என் மலர்
நீங்கள் தேடியது "Ramadan Festival"
- பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர்.
நாகப்பட்டினம்:
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்பட்டதை யொட்டி, இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பின், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். தொழுகையில் பங்கேற்ற சிறுவர்களும் கைக்குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.
இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
- திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில்
- படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் பண்டிகையை யொட்டி தாம்பரத்தில் இருந்து மாா்ச் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி-தாம்பரம் இடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06048) பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06047) இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் இருக்கை வசதி கொண்ட இரு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்பு லியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மரு வத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை-பெங்களூரு
பெங்களூரில் இருந்து 28-ந்தேதி முதல் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார் பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
- சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.
நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்கள் மீது ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. "எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற் கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பு இருக்கிறாரோ, அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
"இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பரிசுத்த மானவர்களாக ஆகக்கூடும்". (திருக்குர்ஆன் 2:183)
நோன்பு யாருக்கு கடமை?
1) முஸ்லிமாக இருக்க வேண்டும்
2) பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்
3) புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும்
4) சுகமுள்ளவராக இருக்க வேண்டும்.
5) ஊரில் தங்கி இருக்க வேண்டும்
இந்த ஐந்து அடிப்படைகளின் மீது இருப்பவர்கள், புனித ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த ஐந்து அடிப்படைகளில் ஒன்றை இழந்திருந்தாலும் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகாது. நோன்பு இரு வகைப்படும். அவை: கடமையான நோன்பு, உபரியான நோன்பு.
கடமையான நோன்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிகிறது. ரமலான் மாத நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, நேர்ச்சை நோன்பு, இம்மூன்று நோன்புகளையும் நோற்பது கடமையாகும்.
உபரியான நபி வழி நோன்புகள் எட்டு வகைகளாக பிரிகிறது. அவை: வாரத்தில் திங்கள், மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, மாதத்தில் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களின் நோன்பு, முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பு, துல்ஹஜ் மாதத்தின் 1 முதல் 9 நாட்களின் வரையுள்ள நோன்பு, ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோற்கப்படும் நோன்பு, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான மாதங்களில் வைக்கப்படும் நோன்பு, ஒருநாள் நோன்பு மறுநாள் ஓய்வு ஆகிய எட்டு வகையான நோன்புகள் உபரியான நபிவழி நோன்புகளாகும்.
கடமையான ரமலான் மாத நோன்புகளை நோற்பதற்கு, மேற்கூறப்பட்ட எட்டு வகையான நோன்புகளும் பயிற்சிக்களமாக அமைகிறது. இதனால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க உடல் வலிமையையும், மன வலிமையையும் முஸ்லிம்கள் பெற்று சர்வ சாதாரணமாக நோன்பிருக்கிறார்கள்.
`இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலில் இருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்" (திருக்குர் ஆன் 2:187)
இஸ்லாம் மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஸூம் உணர்த்துகின்றன. நோன்பு வைத்திருக்கும் பகல் வேளையில் மட்டுமே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் கூடாதே தவிர இரவு நேரங்களில் அல்ல. பகல் இறைவனுக்கு, இரவு நமக்கே. இறைவனுக்காக இருக்கும் உண்ணாவிரதம், மனித உணர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை. சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.
- ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
- மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
`கருணையின் வாசல் திறக்கப்படும் புனித ரமலான்'
'ரமலான் மாதம் வந்துவிட்டால் கருணையின் வாசல்கள் திறக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) புனித ரமலானில் கருணையின் வாசல் திறக்கப்பட்டதன் பின்னணியில் தான் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வணக்க வழிபாடுகளில் ஈடுபட வழி பிறக்கின்றன. பாவங்களில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கின்றன.
அன்பு மலர்கின்றன, அமைதி நிலவுகின்றன, சாந்தி பரவுகின்றன, சமாதானம் பிறக்கின்றன, சகோதரத்துவம் வளர்கின்றன. ஈவு, இரக்கம், ஈகை ஆகிய பண்புகள் பரிணமிக்கின்றன. இறைவனின் அன்பு, அவனின் தரிசனம், சொர்க்கம் இவையாவும் ஒருவரின் வணக்கத்தினால் மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இதற்கும் மேலாக இறைவனின் கருணை அவசியம் தேவைப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள், 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)' என்று கூறினார்கள்.
மக்கள், 'தங்களையுமா? (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லையா) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்), என்னையும் தான்; அல்லாஹ் தனது கருணையாலும், அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி)
ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 'நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! எனக்கு கருணை புரிவாயாக, மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.' (நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல் லாஹ் கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டான் (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
'அல்லாஹ் அன்பையும், கருணையையும் படைத்தபோது, அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் 99 வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான் (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
'ஆனால் எனது கருணை எல்லாப் பொருட்களின் மீதும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனை பயபக்தியுடன் பேணி நடப்போருக்கும், (முறையாக) ஜகாத் கொடுப்போருக்கும், நமது வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள்செய்வேன்' (திருக்குர்ஆன் 7:156)
இறைவனின் கருணை கிடைத்திட மேற்கூறப்பட்ட நற்செயல்களையும் சேர்த்து, புனித ரமலானில் நோன்பு நோற்றால் இறைவனின் கருணை கிடைக்கும். இறைவனின் கருணைப்பார்வை நம் மீது விழும் போது பாவ மன்னிப்பும், சொர்க்கமும் உறுதியாகும்.
- மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
- ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.
பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்
புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.
அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.
எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.
தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.
உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)
'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்
சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)
அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.
பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.
- ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
- ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.
ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்
'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.
ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)
மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.
மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.
'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)
'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)
'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).
வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.
- ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
- வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.
ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி
இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.
'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)
நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.
ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.
'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.
இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.
'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)
இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:
1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.
3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.
4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.
5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.
7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.
- புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்.
- நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.
புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்
ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
'புனித ரமலான் மாதத்தின் முதல் இரவு உதயமாகி விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து எந்த ஒன்றும் மூடப்படாது. ஒரு அறிவிப்பாளர் நன்மை தேடுபவரே! நன்மை செய்வதின் பக்கம் முன்னோக்கிச் செல்லும்.' 'தீமை நாடுபவரே! தீமையை குறைத்துக் கொள்ளும்' இவ்வாறு அறிவிப்பு செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா)
திருக்குர்ஆனில் சொர்க்கத்தை பற்றி பலவிதமான பெயர்களில் வர்ணிக்கப்படுகிறது.
1) 'ஜன்னத்' (சொர்க்கம்),
2) 'ஜன்னத்துல் குல்த்' (அழியாத சொர்க்கம்),
3) 'ஜன்னத்துல் மஃவா', (தங்குமிடம் சொர்க்கம்),
4) 'ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' (சொர்க்கச்சோலை),
5) 'ஜன்னத் அத்ன்' (நிலையான இன்பம் கொண்ட சொர்க்கம்),
6) 'தாருஸ்ஸ லாம்' (அமைதி இல்லம்),
7) ஜன்னத்துன் நயீம்' (இன்பமயமான சொர்க்கம்),
8) 'தாருல் ஹயவான்' (நித்திய வாழ்வுடைய வீடு),
9) 'தாருல் முகாமா' (நிரந்தரமான வீடு),
10) 'அல்மகாமுல் அமீன் (அபயம் தரும் இடம்),
11) மக்அத் சித்க்' (உண்மையான இருக்கை),
12) 'தாருல் முத்தகீன்' (இறையச்சமுள் ளவர்களின் வீடு),
13) 'அல்குர்பா' (மாளிகை),
14) தாருல் கரார்' (நிலையான வீடு),
15) அல் ஹூஸ்னா (அழகிய சொர்க்கம்).
இப்படிப்பட்ட சொர்க்கங்களில் நூற்றுக் கணக்கான படித்தரங்கள் உண்டு! சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்:புகாரி) அவை:
1) பாபுஸ் ஸலாத் (தொழுகைவாசல்),
2)பாபுல் ஜிஹாத் (அறப்போர் வாசல்),
3) பாபுர் ரய்யான் (நோன்பு வாசல்),
4) பாபுஸ் ஸதக்கா (தர்ம வாசல்),
5) பாபுல் ஹஜ் (ஹஜ் வாசல்),
6) பாபுல் வாலித் (தந்தை வாசல்),
7) பாபுல் அய்மன் (வலதுபுற வாசல்),
8) பாபுத் தவ்பா (மன்னிப்பின் வாசல்).
ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களில் இருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார்.
தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளி ரய்யான்' வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்ம வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
சொர்க்கத்தின் 8 வாசல்களும் புனித ரமலான் மாதம் முழுவதும் திறந்தே இருக்கின்றன. நோன்பாளிக்கென்று ரய்யான் வாசல் உள்ளது. அதன் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். சொர்க்கத்தில் ரய்யான்' எனும் ஒரு வாசல் உண்டு. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். 'நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுந்து, அதன் வழியாக நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும். வேறு எவரும் அதன் வழியாக நுழைய முடியாது என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹ்ல் (ரலி), நூல்:புகாரி)
சொர்க்கவாசல்கள் திறந்திருக்கும் புனித ரமலானில் சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க் கத்தில் இடம்பிடிக்க நாம் முனைப்புடன் செயல்படுவோம். இறை சிந்தனையிலும், இறை வழிபாட்டிலும் புனித ரமலானில் அதிகம் ஈடுபடுவோம். நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.
- இஸ்லாமியர்கள் ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும்.
- எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது.
தொழுகைக்கான முதல் அழைப்பு
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 'ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும். பருவ வயதை அடைந்ததில் இருந்து மரணமாகும் வரைக்கும் நீங்காத ஒரே கடமை தொழுகை தான். நின்று தொழ முடியாத பட்சத்தில் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாத பட்சத்தில் படுத்துக்கொண்டும் தொழ வேண்டும். இதுவும் முடியாதபட்சத்தில் தொழுகையின் முறைகளை சமிஞ்கை செய்து, எண்ணவடிவங்களை மனக் கண்முன்னே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது. 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறை வனை வணங்குவீராக!' (திருக்குர்ஆன் 15:99)
ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அந்தந்தத் தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும். இதற்கு பாங்கு என்று பார்ஸி மொழியில் சொல்லப்படும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறி தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த சமயம் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக்கூடாதா?' என்றார்.
உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)
அப்துல்லாஹ் பின் ஜைத் பின் அப்துரப் (ரலி) கூறுவதாவது: 'நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். கையில் மணியை வைத்துள்ள ஒரு வானவர் என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிடம் 'மணியை விற்கப் போகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?' என்று கேட்டார். 'அதை வைத்து நான் மக்களுக்கு தொழுகை அழைப்பு விடுப்பேன்' என்றேன். அதற்கு வானவர், இதை விடச் சிறந்த ஒரு அழைப்பை நான் உமக்கு அறிவித்துத் தரட்டுமா?' எனக் கேட்டதும் நான் ஆம்,என்றேன்.
'அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்,
அல்லாஹூ அக்பர்,
அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,
அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,
அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல் லாஹ்,
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்,
ஹய்ய அலஸ்ஸலாத்,
ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்,
ஹய்ய அலல் பலாஹ், அல்லாஹூ அக்பர்.
அல்லாஹூ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ்.
இவ்வாறு நீர் கூறவேண்டும் என்றார்.
அதிகாலையில் நான் கண்ட கனவை நபி யிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) 'இது உண்மையான கனவு. நீர் எழுந்து பிலாலிடம் (ரலி) கூறும். அவர் பாங்கு சொல்லட்டும். ஏனெனில் உம்மை விட அவர் குரல் வளமிக்க வர்' என்றார்கள்.
இதை கேள்விப்பட்டு நபியிடம் வந்த உமர் (ரலி) சத்தியத்தை கொண்டு தங்களை அனுப்பிய இறைவன் மேல் ஆணை! அவர் கண்ட கனவைப்போன்று நானும் கண்டேன்' என்றார். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' என நபி கூறினார்கள்'. (நூல்: அஹ்மது, இப்னுமாஜா, அபூதாவூத்)
இன்று உலகளாவிய அளவில் இவ்வாறு சொல்லப்படும் பாங்கு முறை, ஹிஜ்ரி முதலா மாண்டு ரமலான் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். பாங்கோசை கேட்டதும் தொழு கைக்கு விரைவோம். நன்மைகள் பெறுவோம்.
- நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
- நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.
நோன்பு ஒரு கேடயம்
நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)
நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.
முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.
அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)
"உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)
"ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)
நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.
நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.
"ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.
- அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்.
- நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்வோம்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்
நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் விதையாக இருந்தவர். நபி கொண்டு வந்த ஏகத்துவ ஓரிறைக் கொள்கைக்கு மக்காவில் எதிர்ப்பு கிளம்பிய போது, நபிக்கு அச்சுறுத்தல் வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அரணாக அமைந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். அவரின் பிறப் பையும், தியாக வாழ்வையும், மறைவையும் இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கதீஜா அவர்களின் தந்தை குவைலித் பின் அஸத் குரைஷி அஸதீ, தாய் பாத்திமா பின்த் ஸாயிதா ஆவார்கள். அவர் கி.பி. 556-ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது. முந்தைய இரு திருமணமான மணமகன்களும் இறந்துவிட்டனர். இவருக்கு 40 வயதாக இருக்கும் போது விதவையான இவரை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்ளுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடை நாயகியாகத் திகழ்ந்தார்கள்.
அண்ணலார் அன்னையருடன் கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் துக்கநேரத்தில் ஆறுதல் அளிக்கும் நபராகவும், சிரமமான நேரத்தில் உற்ற தோழியாகவும், வாழ்க்கைத் துணைவியாகவும், நபியின் தூதுவச் செய்திக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது நபியைக் காக்கும் அரணாகவும், நபிக்கு தமது உடலாலும், பொருளாலும் உதவிய தியாகச் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.
நபியின் வெற்றிக்கு பின் புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தார்கள். மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா (ரலி) என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப் படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கியபோது, அவர் என்னைத் தமது பொருளால் அரவணைத்துக் கொண்டார். அவர் மூலமாகத் தான் அல்லாஹ் எனக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைகள் வழங்காமல் செய்துவிட்டான் என நபி (ஸல்) கூறினார்.' (நூல்: அஹ்மது) 'நபி (ஸல்)
அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) குடியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : உர்வா பின் சுபைர் (ரலி), நூல்:புகாரி)
கதீஜா (ரலி) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமலான் மாதத்தில் தமது 65-வது வயதில் மரணமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. தமது மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகும் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவரின் தோழிகளுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தார்கள்.
'நான் நபி (ஸல்) அவர்களிடம் உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே! என கேட்டபோது, அவர் புத்திசாலியாக இருந்தார். சிறந்த குணமுடையவராக இருந்தார். மேலும், அவர் வாயிலாகத்தான் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைத்தது' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
'மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா (ரலி) ஆவார்.' (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: புகாரி).
அன்னை கதீஜா இறந்த பிறகும் நபி (ஸல்) அவரை நினைவு கூர்ந்தார். நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.
- புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்.
- அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர்.
புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமலான் மாதம் வந்துவிட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது சமுதாயத்தினருக்கு ரமலான் மாதத்தில் ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வேறு எந்த சமுதாயத்தினருக்கும் வழங்கப்படவில்லை.
1) நோன்பாளியின் வாய் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக அமைகிறது.
2) நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் அவர்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறது.
3) ரமலானில் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் அந்த சொர்க்கத்திடம் எனது நல்லடியார்கள் தங்களை விட்டும் உலகத்துன்பங்களை தூக்கியெறிந்து விட்டும் விரைவில் உன்னிடம் வர இருக்கிறார்கள்' என்று கூறுகிறான்.
4) அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர். இதனால், ரமலான் அல்லாத மாதங்களில் எந்தத் தீமை கள் சம்பவித்ததோ அந்த விதமான தீமைகள் ரமலான் மாதத்தில் நடைபெறமுடிவதில்லை.
5) ரமலான் மாதத்தின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே! பாவமன்னிப்பு வழங்கப்படும் அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா?' என நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, எனினும் ஒரு வேலைக்கார னுக்கு கூலி கொடுக்கப்படுவது, அவர் தம் வேலையை முடித்தபிறகுதான்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)
மேற்கூறப்பட்ட நபிமொழியில் 'அட்டூழியம் புரியும் பெரிய ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு, சிறைபிடிக்கப்படுகின்றனர், என்று வருகிறது. இதனால், மற்ற மாதங்களில் இஸ்லாமியர்களி டம் வெளிப்படும் பாவமான பல காரியங்கள் புனித ரமலான் மாதத்தில் வெகுவாக குறைந்து விடுகிறது.இதையும் மீறி சிறு சிறு தவறுகள் ரமலானில் நடைபெறுவதற்கு காரணம் சாதாரண ஷைத்தான்களின் ஆதிக்கத் தால் நிகழ்கிறது. அவர்கள் ரமலானில் உலா வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், ரமலானில் பாவங்கள் குறைந்து காணப்படுவதற்கு மற்றொரு காரணம்; ஒருவர் நோன்பு நோற்பதினால் பசித்தவராக, தாகித்தவராக, பலவீனம் அடைந்தவராக இருப்பதால் அவரின் வீரியம் குறைகிறது. அவரின் தீவிர உடல் இயக்கமும் சற்று தடைப்படுகிறது. இதனால் அவரிடம் ஏற்படும் தவறுகளின் வீரியமும் குறைந்து விடுகிறது.
'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஒடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸபிய்யா (ரலி), நூல்: புகாரி)
மனித ரத்த நாளங்களில் ஊடுருவி விட்ட ஷைத்தான்களை கட்டுப்படுத்தும் ஆயுதம் தான் புனித நோன்பு ஆகும். பசியின் மூலமாக ரத்த ஓட்டத்தை மிதமாக்கி, தவறான எண்ணத்தை அகற்றி, அவனை வென்றுவிடலாம். ஆக புனித ரமலானில் ஷைத்தானின் நடமாட்டத்தை ஒருபுறம் இறைவன் விலங்கிட்டும், மறுபுறம் நோன்பாளிகள் நோன்பிருந்தும் கட் டுப்படுத்துகின்றனர்.
மனிதர்களை வழிகெடுக்கின்ற ஷைத்தானின் பிடியில் இருந்து நாம் விடுபட இந்த புனித ரமலான் மாதம் வழிகாட்டுகிறது. இதை நாம் பயன்படுத்திக்கொண்டு நோன்பிருந்து, நற்செயல்கள் புரிந்து, தொழுகையில் ஈடுபட்டு நம்மை நல்வழிப்படுத்திக் கொள்வோம். வாருங்கள்