என் மலர்
நீங்கள் தேடியது "mariamman"
- கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
- ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர்.
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் சிதிலமடைந்து காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதை முன்னிட்டு நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் குடும்பத்தினர் அவர்களது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர். சாமி வைக்கும் பலகை, மர சிற்பங்கள், தேரில் சேதமடைந்த பகுதியை அகற்றிவிட்டு புதிய மரத்தில் சிற்பங்கள் செய்து பொருத்துதல், இரும்பு சக்கரங்களுக்கு பெயிண்டு அடித்து சீரமைத்தல் மற்றும் தேர் துணி ஆகிய பணிகள் நடந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் புனரமைக்கப்பட்ட தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. இதில் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பிரதிநிதி கல்யாண் ஜூவல்லரி ரங்கசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கவுன்சிலர் விநாயகமூர்த்தி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கசாமி, நகராட்சி உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாக அதிகாரி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜேஷ் குமார் எம்.பி.க்கு பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட தேரை பக்தர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
- இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது.
- நாளை இரவு மாரியம்மன் சாமி புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் நடக்கிறது.
ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி ஊர்வலம் சென்றது.
கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. பின்னர் காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் தீமிதி விழா நடந்தது.
விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிவித்தும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையுடன் தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கை நடக்கிறது. பின்னர் நாளை (சனிக்கிழமை) இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாண வேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல், சத்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 19-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 26-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மேலும் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.
இதையொட்டி சென்னிமலை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கம்பம் பிடுங்கப்பட்டு கோவில் கிணற்றில் விடப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பொங்கல் வைத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- கும்பாபிஷேக விழா நாளை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
- 11-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.
குறிஞ்சிப்பாடி அருகே திருத்தினை நகரில் பிரசித்தி பெற்ற சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹீதி ஆகியவை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் காலயாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஆஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.
பின்னர் 9 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர், காத்தவராயன், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
- அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா மற்றும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேக 12-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு தம்பதி சங்கல்பம், புண்யாக பஞ்ச கவ்ய பூஜை, ஆத்மசுத்தி, வேதிகார்ச்சனை, வேதபாராயணத்துடன் கணபதி பூஜை நடந்தது. 8 மணிக்கு யாக பூஜை, திரவிய யாகம், மகாபூர்ணாகுதியுடன் கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
இந்த சிறப்பு வழிபாட்டில் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஆண்டு விழாவையொட்டி கோவில் உட்பிரகாரம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், திருப்பூர் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூக நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர்.
- இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.
அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது.
- கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அடுத்த நாள் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. பின்னர் அவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.
அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. அதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு ஊன்றப்பட்டது. இதையடுத்து பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். அதன் பிறகு கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.
அதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். இதில் விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்கச் செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், இணைச் செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.
மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மனின் மின்தேர் வீதி உலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.
இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (24-ந் தேதி) வருடாந்திர தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 25-ந் தேதி காலை 6 மணி முதல் விசேஷ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முன்னதாக கரகம் பாலித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
26-ந் தேதி கங்கை பூைஜயும், 27-ந் தேதி இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 28-ம் தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
இவ்விழாவையொட்டி நீலகிரி மட்டும் இன்றி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கூடலூர் வழியாக இயக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையம், வருவாய், காவல் உள்பட அனைத்து துறையினரும் செய்து வருகின்றனர்.
- 7-ந்தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடக்கிறது.
- தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு லிங்க வடிவில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.
21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பின்னர் கம்பம் பழனி வையாபுரிகுள பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. பின்பு 3.50 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கம்பத்துக்கு பால், மஞ்சள்நீர் ஆகியவற்றை ஊற்றி வழிபட்டனர். விழாவில், வருகிற 28-ந்தேதி கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி மாலை 6.45 மணிக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 9-ந்தேதி இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
- அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று காலை வெண்ணை தாழி அலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான தசாவதாரம் நடந்தது. இதையொட்டி இரவு 10 மணி அளவில் தசாவதாரம் தொடங்கியது. இதில் காளி, மச்ச, கூர்ம என அடுத்தடுத்து தசாவதார காட்சிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.
இந்தநிலையில் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றதும் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் தொடங்க இருப்பதாகவும், அந்த திருப்பணிகள் முடிவு பெறும் வரை மாசித்திருவிழா நடைபெறாது என்றம் தகவல் பொதுமக்களிடையே பரவியது. இதுகுறித்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி கூறியதாவது:-
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும். இதற்கான வரைபடம் இந்துசமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரைபட ஒப்புதல் கிடைத்தவுடன் திட்ட மதிப்பீடு செய்யப்படும். மேலும் இன்னும் 2 மாதங்களில் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கும். அதன்பிறகு திருப்பணிகள் தொடங்கப்படும். அவ்வாறு திருப்பணிகள் தொடங்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு மாசித்திருவிழா எந்தவித தடையும் இன்றி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
- 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
- இன்று ஆனந்த சயன கோல லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், மஞ்சள் நீராட்டு உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று காலையில் கொடி இறக்கம் நடந்தது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணி அளவில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் ஆனந்த சயன கோல லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.