என் மலர்
நீங்கள் தேடியது "Matrimony"
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை இளம்பெண் தேர்வு செய்துள்ளார்.
- பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண் தற்போது வேலைக்கு எதுவும் செல்லவில்லை. அவர் மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை தேர்வு செய்துள்ளார்.
மேலும் மேட்ரிமோனி மூலம் அவர் தேர்வு செய்த 14 பேரின் வயது மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் பட்டியலிட்டு அவர்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும், அந்த நபரை தேர்வு செய்ய உதவுமாறு குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், அந்த பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும்.
- 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா, எந்தத் திசை, கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திசையில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மணமகன் திசை குறித்து குறிப்பு இல்லை. இது ஓரளவுக்கு ஒத்துவரும்.
களத்ரதோஷம்:
1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .
2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.
3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு
4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம். களத்ர தோஷம் ஏற்படக் காரணம்:
1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.
2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.
3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.
4. லக்னத்தில் இருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
5. லக்னத்தில் இருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.
6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.
7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராகு அல்லது கேது இருத்தல்.
களத்ர தோஷ பரிகாரங்கள் :
`பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம். இது பழமொழி. பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல், கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா? இதுபோல், திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியவைகளை வணங்காமல், தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி, காளகஸ்தி, சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம்?
எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி, கௌரி பூஜைகள் செய்யலாம்.
தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.
- விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
- பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.
தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.
திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.
போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
- இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.
ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.
74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
- மனஉளைச்சலால், வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு தில்மில் மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் தனது மகன் பாலாஜிக்காக, தில்மில் என்கிற மேட்ரிமோனியில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து பதிவு செய்துள்ளார்.
தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
ஆனால், நாட்கள் ஆகியும் நிறுவனம் தரப்பில் இருந்து மணப்பெண்ணை தேடித் தரவில்லை எனத் தெரிகிறது. இதனால், கல்யாண் நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் மேட்ரிமோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
- உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது.
- வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது.
சராசரியாக ஒரு நாளின் முதல் தாம்பத்தியத்தின் போது 5 முதல் 7 நிமிட நேரம் என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தவை, 'மிக நீளமான நேரம்' என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு நேரத்தில் உச்சத்தை அடைவதால் இந்த கால அளவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேற்குறிப்பிட்ட நேரம் தாம்பத்தியத்தின் முன் உள்ள, பேச்சு கொஞ்சுதல், முத்தம், இவைகளை தவிர்த்தது ஆகும்.

காரணங்கள்:
முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு காலத்தில் இது உளவியல் ரீதியானது என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் இது உளவியல் மற்றும் உடலியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று சுகாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.
உளவியல் காரணங்கள்:
மனச்சோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்வுகள், முன்கூட்டியே விந்து வெளியேறி விடுமோ என்று கவலைப்படுதல்.
உடல் ரீதியான காரணம்:
ஒழுங்கற்ற ஹார்மோன் அளவுகள், குறிப்பாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, டோபமைன், செரட்டோனின் போன்ற மூளை ரசாயனங்களின் குறைந்த அளவுகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம் மற்றும் தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், மற்றும் உடல் பருமன்.

உணவுகள், உடற்பயிற்சிகள்:
இந்த பிரச்சினை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது. இடுப்பு தசைகளை பலப்படுத்த 'கெகல்' பயிற்சிகளை செய்யலாம். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.
தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். மாதுளம் பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம், திராட்சைப் பழம் இவைகளில் ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நிலவாகைச் சூரணம் 1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயம், பதற்றம், கவலை, மனச்சோர்வு நீக்குவதற்கு தியானம், பிரார்த்தனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும். இரவு குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
- அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார்.
திருமண வரன் தேடும் மேட்ரிமோனி தளத்தில் பெண்களுடன் நட்பு கொண்டு நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிமான்ஷு ஒரு திருமண தளம் மூலம் பெண்களிடம் தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு கொள்வார்.
மேட்ரிமோனியில் நட்பாக பேசி பழகியபின் நேரில் சந்தித்து அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.
மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய ஐந்து உயர் ரக தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் “டேட்டிங்” தொடர்பான வெப்சைட்டுகளில் தகவல்களை தேடிப்பார்த்துள்ளனர்.
இதே காலக்கட்டத்தில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் “பாரத் மேட்ரிமோனி” வெப்சைட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜோடியை தேடிய 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர்.
இதில் 24 சதவீதம் பேர் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்புவதாகவும், 21 சதவீதம் பேர் ரொமான்டிக் டின்னருடன் காதலை வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
34 சதவீதம் பேர் பரிசுகள் கொடுத்தும், 15 சதவீதம் பேர் விடுமுறை திட்டமிடல் மூலமும் காதலை சொல்ல விரும்புவதாக கூறி உள்ளனர்.
ஆய்வில் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 86 சதவீதம் பேர் திருமணத்துக்கு பின்புதான் காதலர் தினத்தை கொண்டாட விரும்புவதாக கூறி உள்ளனர்.
இதே போல ஆன்லைனில் உணவு தொடர்பான தகவல்களை தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2018-ம் ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. #Matrimony #OnlineDating