என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RBI"

    • நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
    • அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.

    நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.

    அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும்.
    • வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    * ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை

    * ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும்.

    * வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது.

    இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றால் வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பும் வெளியானது.

    இதனால் தங்களிடம் இருக்கும் பணத்தை மாற்ற பொதுமக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டது. இதன் பின்னர் ரூ.2 ஆயிரம் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    ஆனால் நாட்கள் செல்ல செல்ல ரூ.2 ஆயிரம் நோட்டின் புழக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்ப்பதே அரிதாகி விட்டது.

    இந்த நிலையில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஒரு நபர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றால் வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடைக்கு எடுத்து வந்தால் அந்த நோட்டுகளை வாங்க மறுக்கும் வியாபாரிகள், வங்கிகளில் போய் மாற்றிக் கொள்ளுங்கள்.

    உங்கள் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு தாங்கள் போய் மாற்றினால் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் எதையும் கொடுக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இன்று இதனை காண முடிந்தது.

    ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் என அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்தாலே வியாபாரிகள் பொதுமக்களிடம் இருந்து அதனை வாங்காமல் திருப்பி அனுப்பிய நிலையே காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆவடி அய்யர் பவன் ஓட்டல் அதிபர் அய்யா துரை கூறும்போது, "கடந்த முறை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டபோது பொதுமக்களின் நலன் கருதி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கினோம்.

    அதுபோன்று வாங்கிய அதிகப்படியான பணத்தை வங்கிகளில் சென்று வியாபாரிகள் மாற்றியபோது நிறைய சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. அதிகப்படியான பணத்துக்கு வங்கி அதிகாரிகள் கணக்கு கேட்டு தொல்லை கொடுத்தனர். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

    இதன் காரணமாகவே இந்த முறை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் தயங்குகிறார்கள். இதனால் கடைக்கு வரும் பொது மக்களிடம் வங்கிகளுக்கு சென்று நீங்களே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளுங்கள், மற்ற ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி வருகிறோம்" என்றார்.

    இது தொடர்பாக வியாபாரிகள் சங்க அமைப்பினர் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூக வலைதளங்களில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    நமது வியாபாரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து யாரும் ஒவ்வொரு 2 ஆயிரம் ரூபாய் தானே தருகிறார்கள் என்று வாங்காதீர்கள். நீங்கள் அதை வங்கியில் தான் மாற்ற வேண்டும். ஆகையினால் உங்களது வங்கிக் கணக்கு வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஆகையினால் யாரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம். வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு எந்த அக்கவுண்டில் ஏறுகிறதோ அவர்கள் வருமான வரித்துறைக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டி வரும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பொதுமக்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு இன்றில் இருந்தே எந்த பலனும் இல்லை என்கிற நிலையே ஏற்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வருகிற 23-ந்தேதி முதல் வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கு மக்கள் வங்கிகளில் முண்டியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கும் இன்னும் 4 மாதங்கள் வரை அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும்.
    • கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி கேள்வி-பதில் வடிவத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    2,000 ரூபாய் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?

    ஆர்.பி.ஐ. சட்டம், 1934-ன் பிரிவு 24(1)-ன் கீழ் நவம்பர் 2016-ல் ரூ.2000 மதிப்புடைய நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அனைத்து ரூ.500 மற்றும் சட்டப்பூர்வ டெண்டர் நிலையை திரும்ப பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 நோட்டுகள் அந்த நோக்கம் நிறைவேறியதாலும், மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பதாலும், 2018-19-ல் ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

    2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளில் பெரும்பாலானவை மார்ச் 2017-க்கு முன் வெளியிடப்பட்டன மற்றும் அவற்றின் ஆயுட் காலம் 4 அல்லது 5 ஆண்டு கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பு பொதுவாக பரிவர்த்த னைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது.

    மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, 2000 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சுத்தமான குறிப்பு கொள்கை என்றால் என்ன?

    பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை இது.

    2,000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை நீடிக்குமா?

    ஆம், 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும்.

    சாதாரண பரிவர்த்தனைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாமா?

    ஆம், பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தலாம் மற்றும் பணம் செலுத்தி பெறலாம். இருப்பினும், அவர்கள் செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், அல்லது மாற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்ய வேண்டும்?

    பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம். 2023 செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து வங்கிகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் வசதி இருக்கும். ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் (ஆர்.ஓ.க்கள்) மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும்.

    2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?

    வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டப்பூர்வ, ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.

    மாற்றக்கூடிய 2,000 ரூபாய் நோட்டுகளின் செயல்பாட்டு வரம்பு உள்ளதா?

    பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

    வணிக நிருபர்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?

    ஆம், 2,000 ரூபாய் நோட்டுகளை பி.சி.க்கள் மூலம் ஒரு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை மாற்றிக் கொள்ளலாம்.

    எந்த தேதியில் இருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?

    ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வருகிற 23-ந்தேதி முதல் ரிசர்வ் வங்கியின் வங்கிக் கிளைகள் அல்லது ஆர்.ஓ.க்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வங்கியின் கிளைகளில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?

    இல்லை. கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

    ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக 20,000 ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?

    கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, அதன்பிறகு இந்த வைப்புத்தொகைகளுக்கு எதிராக பணத்தேவைகளைப் பெறலாம்.

    பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

    இல்லை, பரிமாற்ற வசதி இலவசமாக வழங்கப்படும்.

    மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு, பரிமாற்றம் மற்றும் வைப்புத்தொகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் இருக்குமா?

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய முதியவர்கள் சிரமப்படுவதைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உடனடியாக 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ, மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?

    முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், அல்லது மாற்றுவதற்கும் 4 மாதங்களுக்கும் மேல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப இந்த வசதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2,000 ரூபாய் நோட்டை மாற்ற, டெபாசிட் செய்ய வங்கி மறுத்தால் என்ன நடக்கும்?

    சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர், பதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்கவில்லை என்றால் அல்லது புகார்தாரர் பதில், தீர்வில் திருப்தி அடையவில்லை என்றால், புகார்தாரர் ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு திட்டத்தின் (ஆர்.பி-ஐ.ஓ.எஸ்) கீழ் புகார் அளிக்கலாம்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
    • இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    500 சந்தேகங்கள்

    1000 மர்மங்கள்

    2000 பிழைகள்!

    கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
    • ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ந் தேதி வரை நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என 2000 ரூபாய் நோட்டு மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இதையொட்டி வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    வங்கிகளில் செய்யப்பட்டு வரும் சிறப்பு ஏற்பாடு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வருகிற 23-ந் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.

    முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    கூட்டம் அதிகமானால் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு சாமியானா பந்தல் போட்டு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
    • கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.

    சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.

    இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
    • ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதுடன் அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற செப்டம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    இதையடுத்து நாளை (23-ந்தேதி) முதல் பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
    • உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவது, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்தி மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இது பண நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறை தான். எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான ரூபாய் நோட்டு கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

    ஒரு குறிப்பிட்ட தொடரின் நோட்டுகளை திரும்பபெற்று புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுகிறோம்.

    ஆனால் அவை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக தொடர்கின்றன. அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே வணிகர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டபோது பணத்தின் மதிப்பை விரைவாக நிரப்பும் நோக்கில்தான் ரூ.2000 நோட்டுகள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.

    இன்று போதுமான அளவு மற்ற வகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73 ஆயிரம் கோடியில் இருந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

    அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அவற்றின் வாழ்க்கை சுழற்சியை முடித்துவிட்டன. வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்.

    இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர் உரிய இடவசதியை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். போதுமான அளவு அச்சிடப்பட்ட நோட்டுகள் உள்ளன. ரூபாய் நோட்டை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். அனைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம்.

    வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ரிசர்வ் வங்கி உணரும். 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வணிகர்களிடையே தயக்கம் முன்பும் இருந்தது. தற்போது திரும்ப பெறப்படுவதால் அது அதிகரித்திருக்கலாம்.

    வங்கி கணக்குகளில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு பான் எண் தேவை. இது தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும். இந்திய நாணய மேலாண்மை அமைப்பு மிகவும் வலுவானது.

    2 ஆயிரம் ரூபாய் பணபரிமாற்றம் தொடர்பாக நடந்துவரும் செயல்பாடுகளை வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள். வங்கிகள் தினமும் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும்.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக மிக குறைவாக இருக்கும். புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் வெறும் 10.8 சதவீதம் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மக்களுக்கு சிரமம் இன்றி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.
    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்து இருந்தது. அதன்படி பொது மக்கள் வைத்திருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பொது மக்களுக்கு சிரமம் இன்றி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

    செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். எனினும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றும் போது, பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    வங்கிகளுக்கு அவசர கதியில் செல்ல வேண்டாம். அவசரம் இன்றி, நிதானமாக ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே சமயத்தில் மக்கள் அதிகபட்சம் பத்து ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

    ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பண பரிமாற்றத்திற்கு உகந்தது. இதன் காரணமாக மக்கள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வர்த்தக தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரே சமயத்தில் பத்து ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் பணத்தை வங்கி அக்கவுண்டில் செலுத்தும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எதற்கும் இவ்வாறு செய்யும் முன் KYC விதிமுறைகளை அறிந்து கொள்வது நல்லது.

    ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் போது எவ்வித ஆவணங்களும் தேவைப்படாது. ஆனால், ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிக தொகையை செலுத்தும் போது உங்ளின் PAN எண்ணை வழங்குவது அவசியம் ஆகும்.

    ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள பயனர்கள் எந்த விதமான செல்லான்களையும் வங்கியில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ. 20 ஆயிரம் வரையிலான தொகையை மாற்றிக் கொள்ள பொது மக்கள் செல்லான் எதுவும் பூர்த்தி செய்து வழங்க வேண்டாம்.

    வழக்கமான முறையிலேயே வங்கிகள் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பொது மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றும் நடைமுறை எளிமையாக இருக்க வேண்டும் என்றும் வங்கிகள், பொது மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் ரொக்க பரிமாற்றத்தில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் 10.8 சதவீதமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதால், பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படாது. பெரும்பாலான ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் திரும்ப பெறப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    வங்கிகளிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவோருக்கு வழங்க போதுமான அளவு ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டில் வசிப்போருக்கு இந்த விஷயத்தில் சிறப்பு விதி விலக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், "மக்களின் கடின சூழலுக்கும் தீர்வு அளிக்க வேண்டியது எங்கள் கடமை, ஒட்டுமொத்த வழிமுறையையும் எளிமையாக நிறைவு செய்ய நினைக்கிறோம்," என்ற ரிசர்வ வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
    • இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.

    நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.

    அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.

    எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×