என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Complaint"

    • ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார்.
    • சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 39). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வியா பாரம் முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம நபர் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்தார்.

    இதனை அடுத்து கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார். இன்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி கடையை திறக்கும் போது கடையில் திருடு போயிருப்பது தெரி யவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி இது குறித்து காணை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

    இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.

    அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார்.
    • நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). கோவில் பூசாரி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தொரவி ஏரி நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல்களை மீட்டு பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் காணாமல் போன கண்ணன் மற்றும் அவரது மனைவி பிரேமா என தெரியவந்தது. விசாரணையில் ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற பொழுது ஆழமான பகுதி தெரியாமல் இறங்கியதில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    • வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
    • கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
    • இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் ஆசையை தூண்டி தீபாவளி மற்றும் நகை சிட்பண்ட் நடத்தி வந்தது.

    இதனை நம்பிய பொதுமக்கள் கட்டிய தொகைக்கு அதிகமாக வழங்கிய மளிகை பொருட்கள் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த முகவர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கட்டினர்.

    அந்த சிட்பண்ட் நிறுவனம் அறிவித்தபடி தீபாவளி பரிசு பொருட்கள், நகைகள் அளிக்க முடியாததால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட, ஏமாந்த முகவர்களும் பணம் கட்டிய வாடிக்கையாளர்களும் போராட்டம் நடத்தினர். அந்த நிறுவனம் கடந்த 10-ந்தேதிக்குள் பணம் கொடுப்பதாக உறுதி அளித்தது.

    ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. இதனை அறிந்த ஏமாந்த முகவர்களும், பணம் கட்டியவர்களும் 10-ம்தேதி, 11-ம் தேதி போராட்டம் செய்தனர். செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் மோசடி செய்து மதிப்பு ரூ.43 கோடியாகும். தொடர்ந்து தினமும் புகார் கொடுத்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இது போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு தொடங்கும் பொழுதே அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ் வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள்ஆர்த்தி (வயது17). இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை. இவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆர்த்தியின் தாய்ரேவதி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை.
    • தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார்.

    கடலூர்:

    செஞ்சியை அடுத்த பனமலை என்ற ஊரை சேர்ந்தவர் சர்க்கரை மகன் ஏழுமலை (வயது 47). இவரது மனைவி பவானி (39). இவர்களது குழந்தைகள் எழிலரசி (16). 11-ம் வகுப்பு படிக்கிறார். வாணிஷா (13). ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகன் தஷ்வரன்குமார் (6) இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. ஏற்கனவே பவானியை டிசம்பர் மாதத்தில் அதே ஊரைச் சேர்ந்த நபர் வெளியில் அழைத்து சென்றார். இதனை அறிந்த தான் பவானியை அங்கு சென்று அழைத்து வந்தேன். அதே நபர் தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நடராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
    • டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,

    கடலூா:

    பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23).   இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை

    . அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.      இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • இலக்கியா (வயது 21). இவர் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் மகளைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    கடலூர்:

    சேலம் அருகே உள்ள தலைவாசல் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜராஜன். அவரது மகள் இலக்கியா (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வடக்கிருப்பு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைகழக வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.              இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது பற்றி அறிந்த ராஜராஜன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிந்து இலக்கியாவை தேடி வருகிறார்கள்.   சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். தச்சு தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பதறி போன அவரது மனைவி ராணி இதுபற்றி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலதண்டாயுதத்தை தேடி வருகிறார்கள். 

    ×