என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Polio Vaccination"
- தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
- பிரச்சாரம் தடைக்கான காரணம் குறித்து தலிபான் தகரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் ஆகும்.
செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா. அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், மேலும் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.
பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று பொய்யாகக் கூறப்படுகிறது.
- தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று நடைபெற்றது.
- நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 47 மையங்களில் இன்று வழங்கப்பட்டது.
நெல்லை:
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தி லும் இன்று 3-வது தவணை போலியோ தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான மையங்களில் நடைபெற்றது.
பிறந்த குழந்தைகளுக்கு 2 தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
இதை தவிர முன் எச்சரிக்கை யாக பிறந்த குழந்தைகளுக்கு 9-வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் 3-ம் தவணை யாக போலி யோ தடுப்பூசி இன்று போடப் பட்டது. நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 47 மையங்களில் இன்று வழங்கப்பட்டது.
மாநகர பகுதியில் நகர் நல அலுவலர் சரோஜா ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இன்று காலை முதல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பாளை ஏ.ஆர்.லைனில் உள்ள மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் டாக்டர் தமிழரசி தலைமை யில் நடந்த முகாமினை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்