என் மலர்
நீங்கள் தேடியது "NEET Scam"
- 2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
- பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!
2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்?
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
" தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.
2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
ஆகத்து 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் " முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை." இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்." என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?.
- மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நீட் ஊழல் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
மோடி அரசு கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலமாக நீட் ஊழலை மூடி மறைக்க தொடங்கியுள்ளது.
நீட் தேர்வின்போது பேப்பர் லீக் ஆகவில்லை என்றால், பீகார் பேப்பர் லீக் காரணமாக 13 குற்றவாளிகளை கைது செய்தது ஏன்?. பேப்பரை பரிமாற்றிக் கொள்வதற்காக 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மாபியா கும்பல், அமைப்புகள் ஈடுபட்டத்தை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளிப்படுத்தவில்லையா?.
நீட் மோசடி கும்பல் குஜராத் மாநிலம் கோத்ராவில் பிடிபடவில்லையா? குஜராத் போலீஸின் தகவல்படி, பயிற்சி மையம் நடத்தியவர், ஆசிரியர், மற்றொரு நபர் ஆகியோருக்கு இடையில் 12 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.
அரசு கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்களில் 55 ஆயிரம் இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த முறை மோடி அரசு என்டிஏ-வை தவறாக பயன்படுத்தி மார்க் மற்றும் தரவரிசையில் மோசடி செய்துள்ளது. இதனால் ஒதுக்கீடு இடங்களுக்கான கட்ஆஃப் மார்க் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக்கானதாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
- 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இடதுசாரி மாணவர்கள் பிரிவான, அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் (AISA) நாடு தழுவிய இரண்டு நாள் (ஜூன் 19 மற்றும் ஜூன் 20) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2024 நீட் தேர்வை ரத்து செய்யும்படி 20 மாணவர்கள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், சிபிஐ அல்லது தன்னிச்சதிகாரம் பெற்ற சுதந்திரமான அமைப்பு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை.
- வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.
வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கை" என்று உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், "தமிழ்நாட்டின் சமூகநீதி குரலை உரக்க எதிரொலித்ததற்கு நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
- வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது.
- 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.
வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக எம்.பி கனிமொஹி தனது எஸ்கே பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. கருணை மதிப்பெண்களுக்கு அப்பால், பாடத்திட்ட முரண்பாடுகள், பயிற்சி மையத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் போன்ற சிக்கல்கள் மாணவர்களின் கனவுகளை தகர்த்துள்ளன. சமூக அநீதியை நிலைநிறுத்துகின்றன. விளிம்புநிலை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.
- இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.
நீட் பேப்பர் லீக்கானதில் எதிர்க்கட்சிகள் பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இது ஒரு ஊழல் என வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பிரிங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் 43 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ள இந்த பேப்பர் லீக் மோசடி, மோடி தலைமையிலான பாஜக அரசின் கீழ் நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
நாம் மிகப்பெரிய அளவில் இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளோம். இந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.
வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்பம் செய்ய இளைஞர்கள் செலவு செய்கிறார்கள். அதன்பின் தேர்வு எழுதுவதற்கான பயணம் செய்ய செலவு செய்கிறார்கள். ஊழல் காரணமாக இறுதியாக அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகப் போகிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
- நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு பள்ளி முதல்வர் நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்தது. அவரை சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே சி.பி.ஐ. நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சிலருக்கும் நீட் தேர்வு முறைகேட்டில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிரடியாக அந்த 10 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 10 மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன. நாளை மறுநாள் பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியதும் நீட் விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்க வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2-ந்தேதி பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச உள்ள நிலையில் நீட் விவகாரம் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது.
- வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது.
இந்த மோசடியை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடிகளை தொடர்ந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்திருக்கிறது. இவை ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
சமீபத்தில் கூட ஜார்கண்டின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டார்.
பீகாரின் நாலந்தாவை சேர்ந்த இவர் தலைநகர் பாட்னா அருகே அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.
கைது செய்யப்பட்ட ராகேஷ் ரஞ்சன் பின்னர் பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரில் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக பீகார் மற்றும் ஜார்கண்டில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆதாரங்கள மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது.
நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
- நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர்.
- 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
புதுடெல்லி:
நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 12 பேரை சிபிஐ கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் இதுவரை ஜாமீன் பெற்று இருக்கிறார்கள்.
நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை விசாரித்த கோர்ட்டு அவர்களை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து சிபிஐ பாட்னா ஐகோர்ட்டை நாடியது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரித்தார்.
விசாரணை முடிவில் பீகார் போலீசார் கைது செய்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்களை இன்றே (நேற்று) சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சிறை நிர்வாகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
பீகாரில் நீட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 13 பேருக்கும் அவருடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து சிபிஐ விரிவான விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும்.
- தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், நீட் தேர்வு ஒரு ஊழல், இதை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். அகில இந்திய தேர்வை அரசு கைவிட்டு, மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும்
இது மிகப் பெரிய நாடு, தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அமைப்பு மற்றும் அமைப்பில் உள்ள கசிவுகளுக்கு தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
#WATCH | On his expectations from the Union Budget scheduled to be presented on July 23, Congress leader P Chidambaram says, "... The Prime Minister must address unemployment and price rise. Retail inflation as per the government data is 5.1%, and we go towards rural areas, it is… pic.twitter.com/d3NR3ZDNFp
— ANI (@ANI) July 14, 2024
- பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
- முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.
பாட்னா:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.
அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.
ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பீகாரின் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசியவிடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்" என கூறினார்.
- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
- விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பாட்னா:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.