என் மலர்
நீங்கள் தேடியது "minister kn nehru"
- கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.
- வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.
சோதனைகள் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- 5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
- ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள்.
இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018 -ம் ஆண்டு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் தங்களது வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இதனால் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்று இரவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
- ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
- திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது. அதேபோல் கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றுள்ளது.
- கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
- சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக சந்தேகம்.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திருச்சி தில்லை நகரில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. சென்னையில் அரசு பங்களாவில் அவர் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு அருண் நேரு என்ற மகன் உள்ளார். பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் அருண்நேரு ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.
இவர் டி.வி.எச். (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் என்ற மின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
அந்த சோதனையின் போது கே.என்.நேரு சகோதரர்களின் நிறுவன வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரி களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் ஆவ ணங்களுடன் கொடுத்து இருந்தனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்களை பெற முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை, திருச்சி, கோவையில் உள்ள அமைச் சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது சகோத ரர்கள் மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை யில் ஈடுபட்டனர்.
சென்னையில் 7 இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது. அடையாறு, தேனாம்பேட்டை, சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் கே.என்.நேரு வின் சகோதரர் ரவிச்சந்திர னுக்கு சொந்தமான இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது.
ரவிச்சந்திரன் டி.வி.எச். என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகி றார். ராஜா அண்ணாமலை புரத்தில் டி.வி.எச். எனர்ஜி ரிேசார்சஸ் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு வில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
காற்றாலை மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர் பா அலுவலகங்க ளாக அவை உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகளவில் இன்று சோதனை நடத்தி னார்கள்.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு எம்.பி.க்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் ஜி.எஸ்.என்.ஆர். ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. அங்கும் அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அதுபோல அடையார் காந்தி நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள வைத்திய நாதன் அடுக்குமாடி குடியி ருப்பில் ஒரு வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்ற விவ ரங்கள் இன்று பிற்பகலில் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருக்கு சொந்தமான, திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் கோவையில் இருந்து வந்துள்ள அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள னர்.
மேலும் அவரது சகோத ரர் மறைந்த கே.என்.ராம ஜெயத்துக்கு சொந்தமான திருச்சி தில்லை நகர் 10வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், மதுரையில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 2 இடங்களிலும் அமலாக்கத்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு வீட்டு முன்பு கட்சியினர் திரண்டனர். இதனால் தில்லைநகர் 5-வது கிராஸ் மற்றும் 10-வது கிராஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது.
இந்த குடியிருப்புக்கு 3 கார்களில் இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை யினர் வந்தனர். அவர்கள் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது. சோத னையை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை யினர் சென்னையில் இருந்து வந்த தாக தெரிவித்து உள்ளனர்.
டி.வி.எச். கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதனை கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் கவனித்து வருகிறார். இந்தநிலையில் தான் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
- அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண்நேரு வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் TVH குரூப் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
- ரூ.900 கோடியில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.
திருச்சி:
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அமைச்சர் கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதை தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். மாலையில் அவர் திருச்சியில் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
9-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து முனைய திறப்பு விழா நடக்கிறது. விழாவில் புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 55 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேல் தளத்தில் நகர பஸ்கள், கீழ் தளத்தில் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி, 2 மணி நேரம் நிற்கக் கூடிய பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள், கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல் நடந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர்.
- இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை :
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி உள்ளன. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் 'ஜல் ஜீவன் திட்டம்' மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, கள் தடை நீங்குமா? என்ற கேள்விக்கு, கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப்பொருளாக மாறிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, பதநீரை கள் ஆக்குவது சரி, போதைப்பொருள் ஆக்குவதால் தான் சிக்கல். பனை பொருள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.
100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
- 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
- தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கேட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
இந்த ஆண்டு தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், ஹசன் மவுலானா, தரமணி பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதிபடுவதாகவும் அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார்.
- ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசியதாவது:-
வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தருவதாக இருந்ததன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் மரக்கூழ் ஆலை இரண்டாவது அலகினை திறந்து வைக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பெரம்பலூர் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு மாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல்-அமைச்சர் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் இருந்தது.
அதன் அடிப்படையில் தனித்தனியாக நடைபெற இருந்த கூட்டம் இன்று 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நீண்ட தூரம் பயணிக்க கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும் நாளைதான் அவரது வருகை தொடர்பான முடிவு தெரியவரும்.
தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சின்ன விஷயத்தையும் பா.ஜ.க.வினர் ஊதி பெரிதாக்குகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறமுடியாத அளவுக்கு நமது முதல்வர் ஆட்சியை நடத்தி வருகிறார்.
இப்போது அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. நான்தான், நீதான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இடத்தை பிடித்து விட வேண்டும், எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்து கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்.
நான் வெளிப்படையாக வெட்கத்தை விட்டு கூறுகிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.
தற்போது தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 40-க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களை தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று சொன்னேன். அதேபோல் மூன்று இடங்களை தவிர டெல்டாவில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் வெற்றியை தலைவருக்கு தேடித்தர வேண்டும்.
கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் நிலை வருகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
- 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.
கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.