என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prashant Kishore"

    • ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
    • ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.

    ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

    இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.

    அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது.
    • பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்.

    நேற்று பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்கி பேசினார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சி அப்போது விற்கப்படவில்லை.

    ஒரு மாநில முதல்வர் என்பது அம்மாநில மக்களின் பெருமை. ஆனால், மோடியின் பாதங்களைத் தொட்டதால் பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்தினார்.

    நிதிஷ்குமாரின் கட்சி மக்களவை தேர்தலில் 12 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் தவித்த பாஜகவின் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக உருவெடுத்தது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்? பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை.

    2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதீஷ் குமார் வணங்கியதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • பிரசாந்த் கிஷோர், தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும்.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.

    அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

    இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.

    • அவருக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது.
    • 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

     

     

    அவருக்கு [தேஜஸ்வி யதாவுக்கு] ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். 

    • வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்
    • மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன்.

    2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அதுவரை குஜராத் மக்களிடையேயும், அரசியல் களத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த மோடியை தேசிய பிம்பமாக கட்டமைத்ததில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு உண்டு. தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிராண்டிகிங் ஆலோசனைகளுக்காக பிரசாந்த் கிசோரை நாடத் தொடங்கின.

    பீகார் மாநிலத்தவரான பிரசாந்த் கிஷோர் தற்போது அங்கு ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அடுத்த வருடம் நடக்க உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், தாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள் அம்மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டத்திலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல்பாடுகளையும், பிராதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

    இந்த நிலையில்தான் தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த் கிஷோர், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கண்துடைப்பு வேலை. தற்போதுள்ள மதுவிலக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை. சட்டவிரோதமாக மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறன. அதேவேளை மதுவிலக்கால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்டவிரோத மது விற்பனையால் பயனடைகின்றனர். நான் நடைமுறைக்கு பயனளிக்கும் அரசியலை நம்புபவன். மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு துடைத்தெறியப்படும் என்று தெரிவித்துள்ளார். 2016 ஏப்ரல் 1 முதல் பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
    • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

     

    2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

    கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

     

    ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார்.
    • பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் , பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்

    பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஜனவரி 2 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த வார் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீஸ் குற்றம்சாட்டியது.

    அந்த இடத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் நீதிமன்றத்தின் நிபந்தனையற்ற ஜாமீனில் பிரசாந்த் கிஷோர் வெளிவந்தார். இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] நீரிழப்பு மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

     

    சில மருத்துவப் பிரச்சனைகளை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அவர் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவர் பலவீனமாகவும் அசௌகரியமாகவும் இருக்கிறார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

    வினாத்தாள் கசிந்ததாக கடந்த மாதம் நடத்தப்பட்ட பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, சிவில் சர்வீஸ் தேர்வர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களில் கிஷோர் தன்னை இணத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
    • தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நடிகர் விஜய்தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்றும் நம்மோடு கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்றும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது விஜய் கட்சியின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களை பிரசாந்த் கிஷோர் கேட்டு தெரிந்து கொண்டார்.

    தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான வியூகங்கள் என்னென்ன என்பது பற்றி அப்போது கலந்த ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனையின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்கிற கருத்து பரவலாகவே பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றி நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் நடைபெற வில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காக களத்தில் உள்ள கட்சிகளோடு கைகோர்த்து தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக காய் நகர்த்தி புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்காக தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதன்மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் அதிரடியாக களமிறங்க திட்ட மிட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனால் இன்னும் போகப்போக விஜய்யின் அரசியல் வேகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளது.

    • விஜய் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
    • அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை நாங்கள் தலையிட முடியாது.

    பழனி:

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காக செருப்பு அணிய மாட்டோம் என ஒரு வேள்வி தொடங்கினோம். அதன் 48 நாட்கள் இன்று நிறைவடைந்ததால் பழனியில் வந்து சாமி தரிசனம் செய்தேன்.

    அடுத்த மண்டலத்துக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளேன். தைப்பூச நாளில் மக்கள் மிகுந்த எழுச்சியோடு அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கோவில்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மறுத்து வருகிறது.

    பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் அங்கிருந்து தைப்பூச திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டு அமைச்சர் காந்தியை சுட்டிக் காட்டினேன். இதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த அறிக்கைக்கு நாங்கள் பதில் அளித்துக் கொண்டு வருகிறோம்.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டனர் என்றும், மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய்.

    தமிழகத்தில் கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து, தியாகிகள் செவிலியர்களுக்கு நிரந்தர வேலை என எதுவும் செய்யாமல் மக்களுக்கு முதலமைச்சர்தான் அல்வா கொடுத்து வருகிறார்.

    அல்வா கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் முதல்-அமைச்சர் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்கு தி.மு.க. அரசு அல்வா கொடுத்து வருகிறது.

    விஜய் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். ஏ.சி. அறையில் அரசியல் வல்லுனர்களுடன் கருத்துகளை கேட்டுக் கொண்டு செயல்பட்டால் வெற்றிபெற முடியாது. என் மண் என் மக்கள் என்பதைப் போன்ற யாத்திரையை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் நாங்கள் தலையிட முடியாது. அரசியலில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை சட்டப்படி பயன்படுத்தக்கூடாது. ஆனால் த.வெ.க.வில் சிறார் அணி அமைத்துள்ளதால் அதில் யாரை நியமிப்பார்கள் என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×