என் மலர்
நீங்கள் தேடியது "Prayagraj"
- இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது.
- செல்போனில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் சேத்பூல் சந்த் பாக்லா என்ற முதுகலை கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் புவியியல் பேராசிரியராக ரஜ்னிஷ் குமார் (வயது 50). என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அழகான மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் இல்லை.
பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் அடிக்கடி தனது செல்போன் மற்றும் தனது அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை பார்த்து வந்தார்.
கல்லூரி மாணவிகளை அவருடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்ய முடிவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் மிகவும் அக்கறையாக பேசுவது போல் நடந்து கொண்டார்.
அந்த மாணவிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும், தனக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதுபற்றி பேசுவதற்காக தனது அறைக்கு வரும்படி மாணவியை அழைத்துச் சென்றார். அங்கு வந்த மாணவியை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். அதனை தனது கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.
கண்ணீர் விட்டு கதறிய மாணவியிடம் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் ஆபாச படத்தை ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.
இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.
ஒரு மாணவியை சீரழித்த பேராசிரியரின் ஆசை நிற்கவில்லை. ஆண்டுதோறும் அவருடைய லீலைகள் தொடர்ந்தன. மேலும் பல மாணவிகளை அதிக மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியும். மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.
அதனை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளாக பேராசிரியரின் அட்டூழியம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி தன்னுடைய அறைக்கு வரவழைத்தார்.
அப்போது மாணவியிடம் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் அத்துமீற தொடங்கினார். பதறிப்போன மாணவி அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது. இதனை அறிந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். புகார் கொடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தலைமறைவாக இருந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமாரை கைது செய்தனர்.
அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் போலீசார் ஆய்வு செய்தபோது 65-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.
மற்ற ஆபாச வீடியோக்கள் அவர் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். அடிக்கடி செல்போனில் இருந்த ஆபாசங்களை பார்த்து ரசித்துள்ளார்.
இது குறித்து ரஜ்னிஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தருவதாகவும், அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி மாணவி களை அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தேன். மேலும் சில மாணவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளேன்.
கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரை அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்தேன். அப்போது எங்களுக்கு தெரியாமலேயே அங்கிருந்த கம்ப்யூட்டர் வெப்கேமராவில் உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகிவிட்டது.
அதனை பார்த்த பிறகுதான் எனக்கு மற்ற மாணவிகளை கற்பழித்து ஆபாச படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டியது.
இதனைத் தொடர்ந்து எனது கம்ப்யூட்டரில் பாலியல் பலாத்காரத்தை பதிவு செய்வதற்காக சிறப்பு கேமரா மென்பொருள் ஒன்றை நிறுவினேன். அதன் மூலம் மாணவிகளின் ஆபாச படங்களை பதிவு செய்தேன்.
இதுவரை எத்தனை மாணவிகளை கற்பழித்துள்ளேன் என்பது எனக்கே தெரியவில்லை. மாணவிகளை ஆபாச படங்களை காட்டி மிரட்டியை அடிபணிய வைத்து அமைதியாக இருக்கச் செய்தேன். இதனால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்லூரி பேராசிரியர் மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளை கற்பழித்து வீடியோ எடுத்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் குறித்து போலீசாருக்கு கடிதம் மூலம் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில் பேராசிரியர் செல்போனில் உள்ள ஆபாச படங்கள் நிறைந்த பென்டிரைவ் ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.
அதில் பேராசிரியர் அதிக மதிப்பெண்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவிகளை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
"நான் என் உண்மையான பெயரைப் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் இரக்கமற்ற பேராசிரியர் என்னைக் கொன்றுவிடுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனே பேராசிரியர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
- தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் பிஷப் ஜான் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பருல் பால்தேவ் என்ற பெண்மணி தலைமை ஆசிரியையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு புதிய தலைமை ஆசிரியையை நியமித்துள்ளது.
ஆனால் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்க மனமில்லாத பருல், தலைமை ஆசிரியை அறையை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துள்ளார். இதனால் பள்ளி தாளாளர் உட்பட பிற பணியாளர்கள் ஒன்றாக திரண்டு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே நாற்காலியில் அமர்ந்திருந்த பருலை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் நாற்காலியில் இருந்து நகராமல் இருந்த பருலை பிடித்து இழுத்து அகற்றி அந்த நாற்காலியில் புதிய தலைமை ஆசிரியரையை அமர வைத்துள்ளனர். தன்னிடம் கடுமையாக நடந்த கொண்டவர்கள் மீது பருல் போலீசில் புகார் அளித்துள்ளார். பள்ளியின் தலைமையாசிரியையிடம் நிர்வாகம் தகாத நடந்துகொண்ட இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவு கண்டங்களை குவித்து வருகிறது.
- உ.பி. பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும்.
- அடுத்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கவுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்க உள்ளதால் பிரயக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி பிரயக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் தற்காலிகமாக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் முதலாவதாக பிறந்த குழந்தைக்கு 'மகா கும்ப்' என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.
- கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
- மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு கும்பமேளா விழா நடைபெறுகிறது. பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் (மகர சங்கராந்தி) கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது 3½ கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து தற்போது வரையில் 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மவுனி அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்களை இயக்க பிரயாக்ராஜ் கோட்டம் விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன், பயணிகளுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டத்தின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மாளவியா இது குறித்து கூறியதாவது:-
ஜனவரி 29-ந் தேதி மவுனி அமாவாசை அன்று 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை பிரயாக்ராஜ் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் வழக்கமான ரெயில்களுடன், கோட்டத்தில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த திட்டங்களின் மூலம் பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம், மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
2019-ல் மவுனி அமாவாசையின் போது இயக்கப்பட்ட 85 ரெயில்களை விஞ்சும் வகையில், ஒரே நாளில் 150 சிறப்பு ரெயில்களை இயக்குவது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு.
- உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
மகா கும்பமேளா திருவிழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 29-ந்தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஒரே நேரத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பட்ஜெட் கூட்ட விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி பேசுகையில் "45 நாட்கள் கும்பமேளா திருவிழாவிற்கான 2500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய மற்றும் துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தவர்களின் எணணிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்குதல் குறித்து எந்த தெளிவும் இல்லை.
மாநில அரசின் குறைபாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணை மத்திய அரசால் ஏன் எடுக்கப்படவில்லை?, நீங்கள் அதை ஒரு உள்நாட்டு பிரச்சனையாக ஆக்கிவிட்டீர்கள். அது இனி ஒரு மாநில பிரச்சினை அல்ல. மகா கும்பமேளா தொடர்பான புகார்களை விசாரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
- ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
- பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை போலீசார் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சுபேதர்கஞ்ச் ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி பிளாட்பார்மில் சிக்கியுள்ளார்.
இதனை பார்த்த கபில் குமார், சந்தோஷ் யாதவ் ஆகிய 2 போலீசார் உடனடியாக பயணியை மீட்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
- 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது.
- 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
மகா கும்பமேளா விழா கடந்த மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட குவிந்தனர்.
45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
பின்னர் அவர் பேசும்போது பிரயாக்ராஜ் மக்களை பெரிதும் பாராட்டினார். மகா கும்பமேளா குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டி விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது.
மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர்.
பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதன் விளைவு இன்று இந்த வடிவத்தில் நம் முன் வந்துள்ளது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால் இந்நகரின் பெயரை அடிக்கடி செய்திகளில் காண முடியும்.
அலகாபாத் நகரில் வரும் ஜனவரி மாதத்தில் கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் அங்குள்ள சாதுக்கள், ஜீயர்கள் மற்றும் பூசாரிகளுடன் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நகரம் இன்று முதல் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும். இந்த முடிவின்மூலம், இந்திய கலாசாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என அம்மாநில மந்திரி சித்தார்த்தநாத் சிங் தெரிவித்துள்ளார். #UPcabinet #Allahabadrename #Prayagraj
இந்தியாவில் பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த வகையில் புதிதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாறுகிறது.
இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அலகாபாத்தில் கும்ப மார்க்தர்ஷக் மண்டல் என்ற அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், துறவிகள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று விரைவில், அலகாபாத் என்ற பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்படும் என்றும், இதற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு உத்தரபிரதேச அரசு கடிதம் எழுதும் என்றும் கூறினார்.
அலகாபாத் நகரின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என மாற்றுமாறு துறவிகள் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கைக்கு, மாநில கவர்னர் ராம்நாயக் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். #Allahabad #Prayagraj #YogiAdityanath