என் மலர்
நீங்கள் தேடியது "Minister Duraimurugan"
- நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
- வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்,
- தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
- அமைச்ர் துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இதையடுத்து துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி.
- காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
- தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.
எனது 60 ஆண்டு கால அரசியலில் இந்தியாவில் மிகச்சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுதந்திர தினத்தில் முதல்வர் கொடி ஏற்றுதல் என மாநிலத்திற்கான கூடுதல் அதிகாரங்களை பெற்றார். அப்போது இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் கருணாநிதியை திரும்பி பார்த்தனர். அதேபோன்று நிலையை அவரது மகனான ஸ்டாலினும் பெற்றுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும் உரிமைகளையும் பெற்று தந்தார்.
ஆனால் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தபடியே டெல்லியை ஆட்டி படைக்கிறார். தந்தையை மிஞ்சும் தனயனாக கருணாநிதியை மிஞ்சும் மகனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,
கருணாநிதி தனது எழுத்துக்களால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுள்ளார். அவரின் பேனாவுக்கு வலிமை ஜாஸ்தி.
அண்ணாவே அவரது எழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட பேனாவை பாக்கெட்டுக்குள் வைப்பது சரியல்ல. அதை நினைவு சின்னமாக கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை.
தேர்தல் களத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தி.மு.க. முன்னணி தலைவர்கள் இந்த தேர்தலில் பணியாற்றுவதால் எதிரணியை பற்றி கவலை இல்லை. எதிர்க்கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லும். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்.
- தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை.
- நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியேன் பராபரமே' என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது. அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்; அதை அவரே முடிவெடுப்பார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை.
நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை. நடக்கும்போது அனைத்தும் நடக்கும். நான் ஆளுநரை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
- காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.
சென்னை:
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனைக்கு பின் டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
- தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை கர்நாடகா 53.77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ 15.79 டி.எம்.சி தான், பற்றாக்குறை 37.97 டி.எம்.சி
தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள் என தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
- குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாநகராட்சியில் நிறைவான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இனி ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்குள் மாநகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்.
காவேரி மேலாண்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணை நடக்க இருந்தது. கர்நாடக அரசு அவசரமாக விசாரிக்க தேவையில்லை என கூறியதை தொடர்ந்து, வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை.
- பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள்.
துன்பப்படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா என்பதைப் போல் அமைச்சர் துரைமுருகன் மக்கள் மத்தியில் நின்று பேசியது ஆச்சரியமாக இருந்தது.
காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் பேசும்போது, வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை. வேலை பார்க்காத அதிகாரிகளை பட்டையை உரிக்கணும் என்றார்.
பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள். ஆனால் அமைச்சரே குறைகளை பார்த்து வேதனைப்படும்போது யாரிடம் சென்று முறையிடுவார்கள்.
- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.
சென்னை:
அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.
அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும்.
13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர்.
இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது.
அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.