என் மலர்
நீங்கள் தேடியது "mobile phones"
- 2014-ல் இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
- ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான்.
இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
2014-ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளது என தெரிவித்தார்.
- பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
- அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது
திண்டுக்கல்:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்தில் மொபைல் போனில் தங்களை படம் பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அதில் வருகிற அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது. இந்த உத்தரவை பழனி மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வருகிற அக்-1ந் தேதி முதல் பழனி முருகன் கோவிலுக்குள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி கோவிலுக்கு தவறுதலாக மொபைல் போன், கேமரா கொண்டு வருபவர்களுக்காக, மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்தில் உள்ள காலணி பாதுகாப்பு மையத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கு மொபைல் போன் வைப்பதற்கான ரேக்குகள், மொபைல் போன் கொடுக்கும் பக்தர்களின் விவரங்களை சேகரிக்க இன்டர்நெட் வசதியுடன் கூடிய இரண்டு கணினிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தங்கள் மொபைல் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்து வந்து பெற்று கொள்ளலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வகுப்பறையில் செல்போன்கள் எரிச்சலூட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
- நல்ல கல்வியை குழந்தைகள் பெற நாம் சூழலை உருவாக்க வேண்டும் என்றார் சுனக்
இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.
பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர்.
மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.
எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.
இங்கிலாந்தில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.
கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில டிரைவர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதுண்டு.

இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரவலாக புகார்களும் வந்தன. இப்புகார்கள் மீது விசாரணை நடத்திய உயரதிகாரிகள் 50 டிரைவர்களை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து, இதே தவறை செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. #MTCdrivers #MTCdriverssuspended
பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.#France #school #phones