என் மலர்
நீங்கள் தேடியது "POCSO CASE"
- சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
- கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் பணிபுரிந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிறது.
அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பாட்டி சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அப்போது சிவகங்கையில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
- பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
- ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.
சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- வார்தா நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
- இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.
இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.
அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
- மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஒரு தலித் தடகள வீராங்கனையாவார். மாணவி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் விளையாட்டிலும், படிப்பிலும் அவரது ஆர்வம் குறைந்தது.
இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அவரை தனியாக அழைத்து கவுன்சிலிங் நடத்தினர். அப்போது, தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி கூறிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆரம்பத்தில் ஆண் நண்பர் என்னிடம் தொடர்பில் இருந்தார். பின்னர் ஆபாச காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அவரது நண்பர்களும் என்னை மிரட்டி என்னை பணிய வைத்தனர். இந்த விவரம் உடற்கல்வி ஆசிரியருக்கு தெரியவர அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்தார்.
மேலும் 2, 3 பேர் கூட்டு சேர்ந்தும் பலாத்காரம் செய்துள்ளனர். அதேபோல் விளையாட்டு தொடர்பாக, வெளியிடங்களுக்கு செல்லும் போதும், அங்குள்ள முகாம்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலவும் திட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து விசாரித்த போலீசார் முதல் கட்டமாக 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாதிக்கப்பட்ட மாணவி தந்தையின் நண்பர்கள் உள்பட 13 பேரை உடனடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் மாணவி 13 வயதாக இருந்த போது ஆண் நண்பர் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அந்த மாணவியின் வாழ்க்கையை ஒவ்வொருவராக சீரழித்துள்ளனர்.
ஆண் நண்பர், அவருடைய நண்பர்கள், மாணவர்கள், தந்தையின் நண்பர்கள், உடற்கல்வி ஆசிரியர் என பட்டியல் நீள்கிறது.
தற்போது கைதானவர்களில் 18 வயதை எட்டாத 2 மாணவர்களும் உள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்றும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்றும், காரிலும், விடுதிகளிலும் வைத்து 60-க்கும் மேற்பட்டோர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 6 போலீஸ் நிலையங்களிலும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், மாணவியின் தந்தைக்கு நெருக்கமான நண்பர்கள் 32 பேர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுவரை மாணவியின் வாழ்க்கையை சீரழித்த 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆதி திராவிடர் என்பதால் எஸ்.சி எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
- கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.
- விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உடல்நலம் பாதித்தது போல் சோர்வாக இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
அப்போது தனது 13 வயதில் இருந்து, பலரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த புகார் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் பத்தினம் திட்டா மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய மாணவி, தன்னை சீரழித்தவர்களின் பெயர் விவரங்களையும் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 64 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 20 பேரை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன், அவரது நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் இருந்தனர்.
காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர்கள் மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாணவி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்தபடி உள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பள்ளி மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணைய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் பரபரப்பை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தங்களின் விசாரணையை உடனடியாக தொடங்கினர். அவர்களின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.
- அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
- தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்த அவரது காதலன், காதலனின் நண்பர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாளப்புழாவை சேர்ந்த அபிஜித் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 2பேர் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.
விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார்.
- மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். வீராங்கனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்தவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று வரை வீராங்கனையின் காதலன், அவரது நண்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், 18 வயதுக்கும் உட்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட வீராங்கனை, தான் கூறிய புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகிறார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் 6 வழக்குகளில் வீராங்கனை ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மற்ற வழக்குகளிலும் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீராங்கனையிடம் ரகசிய வாக்குமூலம் பதியப்படுகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
- மர்ம நபர் சென்ற பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மாணவி கதறி அழுதார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் இப்ராஹிம் பட்டினம் பகுதியில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி உள்ளனர்.
அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மாணவி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மாணவியின் அறை கதவைத் தட்டினார். விடுதியில் பணிபுரியவர்கள் தான் வந்திருப்பார்கள் என நினைத்த மாணவி கதவை திறந்தார். கதவை திறந்ததும் மாணவியை உள்ளே தள்ளிவிட்டு மர்ம நபர் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். மாணவியை தாக்கி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
மர்ம நபர் சென்ற பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மாணவி கதறி அழுதார்.
இதுகுறித்து போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார். நடந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
படுகாயங்களுடன் மாணவியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
டாலர் சிட்டியான திருப்பூரில், பலதரப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. இது போலீசாரின் பார்வைக்கு செல்லும் போது குற்றவாளிகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அன்றாடம் ஒரு வழக்காவது பதிவாகிறது. இதில் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
திருப்பூர் மாநகரில் கடந்த 2ஆண்டில் (2021 மற்றும் 2022 ஏப்ரல் வரை) 82 போக்சோ வழக்கு, புறநகரில் 119 வழக்கு என மாவட்டத்தில் மொத்தம் 201 வழக்கு பதிவாகியுள்ளது. 2 ஆண்டில் போக்சோ வழக்கில் 27 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற வழக்குகள் போலீஸ், கோர்ட்டு விசாரணையில் உள்ளது. மாநகரில், கடந்த 2013 முதல் 2022 ஏப்ரல் வரை 231 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மாநகர் மற்றும் புறநகரில் 5 வழக்குகள் பதிவாகி உள்ளது.