என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Price"

    • அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.
    • சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.

    கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

    இதனால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்க ளின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.77 அதிகரித்து ரூ.286.77-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.

    அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.293-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானில் பண வீக்கம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதமாக இருந்தது.

    • சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
    • இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

    இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

    கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும்  நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.

    அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

    ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.

    • இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
    • பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்.

    பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (எச்எஸ்டி) விலையை லிட்டருக்கு ரூ.10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.258.16 ஆகவும், எச்எஸ்டி விலை லிட்டருக்கு ரூ.267.89 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் அந்நாட்டு நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த பதினைந்து நாட்களுக்கும் இந்த புதிய விலைகள் பொருந்தும் என்று கூறியது.

    சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோலியத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கை இரட்டை இலக்க பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால்,
    • வாட் வரிக்குப் பதிலாக ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து மாநில மற்றும் மத்திய அரசு இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதம் வரும்போது மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்கள் தெரிவிக்கும்.

    அதேவேளையில் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறையும் என மத்திய அரசு தெரிவிக்கும்.

    இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி வரிக்குள் கொணடு வந்தால் என்ன? என்ற கேள்வியும் எழும்புகிறது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    மாநில அரசுகள் ஒரு பொருந்தக்கூடிய ரேட்டை நிர்ணயித்து பரிந்துரை செய்ய ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வர முடியும். அதன்பின் உடனடியாக எங்களால் நடைமுறைப்படுத்தப்படும்.

    பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் குறிப்பிடத்தகுந்த வகையில் விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வேறுபாடு உள்ளது. இதற்கு மாநிலங்கள் விதிக்கும் மாறுபட்ட வரி விதிப்புதான் காரணம்.

    பிரதமர் மோடியின் கூற்றுப்படி "பெட்ரோலியப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மத்திய அரசு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்படும், ஏனெனில் இது தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மிக உயர்ந்த அடுக்கு (Slab) ஆகும்.

    • சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது.
    • எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.

    இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழல் ஏற்பட்டால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உருவாகும்.

    இந்த நிலையில், 'பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "புவிசார் அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வரும் போதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது."

    "இதனால், தடையற்ற கச்சா எண்ணெய் வினியோகம் குறித்து கவலை கொள்ளத் தேலையில்லை. மேலும். கடந்த காலங்களைப்போல், இந்தியா மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது."

    "எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு. வரும் நாட்களில் விலை குறையும் என்றே நினைக்கிறேன். மேலும், இது என் தனிப்பட்ட கருத்து," என்று தெரிவித்தார்.

    • ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • உயர்த்தப்பட்ட கமிஷன் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்புகளை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    இவ்வாறு உயர்த்தப்பட்ட கமிஷன் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுகளை மேற்கோள்காட்டி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அதில் 88 ஆயிரம் பெட்ரோல் பங்குகளின் 7 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒடிசாவில் பெட்ரோல் விலை ரூ. 4.69 காசுகள் குறை வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்த பதிவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்க வேண்டிய டீலர் கமிஷனை அதிகரிப்பதற்கான எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. (தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் முடிவு பின்னர் செயல்படுத்தப்படும்)."

    "இந்த அறிவிப்பு காரணமாக ஒடிசாவின் மல்கங்கிரியில் உள்ள குனன்பல்லி & கலிமேலாவில் பெட்ரோல் விலை ரூ.4.69 மற்றும் ரூ. 4.55 குறையும். டீசல் விலை முறையே ரூ. 4.45 மற்றும் ரூ. 4.32 குறையும். இதேபோல், சத்தீஸ்கரின் சுக்மாவில் பெட்ரோல் விலை ரூ. 2.09 ஆகவும், டீசல் விலை ரூ. 2.02 ஆகவும் குறையும்."

    "டீலர் கமிஷன் அதிகரிப்பு, நாட்டிலுள்ள எங்கள் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தினமும் வரும் சுமார் 7 கோடி குடிமக்களுக்கு எரிபொருள் விலையை அதிகரிக்காமல் சிறந்த சேவையை வழங்கும்."

    "கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது, நாடு முழுவதும் உள்ள 83,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளில் பணிபுரியும் பெட்ரோல் பம்ப் டீலர்கள் மற்றும் கிட்டத்தட்ட 10 லட்சம் ஊழியர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.
    • கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்துத்துறையின் கீழ் பாகூர், காரைக்கால், மாகி, உழவர்கரை புதுச்சேரி, வில்லியனூர், ஏனாம் மற்றும் புதுச்சேரி செக்போஸ்ட் ஆகிய 8 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் புதிய வாகனம் வாங்கும் போது, அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வாகன பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு 43 ஆயிரத்து 134 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது ஒருநாளைக்கு 18 இருசக்கர வாகனங்கள் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனையாகி உள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களின் விற்பனை 50 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2023-ம் ஆண்டை விட 14 சதவீதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

    சமீப காலமாக நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க, புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து நெருக்கடி, சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 2 ஆயிரத்து 638 ஆக இருந்த இ-ஸ்கூட்டர் விற்பனை, கடந்த ஆண்டு (2024) 3 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு 17 சதவீதம் இ-ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் பெரும் பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் இ-ஸ்கூட்டருக்கு மாறியுள்ளனர்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.

    இந்தநிலையில் தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    • பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார்.
    • வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    அண்டை நாடான பூடான் நாட்டின் பணமான குல்ட்ரம் மதிப்பும் நம் நாட்டு ரூபாயின் மதிப்பும் ஒரே மதிப்பு கொண்டதாக உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அர்பாஸ்கான். வௌியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இணைய தளத்தில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அர்பாஸ்கான் அண்டை நாடான பூடானுக்கு சுற்றி பார்க்க சென்றார். அப்போது நம் நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நிர்வகிக்கும் பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பங்க்குகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோல் விலை குறித்து அறிய ஆர்வம் கொண்டார்.

    பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார். அப்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 63.92 என தெரிந்துள்ளது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுவதை காட்டிலும் பூடானில் 37 ரூபாய்வரை குறைவாக விற்கப்படுவதை அவர் சுட்டிகாட்டினார். இந்த வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    • இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலாகியுள்ளது.
    • பிற எரிபொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. #Congress #PetrolPriceHike

    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

    அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விக்கிரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித், பொதுச்செயலாளர்கள் புருஷோத், ஹரீஸ், செயலாளர்கள் கவுதம், கார்த்திக், மாவட்ட தலைவர் ஆனந்தவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     


    ஊர்வலத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு வந்தனர். ஊர்வலம் நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக தலைமை தபால்நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.   #Congress #PetrolPriceHike

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

    இதனால் தினமும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இன்று பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.



    இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike

    ×