபதிக்கு அநீதி நிகழ்ந்த போது, அதனை கண்டும் காணாமல் இருந்ததால், தனக்கு ஏற்பட்ட விளைவு இது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். அதனால் வியாசரிடம். "இதற்கு பரிகாரம் ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார்.


    உடனே வியாசர், "ஒருவர், 'தான் செய்தது மகா பாவம்' என்று உணர்ந்து வருந்தும்போதே, அவரது பாவம் அகன்றுவிடும். அதேநேரம் திரவுபதி, கவுரவ சபையில் அனைவரும் முன்னிலையில் காப்பாற்றும்படி கதறும் போது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பாராததுபோல் இருந்த உன் கண்கள். இது அநீதி என்று சொல்லத் தவறிய உன் வாய், அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது? கெட்டது எது? என்று சிந்திக்கத் தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றிற்கு தண்டனை உண்டு. அந்த வேதனையைப் போக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்றார்.


    பின்னர் எருக்கம் இலைகளைக் கொண்டுவரச் செய்து, பீஷ்மரின் கண், காது, வாய், கை,கால், தோள், தலை ஆகிய 7 அங்கங்களையும் அந்த எருக்கம் இலை வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தான் நினைத்த நொடியிலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார்.

    அப்படி அவர் மரணித்த தினம், ரத சப்தமிக்கு மறுதினமான 'அஷ்டமி திதி' ஆகும். எனவே அதனை 'பீஷ்மாஷ்டமி என்பார்கள்.

    பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். எனவே பீஷ்மாஷ்டமி அன்று, புனித நீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கும், தன் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமையும், வாழ்வில் இன்பம் நிலைபெறும் என்பது ஐதீகம்.

    • "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?
    • ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.

    பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் அறிவித்தார். இதன்பின் ரன்வீர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.

    ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.

    இந்நிலையில் "மகாபாரதம்" சீரியலில் பீமனாக நடித்த முன்னாள் WWE மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார், ரன்வீருக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "ரன்வீரை போன்றவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். நான் அவனை எங்கேயாவது சந்தித்தால், யாரும் அவனை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது" என்று மிரட்டியுள்ளார்.

    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர் - கிருதசி தம்பதியரின் மகனான துரோணர் பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.
    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான்.

    இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

    இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.
    உத்தரப்பிரதேசத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, மகாபாரதம் காலத்திலேயே ஊடகத்துறை இருந்தது என கூறியுள்ளார். #DineshSharma #Journalism #Mahabharata
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் தினேஷ் சர்மா கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அஸ்தினாபுரத்தில் அமர்ந்தபடி, போரின்போது பறவையின் பார்வையின் வழியே போர் நடப்பதை சஞ்சயா விவரித்த நிகழ்வை எடுத்துரைத்து, அப்போது இருந்தே ஊடகத்துறை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நேரலை இல்லாமல் எவ்வாறு விளக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், கூகுள் இப்போது வந்தது. ஆனால் நாரதர் அந்த காலத்திலேயே கூகுளாக செயல்பட்டவர். ‘நாராயணா’ மந்திரம் ஓதியபடி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செய்திகளை சேர்க்கக்கூடியவர் நாரதர் என கூறினார்.

    சமீபத்தில், இண்டர்நெட், நவீன அறுவை சிகிச்சை, புவி ஈர்ப்பு தத்துவம் போன்ற அனைத்தும் பண்டைய காலங்களில் இந்தியாவில் தோன்றியது என பா.ஜ.க. தலைவர்கள் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #DineshSharma #Journalism #Mahabharata
    ×