என் மலர்
நீங்கள் தேடியது "Municipal Corporation"
- தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா்.
- வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
காங்கயம் :
காங்கயம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா். இந்த கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.
இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி 'சீல்' வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை உள்ளிட்ட கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
- இரண்டாவது குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
- வெள்ளிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகி க்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் இரண்டாவது குடிநீர் திட்டல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. அதனால் 2 வது குடிநீர் திட்டத்தில்குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்று இருந்ததை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4-வது குடிநீர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடு, தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மாநகராட்சிக்கு டெபாசிட் தொகை மற்றும் குழாய் இணைப்பு பணிக்கான தொகையை செலுத்தி இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு விட்டது. புதிய குடிநீர் குழாய் இணைப்பை பெறுவதற்கான கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் இணைப்பு கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெளிவான விளக்கத்தை அறிவிப்பாக வெளியிட வேண்டும். இடைத்தரகர்கள் மூலமாக மக்களிடம் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் பேசும்போது, புதிய குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கான கட்டண விவரங்கள் குறித்து பரிசீலித்து விரைவில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு கட்டண விவரங்கள் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.
- பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
மங்கலம் :
சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்தாமல் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் ரூ.100 மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.
- ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
- கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பூந்தமல்லி:
தமிழ்நாடு நகராட்சி - மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு தமிழக முதலமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் அப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒரே துறையில் பணியாற்றிய போதும் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும், மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மண்டல அளவில் துப்புரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.
நகராட்சிகளில், மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர்நல மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பணிகளும், துப்புரவு அலுவலர்களுக்கு பொது சுகாதார பணிகளையும் ஒதுக்கி பணி பகிர்வு செய்திட வேண்டும்.
பல நகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நகர்நல அலுவலர் பணியிடமும் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இதனால் பணி பகிர்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சிகளின் திடக்கழிவு மேலாண் பணிகளை பொது சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவர்களை கொண்டு கவனிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்கெனவே சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனப்படும் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிந்து வரும் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை மூலம் நகர்ப்புற மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு அவற்றில் புதியதாக 500 சுகாதார ஆய்வாளர்களை (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) நியமித்து உள்ளனர். இதனால் ஒரே நகர்ப்பகுதிகளில் இரு துறைகளின் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது.
இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சுகாதார ஆய்வாளர்களான சானிடரி இன்ஸ்பெக்டர்கள் பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார ஆய்வாளர்களின் பணி குறுக்கீடு ஏற்படும். துப்புரவு அலுவலருக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய, பொது சுகாதார பணிகளைக் கவனிக்க, ஜீப் வாகனம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துப்புரவு அலுவலர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும் என்றும் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், செயலாளர், செந்தில்ராம் குமார், பொருளாளர் இளங்கோ, தலைமையிடத்து செயலாளர் கோவிந்த ராஜூ ஆகியோர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர். கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நகராட்சி நிர்வாக இயக்குநர், கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விஜயகுமார் உடனிருந்தார்.
- சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம்...பதறிய மக்கள்..தொற்றிய பரபரப்பு https://t.co/QD6B9qHqYA#Hosur | #water
— Thanthi TV (@ThanthiTV) June 14, 2024
- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
- 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட சின்ன எலசகிரி அம்பேத்கர் காலனியில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் மாநகராட்சி குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதனை பயன்படுத்தியவர்களில், 27 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேலும் 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில், 46 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் 4 பேர் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு, அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி பொது மக்களிடையே பீதியில் உள்ளனர்.
தஞ்சை நகராட்சி 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 36.61 சதுர கி.மீ. ஆகும். தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த தஞ்சையில் உலகப்புகழ்பெற்ற பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம், சரசுவதி மகால் நூலகம், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளன.
தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு திருமானூரில் உள்ள கொள்ளிடம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. திருமானூரில் இருந்து தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தஞ்சை மாநகர பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.
இது தவிர தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டு மோட்டார் பொருத்தியும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியே 69 லட்சம் செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதனை அகற்றி விட்டு புதிய குழாய்கள் பதிக்க முடிவுசெய்யப்பட்டு ரூ.15 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தன. இதையடுத்து தஞ்சை மாநகரில் 7 இடங்களில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 4, 7, 9, 20, 40, 44, 51 ஆகிய வார்டுகளில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கடந்த 2015-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி 7 இடங்களிலும் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் மேல்நிலைகுடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கின.
இந்த குடிநீர் தொட்டிகள் 1½ லட்சம், 7½ லட்சம், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை ஆகும். இந்த குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. தஞ்சை 44-வது வார்டில் ராஜீவ்நகரில் குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. இதே போல் மற்ற இடங்களிலும் பணிகள் நிறைவடையவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு இடங்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்”என்றனர்.