என் மலர்
நீங்கள் தேடியது "Meteorological Department"
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தில் இந்தி சேர்க்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- 18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
- இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப் போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.
இதுவரை 17 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக தலா 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.
18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (சனிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. மே 25 வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ( வரிசை 1) நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2), ராஜஸ்தான் ராயல்ஸ் (3), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (4), பஞ்சாப் கிங்ஸ் (5) ஆகியவையும், பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ் (1), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2), குஜராத் டைட்டன்ஸ் (3), டெல்லி கேப்பிடல்ஸ்(4), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (5) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வரிசைப்படி 2 தடவை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை ஆட வேண்டும். உதாரணத்திற்கு சி. எஸ்.கே. அடுத்த பிரிவில் உள்ள மும்பையுடன் மட்டும் 2 போட்டியில் ஆடும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றில் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் 'குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதி போட்டிக்குள் நுழையும்.
மே 18- ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. பிளே ஆப் சுற்று மே 20- ந் தேதி தொடங்குகிறது. அன்று 'குவாலிபையர் 1' போட்டியும், மறுநாள் 21-ந் தேதி எலிமினேட்டர் ஆட்டமும் ஐதராபாத்தில் நடக்கிறது. குவாலிபையர் 2 ஆட்டம் 23- ந் தேதியும், இறுதிப்போட்டி மே 25- ந் தேதியும் நடைபெறுகிறது.
58 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெறும்.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் அன்றைய தினம் கொல்கத்தாவில் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி பெருமளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் அன்றைய தினம் அந்த பகுதிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதிக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
- கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கினாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.
ஆனால், உட்புற சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.
சென்னையை பொறுத்தவரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1ம் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வி, தென்காசி உள்பட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் குதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடை இடையே மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், கலெக்டர் அலுவலகம், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் காட்டு குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 16 செ.மீ., செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தலா 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை சோழிங்க நல்லூர், எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் செய்யூர் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
- வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
- நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
- நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.
இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)
கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)
ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)
கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)
மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)
நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)
தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)
திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)
திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)
தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)
வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)
- பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
- கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
நெல்லை:
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
- லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
- கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.
தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது.
- சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
திருப்பூர்
தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சம் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து வெளியிடும் வானிலை அறிக்கையில், வரும் நாட்களில் திருப்பூரில் அதிகபட்சம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும். இரவில் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சராசரியாக மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேக மூட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிர் சத்துகள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும்.
எனவே வேப்ப புண்ணாக்கு கலந்த தழைச்சத்து உரங்களை இட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
- தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.
தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
- நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இவர் தமிழகத்தின் வெதர் மேன் என்றே மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். முந்தய காலங்களில் மழை, வெள்ளம் குறித்த இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. வானிலை தொடர்பான தகவல்களுக்கு வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்தபடியாக இவரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மழை பெய்யும், நாளை (மே 16) வியாழக்கிழமை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துராதீங்க என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய அறிக்கைபடி நாளை (மே 16) தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் , சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.