என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marxist communist party"

    • ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
    • 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில், நாளை 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கேரளா முதல்வர் பினராயி விஜ யன், பிருந்தா காரத், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்-திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா. சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங் கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர்.

    கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரு மான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள்-கருத்தரங்குகள் நடை பெறுகின்றன.

    இதில், 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமைச்சர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்பட இயக்கு நர்கள் உள்ளிட்ட ஆளுமை கள் பங்கேற்கின்றனர்.


    இதன்படி நாளை மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப் பறை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.

    3 ந்தேதி மாலை 5 மணிக்கு, கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை'என்றதலைப்பில் மாநில உரிமைகள் பாது காப்புக் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி சுதாகர். சி.பி.எம். அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

    4-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. திரைக் கலைஞர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக் கனி, வெற்றிமாறன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

    6-ந்தேதி மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்கு நர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பேசுகிறார்கள்.

    வரலாற்றுக் கண்காட்சி யை மூத்த ஊடகவியலாளர் என்.ராம் திறந்து வைக்கி றார். புத்தகக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. பரமேஸ்வரன் திறந்து வைக்கிறார்.

    6-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் என். சங்கரய்யா நினைவுத்திடலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    • 2-ந்தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது.
    • பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டின் முதல் நாளான 2-ந்தேதி காலை பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ. (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியார், ஆர்.எஸ்.பி. பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.

    சி.பி.எம். எம்.எல்.ஏ.வும், வரவேற்பு குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். வரவேற்பு குழு செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

    முன்னதாக 1-ந்தேதி தமுக்கம் மைதானத்தில் கட்சியின் வரலாற்று கண்காட்சி, பாசிசத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சி, புத்தக கண்காட்சி போன்றவைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது.

    இந்த கண்காட்சியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தோழர் என்.ராம், பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் போற்றப்படுகிற மற்றும் ஆக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகளின் சுடர் பெறப்படுகிறது.

    குறிப்பாக சென்னையில் இருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச்சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர், அதேபோல மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண் மணி தியாகிகள் நினைவு கொடி பிரசார இயக்கமாக எடுத்து வரப்பட உள்ளது.

    இந்த நினைவுச் சுடர் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1-ந்தேதி மாலை பெறப்படுகிறது.

    2-ந்தேதி காலை மேற்குவங்க மூத்த தலைவர் பீமன் பாசு கொடியேற்றி வைக்கிறார். அன்று மாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தினுடைய தலைசிறந்த கலை குழுக்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    திரைக்கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாடு நிறைவு பெறும் 6-ந்தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அன்று மாலை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    தமுக்கம் மைதானத்தில் 2-ந்தேதி நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ராஜூமுருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    3-ந்தேதி மாலை கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    4-ந்தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 5-ந்தேதி மாலை நடிகை ரோகினி வழங்கும் ஒரு ஆள் நாடகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் திரைப் பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.

    6-ந்தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முன்னதாக பாண்டி கோவில் அருகில் இருந்து துவங்கும் அணிவகுப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளனர். மாநாட்டையொட்டி அதற்கான அழைப்பிதழை மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.

    • ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
    • இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.

    உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக தொடங்ககோரி வருகிற 24-ந்தேதி சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் கையில் செங்கல் ஏந்தி போராட்டம்.
    • கோவையில் அடுத்த மாதம் இறுதியில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக கவர்னரை திரும்ப வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம், மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக தொடங்ககோரி வருகிற 24-ந்தேதி சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் கையில் செங்கல் ஏந்தி போராட்டம், கோவையில் அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதியில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளைத்தில் 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால பணி ஆகியவை ெதாடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும், 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், சொத்து வரி விகிதத்தை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழராஜா பட்டியில் நடந்த போராட்டத்திற்கு செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு முருகானந்தம், பால மஸ்தான் தலைமை தாங்கினர். வடக்கு மலையடிப்பட்டி 4 முக்கில் நடந்த போராட்டத்திற்கு செல்வம், சன்னாசி தலைமை தாங்கினர். தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு அய்யனார், குருசாமி தலைமை தாங்கினர்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த போராட்டத்திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில் நடந்த போராட்டத்திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர். ஆர்.நகரில் நடந்த போராட்டத்திற்கு பொன்னுசாமி, கார்த்திகா தலைமை தாங்கினர்.

    முனியம்மன் பொட்டலில் நடந்த போராட்டத்திற்கு மாரிமுத்து, பழனிச்சாமி தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடந்த போராட்டத்திற்கு ஜெகன், மைதிலி தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மூத்தநிர்வாகி கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடைகளில் விடுபட்ட 15 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    திருப்பூா் தெற்கு வட்டாட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மணிமேகலை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 53-வது வட்டத்துக்கு உள்பட்ட குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நியாயவிலைக்கடைகள் மாநகராட்சியின் 40, 41, 53, 54, 57 ஆகிய வாா்டுகளை உள்ளடக்கியதாகும். இந்த கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை பயனாளிகள் 21 ஆயிரத்து 916 போ் உள்ளனா். இதில் தற்போது 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    மீதமுள்ள 15 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை வரவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்துபவா்களாக உள்ளனா். எனவே எங்கள் பகுதியில் விடுபட்டுள்ள பொது மக்களுக்கு வேட்டி, சேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.
    • காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில்களை அதே கால அட்டவணைப்படி மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து சேலத்தில் ெரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசனிடம், மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன் (கோவை ), கே.சுப்பராயன் (திருப்பூா்) ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு சாா்பில் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில், நாகா்கோவில் - கோவை, கோவை - சேலம், சேலம் - கோவை ஆகிய 3 பயணிகள் ெரயில்கள் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்டன.பொது முடக்கம் நீக்கப்பட்டு நீண்ட கால தாமதத்துக்கு பிறகு சேலம் - கோவை, கோவை - சேலம் பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 5 மாதங்களாக இந்த ெரயில் முழுமையாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ெரயிலை மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும்.

    மேலும் பாலக்காடு - ஈரோடு, கோவை - நாகா்கோவில் ஆகிய பயணிகள் ெரயிலும், விரைவு ெரயிலாக பெயா் மாற்றப்பட்டு, ஏற்கெனவே அந்த ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்த பல புறநகர் ெரயில் நிலையங்களில் தற்போது நிறுத்தப்படாமல் இயக்கப்படுகின்றன. அத்துடன் மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.

    கல்லூரி, அலுவலகம், தொழில் சாா்ந்த பணிகளுக்கு செல்லக்கூடியவா்கள் ஆயிரக்கணக்கானோா் காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    ஆனால் தற்போது விரைவு ெரயில்களாக நேரம் மாற்றப்பட்டு நிறுத்தங்கள் குறைக்கப்பட்டதால், ஏற்கெனவே பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே அந்த ெரயில்களை மீண்டும் கொரோனாவுக்கு முன் இயக்கப்பட்ட அதே நேரத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    கோவை முதல் மதுரை வரை திருப்பூா், ஈரோடு வழியாக புதிய இண்டா் சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்க வேண்டும். கோவை - நாகா்கோவில் இரவு நேர விரைவு ெரயிலில், தூத்துக்குடி இணைப்பு ெரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சேவை நிறத்தப்பட்டு விட்டது. ஆகவே மீண்டும் இந்த இணைப்பு ெரயிலை இயக்க வேண்டும். திருப்பூா் ெரயில் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும்.கோவை - ராமேசுவரத்திற்கு தற்போது திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் வாராந்திர ெரயிலாக இயக்கப்படுவதை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் தேவைக்கு ஏற்ப இங்குள்ள ெரயில் நிலையத்தில் உரிய வசதிகளை பயணிகளுக்கு முழுமையாகச் செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர். 

    • மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது.
    • புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    ஊத்துக்குளி :

    வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமத்துவமின்மை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ந்து மத்திய அரசின் தாக்குதலாலும், பாஜக. அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, தொடரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மார்ச் 27,28 ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது. அதன்படி ஊத்துக்குளி தாலுகா, புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    எம்.தொட்டிபாளையம், தென்றல் நகர், சொட்டகவு ண்டம்பாளையம், ராஜீவ் நகர்,தெற்கு சாணார்பா ளையம், பல்லகவுண்ட ன்பாளையம் நால்ரோடு, கூனம்பட்டி, கூனம்பட்டிபுதூர் காலனி, ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், சுக்காகவுண்டன்புதூர் கா லனி, செங்காளிபாளையம், சுண்டக்காம்பாளையம், எம்.ஜி.ஆர்.காலனி, தாளப்பதி, விருமாண்ட ம்பாளையம், செங்கப்பள்ளி வரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் மற்றும் சிவராஜ், சந்திரமூர்த்தி, அர்ஜுனன், லிங்கப்பன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.
    • சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

    ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    • தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: - திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.

    ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.
    • சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

    இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    ×