என் மலர்
நீங்கள் தேடியது "Margazhi month"
- திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
- திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
திண்டுக்கல்:
தனுர்மாதம் எனப்படும் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் நடக்கும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன்பிறகு காலசந்தி, சிறுகாலசந்தி மற்றும் விழா பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கோவில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மார்கழி மாதம் முழுவதும் இந்த பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.
- சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது.
- விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் 12-ம் ஆண்டு தனுர் மாத (மார்கழி) மாத சிறப்பு பூஜைகள் கடந்த மார்கழி 1-ந் தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலையில் 5 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, சென்னிமலை முருகப்பெருமான் மூலவர், உற்சமூர்த்திக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
பின்னர் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. அப்போது பசுவுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கலச பூஜை, யாக பூஜைகள் நடந்தேறி, மூலவர், உற்சவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் இன்று நிறைவு பூஜை மற்றும் போகிப்பண்டிகை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடாச்சலம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- மார்கழி மாதம் `தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் `தனுர் மாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான், வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.
மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளைத் தரும்.
- ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே இது மார்கழி மாதம்.
- ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி
பாடல்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே ! இது மார்கழி மாதம். முழு நிலவு ஒளி வீசும் நாள். இந்த நாளில் நீராடச்செல்வோம். கூர்மையான வேல் உள்ளவனும், பகைவர்களுக்கு கொடுமை செய்பவனும் ஆன நந்தகோபனின் குமாரன், அழகு நிறைந்த கண்களைக் கொண்ட யசோதை பிராட்டிக்கு இளம் சிங்கம் போன்றவன், கார்மேகம் போன்ற உடல் அமைந்தவன், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று பிரகாசிக்கும் முகத்தையும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், நாம் விரும்பிய வரத்தைத் தருவான். அதனால் உலகத்தார் அனைவரும் புகழும் வண்ணம் நீராடி மகிழ்வோம்; வாருங்கள்!
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்
ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி! தொடக்கமும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான். ஒளிவடிவான அவனைப்பாடினோம். அந்த பாடலைக் கேட்ட பின்பும் நீ உறங்குகின்றாயே. உன்னுடைய காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? சிலம்பணிந்த இறைவனின் திருப்பாதங்களை நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்ட ஒருத்தி, அவன் நினைவில் விம்மி விம்மி அழுது தன்னை மறந்தாள். பின்னர் மலர் படுக்கையில் இருந்து புரண்டு எழுந்து, எதுவும் செய்யமுடியாமல் விழுந்து விட்டாள். இறைவனிடம் அவள் கொண்ட பக்தி நிலை அப்படியானது. ஆனால் எங்கள் தோழியாகிய நீயோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இனியாவது எழுந்து வந்து இறைவனைப் பாடுவாய்.
- விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- சொர்க்க வாசலின் வழியாக நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும்.
பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு பல விழாக்கள் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம்பெற்ற முக்கியமான பக்தித் திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று 'சொர்க்க வாசல் நுழைதல்' என்ற நிகழ்வு விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி என்று வரும்பொழுது சொர்க்க வாசலை திறந்து வைப்பார்கள். ஆண்டு முழுதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் சேரும்.

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள். இவ்வாறு புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில், நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ரொக்கத்திற்கு' முக்கியக்கவம் கொடுக்கும் நாம், 'சொர்க்கத்திற்கு' முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதம் தான் வருகின்றது.
வைணவத் தலங்களில் எல்லாம் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழா மார்கழி 26-ந்தேதி (10.1.2025) அன்று வருகிறது.
பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை, நாம் 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம். அவருக்காக கட்டிய கோவிலை 'பெருமாள் கோவில்' என்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்துசேரும் என்பதை நாம் அனுபவத்தில் உணரலாம்.
காக்கும் கடவுள் என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு, ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றில் 16 திருநாமங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை:-
1. ஸ்ரீவிஷ்ணு
2. நாராயணன்
3. கோவிந்தன்
4. மதுசூதனன்
5. ஜனார்த்தனன்
6. பத்மநாபன்
7. ப்ரஜாதிபதி
8. வராகன்
9. சக்ரதாரி
10. வாமணன்
11. மாதவன்
12. நரசிம்மன்
13. திரிவிக்ரமன்
14. ரகுநந்தனன்
15. ஜலசாயினன்
16. ஸ்ரீதரன்

பதினாறு பேறுகளையும் வழங்கும், பெருமாளின் இந்த 16 பெயர்களையும் சொல்லி, வைகுண்ட ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும்.
மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'வைகுண்ட ஏகாதசி' என்று பெயர்.
ஏகாதசி அன்று அவல், வெல்லம் கலந்த நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், மதியம், இரவு பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.
பக்திப் பாடல்கள் பாடி வழிபடலாம். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி தினம் பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.
இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே! அஞ்சாது வரம்கொடுக்கும்
அழகுமகா லட்சுமியே வஞ்சமில்லா தெமக்கருள வருவாய் இதுசமயம்!
-என்று பாடுங்கள். எட்டுவகை லட்சுமியும் வேண்டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.