என் மலர்
நீங்கள் தேடியது "Milk Production"
- இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-
மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.
ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
- அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.
பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Aavin #MinisterKadamburRaju