என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "p. chidambaram"

    • அரசியல் சாசனத்தை வடித்தது அரசியல் சாசன நிர்ணய சபை.
    • இந்திய அரசியலமைப்பு சீரழிக்கப்படுவதை, சிதைக்கப்படுவதை காப்பாற்ற வேண்டும்.

    சென்னை

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபயணத்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியது. அதன்பேரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.துறை, சிறுபான்மை பிரிவு உள்பட 8 அணிகள் சார்பில் இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம் நேற்று தொடங்கியது.

    இந்த பயணத்தின் தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரிகள் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    அரசியல் சாசனத்தை வடித்தது அரசியல் சாசன நிர்ணய சபை. இதில் 389 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்து மகா சபை, பாரதீய ஜன சங்கம், பா.ஜ.க.வில் தலைவர்களாக இருந்தவர்கள் யாருமே உறுப்பினர்களாக இருந்தது கிடையாது. ஆகவே தான் பல இடங்களில் அவர்கள் இந்த அரசியல் சாசனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற மேலவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாததே இதனை தடுக்கிறது. இந்த தடை மட்டும் அகன்றுவிட்டால், நிச்சயமாக அரசியல் சாசனத்தை திருத்துவார்கள், சிதைப்பார்கள், மாற்றி எழுதுவார்கள்.

    இதனை தடுக்க நாடு முழுவதும் உணர்வு வரவேண்டும். மிருக பலம், பெரும்பான்மையை வைத்து அரசியல் சாசனத்தை திருத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுகிற சில திருத்தங்களை தவிர வேறு எதையும் திருத்தமாட்டோம் என்று பா.ஜ.க. சொல்லட்டுமே, சத்தியம் செய்யட்டுமே செய்யமாட்டார்கள். இந்திய அரசியலமைப்பு சீரழிக்கப்படுவதை, சிதைக்கப்படுவதை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கே.எஸ்.அழகிரி பேசும்போது, 'இந்தியாவின் அரசியல் சட்டம்தான் மக்களை பாதுகாக்கின்ற அமைப்பு. இது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை சொல்கிறது. இதனை சிதைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எண்ணுகிறது' என்றார்.

    திக்விஜய்சிங் பேசுகையில், ''மத நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் ஒன்றாக இணைய வேண்டும்'' என்றார்.

    மூவர்ணத்தில் பலூன்களை பறக்கவிட்டு இந்த பயணத்தை தலைவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த பயணத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தொடங்கிய நடைபயணம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் (75 கி.மீ. தொலைவு) நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வதுதான் சிறந்தது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

    அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு தொண்டர்களும், தலைவர்களும் விடுத்துள்ள கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? என்று எனக்கு தெரியவில்லை.

    ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் கட்சித்தலைவராகவும் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இதுவரை அவர் மறுத்து வருகிறார். ஆனால் அவர் மனம் மாறலாம்.

    காங்கிரஸ் கட்சியில் 1921 முதல் 1948 வரை மகாத்மா காந்தி அங்கீரிக்கப்பட்ட தலைவராக இருந்தார். பின்னர் நேரு, அடுத்தது இந்திரா என ஒருவருக்குப்பின் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தனர்.

    இப்படிப்பட்ட மக்கள் தலைவர்களை தவிர, ஓரிரு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் வரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வழிநடத்தியவர்கள் பலர். காங்கிரசின் வரலாற்றில் மக்கள் தலைவரும், கட்சியின் தலைவரும் ஒரே நபராக இருந்த காலங்கள் உண்டு. வெவ்வேறு நபர்களாக இருந்த காலங்களும் உண்டு.

    கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவரும், கட்சியின் தலைவரும் அவராக இருப்பார். இல்லையென்றால் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அவரும், கட்சியை வழிநடத்த வேறொருவரும் இருப்பார்கள்.

    அந்தவகையில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.

    காங்கிரஸ் தலைவர் பதவியானது ஒரு பெரிய பாரம்பரியம், வரலாறு, பரந்த அதிகாரங்கள் மற்றும் பெரிய பொறுப்புகளுடன் கூடியது. அதன்படி காங்கிரஸ் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உயர்ந்த மரியாதை அளிப்பார்கள்.

    தலைவர் பதவிக்கு தேர்தல் என்பது நிலையான நடைமுறைதான். ஆனால் தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வதுதான் சிறந்தது. காங்கிரசும் சரி, பிற கட்சிகளும் சரி இதைத்தான் பின்பற்றுகினறன.

    பா.ஜனதா தலைவரான ஜே.பி.நட்டா, அதற்கு முன்னர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்காரி போன்றவர்களும் ஒருமனதாகத்தான் தேர்வு செய்யப்பட்டார்கள் என நினைக்கிறேன்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் அதிக அளவிலான தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குறைந்த தூரம் அல்லது நீண்ட தூரம் தன்னெழுச்சியாக பங்கேற்று வருகிறார்கள்.

    இதன் மூலம் பழங்காலத்தை சேர்ந்த அதேநேரம் இன்னும் புதிதாகவே இருக்கும் ஒரு செய்தியை மக்கள் கேட்டு வருகின்றனர். அது, 'வெறுப்பு அல்லது கோபம் அல்லது வகுப்புவாத மோதலால் இந்த நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது; அன்பும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்; அத்தகைய ஒற்றுமை மட்டுமே பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும்' என்பதாகும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    • பணவீக்கத்தை பற்றி நிர்மலா சீதாராமன் கவலைப்படவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

    • தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கிறது.
    • ஜி.எஸ்.டி. பொருளாதாரத்தை சிதைத்து விட்டது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தற்போதைய ஜி.எஸ்.டி. பிறப்பு குறைபாடுகளை கொண்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள் மிகவும் மோசமாகி விட்டது என தெரிவித்தார்.

    இன்று அமலில் உள்ள ஜி.எஸ்.டி முறை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி.அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி., வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கும் என்றும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை இது முற்றிலும் சிதைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டி.யை நிராகரிப்பதாகவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய ஜிஎஸ்டியை குறைந்த விகிதத்தில் இருக்கும்படியான ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

    • கொரோனாவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பேரணியாக சென்றனர்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது, "சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்" என்றும் பிரதமர் மோடி யோசனை கூறினார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘பாராளுமன்றத்தில் தரமான விவாதங்களின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியது படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. தரமான விவாதங்களுக்கு தனி நேரத்தை ஒதுக்கவும் பரிந்துரைத்து இருக்கிறார். ஆனால், எனக்கு ஒரு கேள்வி. பிரதமர் மோடி எப்போதாவது பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்றிருக்கிறாரா ?’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தங்களது மகன்களுக்காக சிலர் எம்பி சீட் கேட்டு நிர்பந்தித்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட தகவலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

    குறிப்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை ராகுல் ஆதங்கத்துடன் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

    ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில் விமர்சித்தார். அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார்.


    ராகுலின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம், அசோக் கெலாட் இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று போபால் திரும்பிய மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

    ராகுலின் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் அளித்துள்ள மறுப்பு தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய நேற்று டெல்லியில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங், பிரியங்கா, மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த முடிவை காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.

    தோல்வி குறித்து ஆராயும் போது ராகுல் காந்தி கட்சியின் கீழ்மட்ட தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை சரியாக பிரசாரம் மூலமாக சேர்க்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

    மேலும் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கீழ்மட்ட தலைவர்கள் பிரசாரயுக்திகளை கையாளவில்லை. நான் மேற்கொண்ட பிரசார வி‌ஷயங்களை கூட வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட பிரசாரம் சரியில்லை என்று அவர் குறை கூறினார்.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றவர்கள் தனது மகன்களுக்கு டிக்கெட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

    நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ஏற்க மறுத்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சியை நடத்துவது? என்று ஆதங்கத்துடன் ராகுல் பேசினார்.

    கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கட்டும். நாங்கள் மட்டும் (இந்திரா காந்தி குடும்பம்)தான் தொடர்ந்து தலைவர்களாக இருக்க வேண்டுமா? என்று உணர்ச்சிவசமாக கூறினார்.


    அப்போது அவரை ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், ப.சிதம்பரம் ஆகியோர் அமைதிப்படுத்தினார்கள்.

    பிரியங்கா கூறும்போது, ராகுல் காந்தி தலைவராக இருக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. அவர் ராஜினாமா செய்தால் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறி விட்டதாக ஆகி விடும் என்றார்.

    சிலர் கூறும்போது, நீங்கள் ராஜினாமா செய்தால் அடுத்து கட்சிக்கு யார் தலைவர்? என்பதை சொல்ல முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்டனர்.

    மேலும் சிலர் கூறும் போது, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக தாக்கி பேசுவதால் நீங்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

    நீங்கள் ராஜினாமா செய்வதன் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறி விடும். இதற்கு இடமளிக்க கூடாது என்று சொன்னார்கள்.

    பங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி போன்றவையால் தான் மோடியின் செல்வாக்கு திடீரென உயர்ந்து அவர் வெற்றி பெற வாய்ப்பாக ஆகி விட்டது என்று பலரும் கூறினார்கள். பலர் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

    அப்போது ஏ.கே. அந்தோணி குறுக்கிட்டு முறைகேடுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. கட்சியை அடிப்படை ரீதியாக நாம் இன்னும் வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

    அப்போது ராகுல் காந்தி கட்சியின் எல்லா மட்டத்திலும் ஆய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கட்சி பணிகளில் மாற்று முறையை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அனைவரும் ஒத்துழைத்தால் தான் இதை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் பாரதிய ஜனதாவை வளர்க்கும் பணியை கடுமையாக செய்கிறார்கள். அதே போன்று காங்கிரசிலும் பணிகள் இருக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

    ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

    நாடுமுழுவதும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட பிடிக்க முடியாத பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது.

    அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

    தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது தனது ராஜினாமா முடிவை கூறினார்.


    ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஏற்க மறுத்து நிராகரித்தது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் ராகுலின் விலகலை விரும்ப வில்லை. இதனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பேச்சும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    ப.சிதம்பரம் பேசும்போது, ‘ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் தொண்டர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கூறினார். இதைக்கேட்டு ராகுல் காந்தி மனவருத்தம் அடைந்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதேபோல தலைவர்கள் பலரும் பேசும்போது, வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். எனவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டனர்.

    பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும். 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது.



    தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது.

    பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து 3-வது அணியை ஆட்சி அமைக்க செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக வருகிற 21-ந்தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார். ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில மாநில கட்சி தலைவர்கள் மறுத்து விட்டனர். மே.23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் கூறியதால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிப் போய் உள்ளது.

    இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் அளித்த பேட்டி ஒன்றில், புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய பிரதமர் யார் என்பது இப்போது பிரச்சனை இல்லை. பா.ஜனதாவை வீழ்த்துவது மட்டுமே இப்போதைய உடனடி வேலை. அதன்பிறகு தலைவர்கள் அமர்ந்து பேசி எல்லா கேள்விகளுக்கும் விடை தேடலாம். அடுத்த அரசை அமைப்பது குறித்தும் பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரத்தின் இந்த கருத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இருப்பதற்கு சிக்னல் காட்டுவதுபோல இருப்பதாக கருதப்படுகிறது.
    சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #PChidambaram
    சென்னை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.

    சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
    ×