என் மலர்
நீங்கள் தேடியது "Municipal officials"
- ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அதிகாரிகள், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவல கத்தில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன் வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் செல்லும் பாதைகளை சரி செய்து தேங்காமல் செல்லும் வகையில் உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழை, வெள்ள நீரை அகற்றுவதுடன் கொசுக்கள் அதிகரிப்பதை தடுத்து கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்ப ளித்து செயல்பட வேண்டும்.
தண்ணீர் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.ஆபத்தான மின்கம்பங்கள் குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகராட்சி கவுன்சி லர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பட்டுக்கோட்டை நகராட்சிக்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
- வாடகை பாக்கி அதிகம் உள்ள 4 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது.
இந்த வணிக வளாக கடையின் குத்தகைதாரர்களுக்கு பலமுறை அறிவிப்பு வழங்கியும், பலமுறை வாடகையை செலுத்த கூறி அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் குமரன் உத்த ரவின் பெயரில், நகராட்சி மேலாளர் விஜயாஸ்ரீ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குழுவாக சென்று வாடகை பாக்கி அதிகம் உள்ள 4 கடைகளை கண்டறிந்து அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர் .
அப்பொழுது கடை எண் 6-ன் வாடகைதாரர் சஞ்சய் காந்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நோட்டீஸ் ஏதும் வழங்காமல் கடையை போட்டி சீல் வைத்தீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் முருகேஷ்கூறும் பொழுது:-
சீல் வைக்கப்பட்ட4 கடை களுக்கும் இந்த செப்டம்பர் மாதம் வரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 413 ரூபாய் வரை பாக்கி இருப்பதாகவும், அதிலும் தகராறு செய்த சஞ்சய் காந்தி மட்டும் 33 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சஞ்சய் காந்தியிடம் அதிகாரிகள் நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கடையை பூட்டி சீல் வைத்து விட்டு சென்று விட்டனர்.
மேலும், வாடகை பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாடகை பாக்கி தொகையினை, முழுவதுமாக முறைப்படி செலுத்தினால் மட்டுமே சீல் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கமிஷனர் ஜெயசீலன் உத்தரவின்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் சுகாதார அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வடக்கு பகுதி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் தலைமையில் நடந்த சோதனையில் 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
தெற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ பிளாஸ்டிக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமையில் நடந்த சோதனையில் 140 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் மாநகர கிழக்கு பகுதி சுகாதார அலுவலர் ராஜசேகர் தலைமையில் பூபாலராயர்புரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 115 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகர சுகாதார அலுவலர்களின் அதிரடி சோதனையால் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.
மாநகர தெற்கு பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் இதற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாநகர நான்கு மண்டலங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. #PlasticBan
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல் முருகன்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.