என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opposition parties"

    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆதரவு

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்குச் சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

    "மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய் தெரிவித்தார்.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'சொட்டு நீர் பாசன திட்டம்' நடக்கிறது.
    • 1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்றம் 120 ரூபாய் பக்கெட்டை நம்பி உள்ளது.

    டெல்லியில் கனமழை பெய்து வருவதால், பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தங்களது எஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் தண்ணீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

    அப்போது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நேரத்தை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழைநீர் கசிவு. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவடைவதற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் மழைநீர் கசிவது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பழைய பாராளுமன்ற கட்டிடம் இதை விட சிறப்பாக இருந்தது. பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'சொட்டு நீர் பாசன திட்டம்' நடக்கும் வரை நாம் ஏன் பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல கூடாது.

    பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும் நீர் கசிவு என்பது அவர்களின் அற்புதமான வடிவமைப்பின் ஒரு பகுதியா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் 120 ரூபாய் மதிப்பிலான பக்கெட்டை நம்பி உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியும் இந்த சம்பவத்தை கிண்டலடித்துள்ளது.

    • கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
    • மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

    வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரந்துரைத்தார்.

    வருமான வரி சட்டமானது வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    நிதி அமைச்சரின் பரிந்துரையை தொடர்ந்து நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மக்களவை மார்ச் 10ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும்.
    • தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    2025-26-ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    மறுநாள் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    கடந்த மாதம் 13-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கடைசி நாளில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வக்பு திருத்த மசோதா குறித்த ஜே.பி.சி. (பாராளு மன்ற கூட்டுக் குழு, அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வுக்காக பாராளுமன்றம் நாளை (10-ந்தேதி) கூடுகிறது. ஏப்ரல் 4-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் கிளப்பும். இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும்.

    தி.மு.க. எம்.பி.க்கள் தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, தமிழகத்துக்காக நிதிப்பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கிளப்பும்.

    அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதுதான வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும்.

    இதுகுறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தும். பல வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை எண்கள் இருப்பது குறித்த பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்ப உள்ளது.

    வக்பு திருத்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் நாளை கூடுவதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிற்க முடியாது என சரத்பவார் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வி.வி.பாட் இயந்திரங்களை நிறுவி ஒப்புகை சரிபார்ப்புசீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. #Oppositionparties #Oppositiontoapproach #approachSC #papertrails
    புதுடெல்லி:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் திமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் முன்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

    வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த 8-ம்  தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் உடனடியாக இதை நடைமுறைப்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தது.

    இதற்கிடையில், பாராளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஆகியவை கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.



    ஆந்திராவில் நடந்த தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

    எந்த கட்சிக்கும் வாக்களித்தாலும் பாஜக வேட்பாளருக்கு வாக்குகள் விழும் வகையில் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரிடம் புகார் அளிப்பதற்காக அவர் டெல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

    காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினர்.

    தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் X கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் Y கட்சிக்கு வாக்குகள் விழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார்.

    வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் 7 வினாடிகள் வரை ஒளிர வேண்டிய விளக்குகள் 3 வினாடிகளில் அணைந்து விடுகிறது.

    சரியான வகையில் நேரடியாக களஆய்வு செய்து பரிசீலிக்காமல் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க எங்களிடம் ஏராளமான புகார்கள் உள்ளன.

    இவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி பிரச்சனை மிக முக்கியமானதாகும். எனவே,வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

    இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் போதிய அக்கறை காட்டவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே கோரிக்கையை முன்வைத்து நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளோம் என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். #Oppositionparties #Oppositiontoapproach #approachSC #papertrails
    அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும், கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.



    பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும்.  கூட்டணி கட்சியினரும் கவனமான இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவரும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். #MamataBanerjee #ParliamentElection
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.

    ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்க முடியவில்லை.

    குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. இங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    இதேபோன்று பல மாநிலங்களில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

    ஆனால், சமாஜ்வாடி கட்சி தனது பிரதிநிதி யாரையும் விருந்துக்கு அனுப்பவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ்சந்திரமிஸ்ரா அனுப்பப்பட்டு இருந்தார். அவர் சில நிமிடங்கள் மட்டும்தான் விருந்து நிகழ்ச்சியில் இருந்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் முழுமை பெறாததையே உணர்த்தும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி அமைந்தது.

    விருந்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, டெல்லியிலேயே தங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.

    இது சம்பந்தமாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்துவதற்கு மாநில அளவிலும், மத்திய அளவிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கட்டாயம் ஆகும். அப்படி முன்கூட்டியே ஒன்றிணைந்தால்தான் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும்.



    சில கட்சிகள் (சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை குறிப்பிட்டு) தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் சேர தயங்கலாம். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் அரசியல் கட்டாயம் அப்படி இருக்கலாம்.

    கம்யூனிஸ்டு கட்சிகள் எங்களுடன் இருப்பார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

    பா.ஜனதா தேசிய தலைவர்களை மேற்கு வங்காள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.

    அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் அவரால் பேரணிக்கு வர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மேற்கு வங்காள நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MamataBanerjee #ParliamentElection

    பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    புதுடெல்லி:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

    இதுதொடர்பாக, கெஜ்ரிவால் பேசுகையில், அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். மேலும், ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து 40 சிபிஐ அதிகாரிகளை அனுப்பி தேர்வு செய்யப்பட்ட அரசுகள் மீது தாக்குதல் நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் போல் டெல்லி மற்றும் கொல்கத்தாவை கைப்பற்ற கனவு கண்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.



    இதேபோல், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாம் இப்போது அபாயத்தில் உள்ளோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் ஒன்றுபட  வேண்டும். ஏனென்றால், நமக்கு இது கடைசி தேர்தலாகும். நாளை முதல் அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெறக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நான்காவது நாளாக இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில், அவருக்கு 22 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தாபானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசிலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்.



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாளாக நீடிக்கிறது. தர்ணா போராட்ட மேடையில் அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர்.

    மேடையில் இருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, நியாயம் கிடைக்கும் வரை சமரசத்துக்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ளார். வருகிற 8-ந்தேதி வரை தர்ணா போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடத்தும் தனது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று அவருக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளன.

    மொத்தம் 22 எதிர்க்கட்சிகள் மம்தாபானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவே பா.ஜனதா தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதை பா.ஜனதா மறுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது பற்றி கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மம்தாபானர்ஜி தொடர்ந்து மீறி வருகிறார். சி.பி.ஐ. அதிகாரிகளை விசாரணை நடத்தவிடாமல் பிணைக்கைதி போல் பிடித்து வைத்திருந்தார். அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு துளி அளவு கூட கிடையாது” என்றார். #MamataDharna #CBIvsMamata
    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju #Jactogeo
    மதுரை:

    மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

    இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.

    அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo

    ×