என் மலர்
நீங்கள் தேடியது "Monitoring Committee"
- குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும்.
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு களைக்கப்பட்டு தற்போது 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை குறித்து நாளை (22-ந்தேதி) ஆய்வு செய்ய வருகின்றனர். இந்த நிலையில் குழுவில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த நீர் பாசனம், நிர்வாகத் தலைமை பொறியாளர் பிரியோஸ், நீர் வளத்துறை தலைமை செயலர் விஸ்வாஸ் ஆகிய 2 பேரையும் நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி லோயர் கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையான குமுளியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரத் தொடங்கினர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பால சிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய வருகிறது.
மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கேரளாவைச் சேர்ந்த இவர்களால் அணையில் மேற்கொள்ளப்படும் எந்த பராமரிப்பு பணிகளுக்கும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
மேலும் பெரியாறு புலிகள் காப்பகம், கேரள நீர்வளத்துறை, கேரள காவல் துறை ஆகிய 3 துறைகள் இணைந்து தமிழக பொறியாளர்கள் அணையில் பணிகள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை.
இந்த அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி நடத்தி வருகிறோம் என்றார்.
விவசாயிகள் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம், லோயர் கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழுவில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் உறுப்பினர்- செயலாளரும், தொழிலாளர் உதவி ஆணையருமான (அமலாக்கம்) காளி தாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின்படி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமை யிலான கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவை திருத்தி அமைக்க கலெக்டர் மேகநாதரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டப்பிரிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் 2 பேரும் கலெக்டரால் கொத்தடிமைத் தொழிலா ளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் மாவட்ட கண்காணிப்புக் குழுவிற்கு உறுப்பினராக சமீபத்திய புகைப்படம் ஒட்டப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், சுய விருப்பக் கடிதம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை ''தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர்'' என்ற முகவரிக்கு வருகிற 2.12.2022அன்று மாலை 5.00மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
- வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கோவை:
பாராளுமன்றத்திற்கு ஏப்.19 முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
- பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
குண்டடம்:
பள்ளி குழந்தைகளுக்கு மதியம் பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை குழந்தைகள் பலர் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்ற குறைபாடு உள்ளது. இதனை போக்கும் வகையில், துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.முதல்கட்டமாக 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் இதற்கு தேர்வாகியுள்ளன. சிற்றுண்டி, காலை 8:15 மணிக்கு முன்னரே, தயாரிக்கப்பட வேண்டும்.இத்திட்டத்துக்கு மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள், சமையல் செய்து அனுப்புவதற்கான கூடங்கள், கிழமைதோறும் என்னென்ன உணவுகள் தயாரிக்க வேண்டுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள உணவுகளில், மாணவர்கள் விரும்பும் உணவு வகைகளை, பள்ளி மேலாண்மை குழுவினரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்து, சமைத்து தர வேண்டும். இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு ஊராட்சி தலைவர் கண்காணிப்பு குழு தலைவராகவும், பள்ளி தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு கண்காணிப்பு குழு தலைவராக ஆணையரால் நியமிக்கப்பட்ட அலுவலரும், தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். திட்டம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைப்பதோடு அதன் தரம் குறித்து, கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
- கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
- துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
இதில், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பள்ளி கல்வித் துறை, கனிமவளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன், ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகம் வலியுறுத்தல்.
- வள்ளக்கடவு வழியாக 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேபி அணையின் கீழ் பகுதியில் இடையூராக உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.
அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.