search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naked"

    • 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.
    • இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.

    அப்போது மிகவும் மெல்லிதாக உடல் பாகங்கள் முழுவதுமாக வெளியே தெரிய கூடிய உடையை பியான்கா சென்சோரி அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பியான்கா சென்சோரி கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததற்காக பியான்கா சென்சோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • பொங்கல் போனஸ் மற்றும் சீருடை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து, அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் சீருடை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து, அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

    முன்னதாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி

    னர். இதில் நாமக்கல் மாவட்ட

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செய

    லாளர் நீல வானத்து நிலவன் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கொங்கு நாடு தேவேந்திர குல மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் முனியப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலாளர் செல்வேந்திரன், அருந்ததியர் மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரஜினி ராமசாமி, தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல பொறுப்பாளர் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55)
    • நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55).

    அரை நிர்வாண நிலையில்

    நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாண நிலையில் சுயம்புகனி இறந்த நிலையில் கிடந்தார்.

    எஸ்.பி. விசாரணை

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையா?

    அரை நிர்வாண நிலையில் சுயம்பு கனி இறந்து கிடப்பதால் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? போலீ சார் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பபிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை

    இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.

    மேலும் சுயம்பு கனியின் உறவினர்கள், அவரது கணவர், நண்பர்கள் ஆகியோரிடம் விடிய, விடிய விசாரனை நடத்தி நடத்தினர். தொடர்ந்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×