என் மலர்
நீங்கள் தேடியது "Public allowed"
- மொத்தம் 1,216 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலியிட தடை விதிக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
மேலும் தைப்பூச விழா தொடங்க இருக்கும் நிலையில் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் காரணம் கூறியிருந்தனர்.
இருந்தபோதிலும் இந்து முன்னணியின் அறப் போராட்ட காரணமாக மதுரை மாவட்டம் முழுவதி லும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.
போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மீறி வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.
போராட்ட நாளான நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சியினரோ, இந்து அமைப்பினரோ செல்ல 2-வது நாளாக தடை விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
- தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
- மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கோரிக்கை
அதில், மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனத்துறை மூலம் செய்ய வேண்டிய பணிகளை நிறை வேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சந்திப்பின் போது பேரூர் தி.மு.க செயலாளர், முத்துகணேசன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோனி யம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.