search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger lounge"

    • பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது.
    • நிழற்கூடம் வேண்டி மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு கொடுக்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பள்ளிப்பாளையம் பிரிவு,

    ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்கூடமும் அமா்வதற்கு இருக்கைகளும் அமைத்துக் கொடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மயகளிர் மற்றும் குழந்தைகள் நலஅணி நகர அமைப்பாளர் சித்ராபாபு மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு வழங்கினார்.

    • ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்படுகிறது
    • பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் தொகுதிகுட்பட்ட ஜவ்வாதுமலை பஸ் நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் நிழற்கூடத்தை சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-

    எனது தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் எம்பி நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் என 30லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் திறப்பு விழா செய்யப்படும் .

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவிலூர் கானமலை நம்மியம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைத்தால் ரேஷன் கடை கட்டுதல் பக்க கால்வாய் அமைத்தல் சிமெண்ட் சாலை ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலூர் நம்மியம்பட்டு கானமலை ஆகிய பகுதிகளில் பாழைந்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையிலும் இருந்து வரும் பள்ளி கட்டிடங்களை சரிசெய்வதற்காக ரூ. 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    ஜவ்வாதுமலையை பொறுத்தவரை அனைத்து சாலைகளையும் புதிதாக போடுவதற்கு மாவட்டத்தின் அமைச்சர் ஏவா வேலு பரிந்துரை செய்துள்ளார்.

    இதனால் ஜவ்வாது மலை ஒன்றியம் முன்னேற்ற பாதையில் செல்கிறது இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×