என் மலர்
நீங்கள் தேடியது "Physical Education"
- உடற்கல்வியியல் கல்லூரிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
- இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் இறுதிப்போட்டி கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியின் முதல் பரிசை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும், 2-ம் பரிசை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் செந்தில்குமரன் வெற்றிக்கான கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் செய்திருந்தார். வெற்றிபெற்ற அணிகளுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
- உடற்கல்வி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
- உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் 53-வது ஆண்டு விளையாட்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமணன் செட்டியார், துணைத்தலைவர் சேவுகன் செட்டியார், செயலாளர் சாந்தி ஆச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்டார்.
கல்லூரியில் முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழா தொடக்கத்தில் 11 துறைகள் சார்பாக அணி வகுப்பு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 18பேர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து மைதானத்தில் ஜோதியை ஏற்றி வைத்தனர்.
இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது சமூகம் பரீட்சை நடத்தும் சமூகமாக இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரத்தை 6 அல்லது 8 நிமிடத்தில் கடக்கக்கூடிய மாணவ- மாணவிகளை மட்டும்தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி என்பது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நல்ல உடற்கல்வி ஆசிரியர் தேவை. தமிழ்நாடு அரசு ஸ்போர்ட்ஸ் சென்டர் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அடிக்கடி விளையாட்டு விழா நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
- டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
- தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலை பள்ளியில் 33 ஆண்டு கால பணியில் உடற்கல்வி ஆசிரியராகவும், தேசிய மாணவர் படை அதிகாரியாகவும், உடற்கல்வி இயக்குநராகவும், நாட்டு நல பணித்திட்ட அலுவலராகவும், பள்ளியின் உதவி தலைமையா சிரியராகவும் பணியாற்றி வருபவரும், சென்ற ஆண்டின் தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர். ராதாகி ருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்ற எஸ்.முரளிதரனுக்கு இந்திய அரசின் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய உடற்கல்வி அமைப்பு சார்பில் சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கான விருது புது டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
இவ்விருதினை அவ் வமைப்பின் அகில இந்திய நிறுவன தலைவர் டாக்டர்.பியுஷ் ஜெயின் , தமிழ்நாடு பெபி அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் சபரி கணேஷ் முன்னிலையில், துரோணாச்சாரியர் விருது பெற்ற சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளருமான டாக்டர். ஏ.கே.பன்சல் தேசிய விருதினை சீர்காழி எஸ்.முரளிதரனுக்கு வழங்கினார்.
இவ்விருதினை பெற்ற முரளிதரனை ,பள்ளி முன்னாள் செயலர் பாலசுப்ரமணியம், எஸ்.இராமகிருஷ்ணன் பள்ளி செயலர் சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கபாலி, பள்ளி பழைய மாணவர் சங்க செயலர் முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி,பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் துளசி ரங்கன்,
சீனிவாசன் ,பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்தி வேல், ஹரிஹரன், ராகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அலுவலர்கள் பாராட்டினர்.
- சீனாவில் 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன் விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது.
- உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன்விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. இதனால் உடல் பருமன் சீனாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உடல் பருமன் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உடல் பருமன்பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
சீன மொழி ஆசிரியர், கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் மரியாதையை தரவேண்டும் என்றும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.