என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Owaisi"

    • பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்

    கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மசூதிகளில் ஜும்மா தொழுகையைத் தடுக்க முயன்றதாகக் பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீமன் ஓவைசி கடுமையாக சாடினார்.

    ஒரு கூட்டத்தில் பேசியிருந்த ஓவைசி, "சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால், நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    எங்கள் மசூதிகளை மூடியதைப் போல, எங்களை நாங்களும் மூடிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல. ஒரு முதலமைச்சர் (யோகி ஆதித்யநாத்) ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்? என்று பேசியிருந்தார்.

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியதை ஓவைசி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஒவைசி கருத்துக்கள் குறித்து பேசிய தெலுங்கானா பாஜகவை சேர்ந்த கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங், அசாதுதீன் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, தெலுங்கானாவில் தனது கட்சி(பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். ஓவைசிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறிய ராஜா சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாடுகடத்தப்படுவர் என பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    • ஒபாமாவுக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் விமர்சனம்
    • சீனா குறித்து பேசும்போது மோடி, சீனாவின் பெயரை உச்சரிப்பதில்லை

    பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து மோடியிடம் ஜோ பைடன் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், நானாக இருந்தால் மோடியிடம் விவாதித்திருப்பேன் என்றார்.

    இதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளிநாட்டு பயணம் மோடிக்கு சீனாவின் பெயரை உச்சரிக்க தைரியம் கொடுத்திருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். சீனா இந்திய எல்லயைில் அத்துமீறி நுழைந்தபோது, மோடி சீனா என்ற பெயரை உச்சரிக்காமல் அண்டை நாடு போன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். இதனை சுட்டிக்காட்டி ஓவைசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாதுதீன் ஓவைசி கூறுகையில் ''மோடியின் அரசு சீனாவுக்கு எதிராக பேசுவதை விட, மணிப்பூர் வன்முறை குறுித்து பேசுவதை விட ஒபாமாவை விமர்சனம் செய்வதில் ஆர்வமாக உள்ளது.

    மோடியின் வெளிநாட்டு பயணம் சீனாவின் பெயரை உச்சரிக்கவும், 8 வாரங்களாக பற்றி எரியும் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் மவுனம் கலைக்கவும் தையரித்தை கொடுத்திருக்கும் என நம்புவோம்.

    மணிப்பூர் ஆயுத கிடங்கில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஒருவரை கூட இந்த விசயத்தில் தண்டிக்கவில்லை.

    காஷ்மீர் ஒருபுறம் இருக்கட்டும், எதிர்கட்சி ஆளும் எந்த மாநிலத்திலும் இப்படி நடப்பதையும், நமது ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளை கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக புதிய இந்தியாவிடம் இருந்து (மோடி அரசு).

    இந்திய முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா, ஈரான், எகிப்து முஸ்லிம்களுடன் தொடர்பு இல்லை என்பதை நிர்மலா சீதாராமனுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் இந்திய முஸ்லிம்கள். நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை நம்புகிறோம். இந்திய முஸ்லிம்கள் 1947-ல் இந்தியாவில்தான் இருக்க விரும்பினார்கள். எகிப்து மசூதிக்கு சென்றீர்கள். மோடி அவர்களே, நீங்கள் காஷ்மீர் மசூதிக்கு வாருங்கள். நீங்கள் இந்திய பிரதமர், எகிப்து பிரதமர் இல்லை'' என்றார்.

    • பா.ஜனதாவுடன் கைக்கோர்த்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உள்ளனர்
    • காங்கிரசை கடும் விமர்சனம் செய்த கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

    கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டாலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கர்நாடகாவில் உள்ள குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு அழைப்பு இல்லை.

    அழைக்கப்படாதது குறித்து ஒவைசி கட்சியின் செய்தி தொடரபாளர் வரிஸ் பதான் கூறுகையில் ''அவர்கள் எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அரசியல் திண்டத்தகாதவர்கள். நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி உள்ளிட்ட அங்கிருக்கும் தலைவர்கள் பா.ஜனதாவுடன் ஏற்கனவே கைக்கோர்த்தவர்கள்.

    அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை கடும் விமர்சனம் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்தோம். நாங்கள் 2024-ல் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஒவைசி மற்றும் எங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

    • பாலஸ்தீன பிரச்னை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்சனை.
    • காசாவின் ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 'பேய்' என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார்.

    பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரசனை. எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர்.

    உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர்.

    கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை.
    • 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.

    திருப்பதி:

    ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

    ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-

    ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.

    இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.

    ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.

    • இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார்.
    • மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான ஒவைசி எம்.பி. போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து அவர் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

    ஐதராபாத் தொகுதியை கைப்பற்றவும் ஒவைசியை தோல்வியடைய செய்ய பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ஐதராபாத் தொகுதியில் பிரபல நடன கலைஞரான சமூக ஆர்வலர் மாதவி லதா என்பவரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. முதுகலை பட்டதாரியான மாதவிலதா பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்துத்துவா ஆதரவு பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மாதவிலதா முத்தலாக்கிற்கு எதிராக பிரசாரம் செய்தார். மேலும் அவர் பல்வேறு முஸ்லிம் பெண்கள் குழுக்களுடன் தொடர்பில் உள்ளார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்காக சிறிய விடுதியையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மாதவி லதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

    ஒவைசிக்கு இந்த முறை பா.ஜ.க வேட்பாளர் மாதவிலதா கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
    • தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம். ஐ.எம்.) தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அந்த கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

    அக்கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.

    • பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் மே மாதம் 13-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ. எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் சமூக ஆர்வலர் மாதவி லதா போட்டியிடுகிறார்.

    அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவருக்கு ஆயுதம் ஏந்திய கமாண்டோக்களின் வி.ஐ.பி பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.

    பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அவருடன் ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் மாதவி லதா பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒவைசியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சைவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான முகமது பெரோஸ் கான் கூறுகையில்:-

    காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால் ஒவைசியுடன் நட்பு கொள்ள தயார் என மறைமுகமாக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோல்வி அடைய செய்ய எந்த கூட்டணிக்கும் தயார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • 1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது
    • ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்

    இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
    • இந்த முறை ஒவைசிக்கு போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்

    இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
    • பாடலிபுத்ரா தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒவைசி பிரசாரம் செய்தார்.

    பாட்னா:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உத்தர பிரதேசம், பீகார் உள்பட சில வட மாநிலங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாடலிபுத்ரா பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார்.

    அப்போது அசாதுதீன் ஒவைசி பேசுகையில், இதெல்லாம் ஒரு பிரதமர் பேசும் பேச்சுக்களா? எங்களுக்கு அதுபோல் பேசத் தெரியாதா? 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நமது நிலத்தை ஆக்கிரமித்தபோது மோடி அவர்களே சீனாவுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தீர்களா? என்று கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    முன்னதாக பாடலிபுத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது, ஓட்டு ஜிகாத்துக்காக, முஸ்லிம்களை குளிர்விக்க, எதிர்க்கட்சிகள் 'முஜ்ரா' எனப்படும் பெண்களை ஆடவிட்டு மகிழ்வித்து வருகின்றன என குற்றம்சாட்டினார்.

    ×