என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manabangam"

    • கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
    • அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    கடலூர்:

    :கடலூர் பாதிரிக் குப்பத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவரது மாமா சுகுமார் மகள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது சூர்யாவிற்கும் சுகுமாருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா, அவரது மனைவி அருளரசி மற்றும் உறவினர் செல்வகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கடலூர் அடுத்த கண்ணாரப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வழி மறித்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.    மேலும் அருளரசியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா மற்றும் அவரது உறவினர் செல்வகுமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரண மாக அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அருளரசி கொடுத்த புகாரின் பேரில் சுகுமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரத் (28) குமரன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்
    • அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த வழக்கில், அப்போதைய எஸ்.ஐ உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றால். ஆனால் ஊர் மக்கள் அவரை மீட்டனர்.

    பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

    ரங்கசாமி, வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.36,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

    • இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இளையராஜாவிடம் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் குடிபோதையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×