என் மலர்
நீங்கள் தேடியது "Naveen Patnaik"
- ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
- விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது
கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.
24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.
ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
"நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.

நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
சர்ச்சை என்ன?
கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.
அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார்.
- நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
- பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சி பாதித்திருக்கும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது.
* பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார்.
- 15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13 முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
- உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் ஒடிசா முதல்வர்.
புவனேஷ்வர்:
15-வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
- ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
- அங்குள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
புவனேஸ்வர்:
15-வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளைப் பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.
ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
- மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார்.
- இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
புவனேஸ்வர் :
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 21-ந் தேதி ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள புரியில் தங்கி இருந்தபோது, ஜெகநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.
வங்காள பவன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று மேற்கு வங்காளத்துக்கு திரும்பும் முன்பு, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
நவீன் பட்நாயக்குக்கு வங்காளத்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ சால்வையை வழங்கினார்.
மம்தா பானர்ஜிக்கு அங்கவஸ்திரம் வழங்கி நவீன் பட்நாயக் வரவேற்றார். 3 ரதங்களின் மாதிரி வடிவத்தையும், ஒடிசாவின் பிரபலமான இனிப்பு வகையையும் அளித்தார்.
இருவரும் 15 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நவீன் பட்நாயக் கூறியதாவது:-
இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிகாரபூர்வமற்ற சந்திப்பு. நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நவீன் பட்நாயக் உயர்ந்த தலைவர். அவருடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன்.
3-வது அணி பற்றி எதுவும் பேசவில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றித்தான் பேசினோம். அவர் அளித்த வரவேற்பு, விருந்தோம்பல் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜெகநாதர் ஆலயத்துக்கு வருமாறு அவரை அழைத்தேன். புரியில் வங்காள பவன் கட்ட 2 ஏக்கர் நிலம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.
அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.
நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.
- நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார்.
- ஸ்வர்கத்வார் மயானத்தை அழகுபடுத்த மாநில அரசு 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது.
புவனேஸ்வர் :
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தந்தையும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிஜூ பட்நாயக் கடந்த 1997-ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் புரி நகரில் உள்ள மயானத்தில் (ஸ்வர்கத்வார்) தகனம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. புரி நகரை மேம்படுத்தவும், இந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த இந்த நினைவிடம் தடையாக இருந்தது.
இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான பாண்டியன், துபாயில் நேற்று முன்தினம் ஒடிசா மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார். தனது தந்தை மக்களின் இதயங்களில் வசிப்பதாகவும், கல்லில் அல்ல என்றும் நவீன் பட்நாயக் கூறியதாக பாண்டின் மேலும் குறிப்பிட்டார். தற்போது அந்த பகுதியில் நினைவிடத்துக்கு பதிலாக வெறும் பெயர் பலகை மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
- அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
- ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் கார் வைத்துள்ளார்.
புவனேசுவரம் :
ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:-
* முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.
* அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும்.
* அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது.
* ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது.
* ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.
* ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும்.
நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.
ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
- பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
- ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி:
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.
இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
- ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
- 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
- ஒடிசா அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிற்கு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடிதம் எழுதினார்.
அப்போது, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு ‘5டி செயலாளர்’ என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
- நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.
புவனேஸ்வர்:
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அரசுத்துறைகளில் மாற்றத்துக்கான முயற்சிகளை அமல்படுத்த இப்பதவி உருவாக்கப்பட்டது.
இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அரசு திட்டங்களை ஆய்வு செய்ய வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.
மாநில அரசை நவீன் பட்நாயக்குக்கு பதிலாக, வி.கே.பாண்டியன்தான் நிர்வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவும் வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில், பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.
அதன்படி, வி.கே.பாண்டியன், அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரம் முடிவதற்குள் வி.கே.பாண்டியனை ஒடிசா மாநில அரசு புதிய பதவியில் நியமித்துள்ளது. இது, கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நவீன ஒடிசா திட்டத்துக்கான தலைவராக கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்-மந்திரியின் கீழ் நேரடியாக செயல்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில அரசின் 'நமது ஒடிசா, புதிய ஒடிசா' என்ற புதிய திட்டத்தின் பொறுப்பாளராகவும் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட உள்ளார். இத்திட்டம், பாண்டியனின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
வி.கே.பாண்டியன், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தில் இணைவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்மூலம், அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிகிறது.