என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nameplate"

    • வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரத்தை பா.ம.க.வினர் வழங்கினர்.
    • இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் நகரம் முழுவதும் நகர செயலாளர் பாலா தலைமையில் வணிக வளாகங்களில் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக் கோரி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் ெசய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் கலந்து கொண்டார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் ஷெரீப், அமைப்பாளர் கபில் தேவ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராகிம், தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
    • அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.

    இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என உத்தரவிட்டது.
    • மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு வரும் மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

    மும்பை:

    பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014, மே 1-ம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

    வரும் மே 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர உள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி ஏக்னாத் ஷிண்டே தனது அலுவலகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் ஏக்நாத் கங்குபாய் சம்பாஜி ஷிண்டே என தாயார் பெயரையும் சேர்த்துள்ளார்.

    இதேபோல், மற்ற மந்திரிகளின் பெயர்ப் பலகைகளில் அவர்களின் தாயார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    • 2008 இல் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் ஒன்றே பெயரில்லாமல் இயங்கி வருகிறது.
    • இந்த நிலையத்தில் வந்திறங்கும் புதிய பயணிகள் குழப்பத்திற்கு ஆளாவார்கள்.

    இந்தியாவில் பெயரே இல்லாமல் ஒரு ரெயில் நிலையம் இயங்கி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம்.. மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தியாவில் 7112 ரெயில் நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் 2008 இல் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் ஒன்றே பெயரில்லாமல் செயல்பாட்டில் உள்ளது.

    பர்தமான் மாவட்டத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. முதலில் இந்த ரெயில் நிலையத்துக்கு அதிகாரப்பூர்வமாக ராய்நகர் என்ற பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

    ஆனால் ரெய்னா கிராமத்தினர் தங்கள் ஊரின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளனர். இரு கிராமங்களுக்கு இடையே நிலையம் அமைத்துள்ளதால் இரு கிராமத்தினரும் தங்கள் ஊரின் பெயரையே ரெயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று சண்டையிட்டுள்ளனர். இரண்டு கிராமங்களும் இது தொடர்பாக நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. வழக்கமாக மஞ்சள் பலகையில் ரெயில்நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள மஞ்சள் பலகை காலியாக விடப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடத்தில் தினமும் ஒரே ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தினமும் 6 முறை இந்த பெயரில்லாத நிலையத்தை அந்த ரெயில் கடந்து செல்கிறது. இந்த நிலையத்தில் வந்திறங்கும் புதிய பயணிகள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். கிராமவாசிகளிடம் விசாரித்த பிறகே சரியான இடத்தை தெரிந்துகொள்வார்கள்.

    இது தொடர்பாக அந்நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் நபகுமார் நந்தி கூறுகையில், ரெயில்வே சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து கிராமத்தினர் நீதிமன்றம்சென்றனர். இப்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

    ×